செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

மது-மதி-உலகு - கவிதை

கட்டுரைகள் தவிர்த்து கவிதைகளும் கொஞ்சம் எழுதுவதுண்டு. கவிதைகள் எழுத "தேஜூ உஜ்ஜைன்" என்ற புனைபெயரை உபயோகிப்பது வழக்கம்... சில நாட்கள் முன்பு கவிதையொன்று யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது. அந்தக் கவிதையை அங்கே படிக்க இதை க்ளிக்கவும்...

http://youthful.vikatan.com/youth/NYouth/thejuujjainpoem310710.asp
-----------------------------------------
அங்கே ஏன் போவானேன். இங்கேயே படிக்கலாம்,
-----------------------------------------
மது-மதி-உலகு

புதிதாய் பள்ளி செல்கிறாள்
என் செல்லம்
பெருமிதம் காட்டும் அக்கா.

என்ன கிளாஸ் எடுத்தாங்க,
என்ன சொல்லிக் கொடுத்தாங்க,
எத்தனை ஃபிரண்ட்ஸ் கிடைச்சாங்க..
கேள்வி அம்புகள் வீசும் பாவா.

மாமாவின் கடமையாய்
என்னிடமிருந்து கேள்வி விழுகையில்
"டீச்சர் பேரென்னடா" என்ற என்னிடம்
கெலாக்ஸ் சாப்பிட்டபடி
தலையும் காலும் ஆட்டியபடி
"இன்னும் வைக்கல"
என்று சொல்லிச் சிரிக்கிறாள் மதுக்குட்டி.

-----------------------------------------

-------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------

5 கருத்துகள்: