tag:blogger.com,1999:blog-9161280440878624760.post8806464471373871653..comments2023-07-04T08:39:57.992-07:00Comments on சேலம் எஸ்கா: விதையும் அரசு ஆசிரியர்களும்yeskhahttp://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-34168627861768793882012-02-05T23:49:36.020-08:002012-02-05T23:49:36.020-08:00தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், தகுதி...தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், தகுதியான கம்ப்யூட்டர் ஆசிரியர் இல்லாததால் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.<br /><br />பொதுவாக எந்த பாடத்திற்கும் ஆசிரியர்கள் நியமனம்<br />செய்யும்போது,சம்பந்தப்பட்ட பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பட்டம் B.ED படித்தவர்களைத் தான் நியமிப்பர். ஆனால்,சென்ற அரசு கொள்ளை<br />அடிக்கும் நோக்கத்துடன் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணியில்<br />சேர்க்கும்போது, ஓராண்டு கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருந்தாலே<br />போதும் என்று கூறப்பட்டு பணியமர்த்தப்பட்டனர்.<br /><br />அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் பாடப்பிரிவை மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் தமிழக அரசு ரூ.118 கோடி செலவில், ஆயிரத்து 880 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ஒன்பது கம்ப்யூட்டர், ஒரு லேப்டாப், வி.சி.டி., புரொஜக்டர் வழங்கியுள்ளது.அனைத்து பள்ளிகளிலும்<br />கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைக்கப்பட்டாலும், அதற்கென தகுதியான B.ED<br />கம்ப்யூட்டர் ஆசிரியர்களை இதுவரை தமிழக அரசு நியமிக்கவில்லை. பெற்றோர்<br />ஆசிரியர் கழகம் மூலம் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களில்,பணி நிரந்தரம் செய்ய கடந்த கல்வியாண்டில் தமிழக அரசுமுயற்சி செய்தது.<br /><br />அதற்கு, முறையாக கம்ப்யூட்டர் படிப்புடன் பி.எட்., படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றம்<br />சென்றனர். நீதிமன்றமும், ‘தகுதியுடைய, முன்னுரிமை பெற்ற ஆசிரியர்களையே<br />நியமிக்க வேண்டும்’ என அறிவுறுத்தியது.<br /><br />அதன் பின் தமிழக அரசு கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் செய்ய எவ்வித<br />நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், வரும் ஆண்டுகளில் மேல்நிலை கம்ப்யூட்டர் பிரிவுகளில் மாணவ, மாணவியர் தேர்ச்சி பாதிக்கும் அபாயம்<br />ஏற்பட்டுள்ளது.<br /><br /><br />அரசு பள்ளிகளின் கம்ப்யூட்டர் பிரிவுகளில், வகுப்புக்கு 60 மாணவ,மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வகுப்பு நடத்த, தற்போதுள்ள கம்ப்யூட்டர்கள் போதுமானதாக இல்லை. இருக்கும் கம்ப்யூட்டர்களிலும்,<br />தேவையான சாப்ட்வேர் இல்லை. அவற்றை கற்று தருவதற்கு தகுதியான ஆசிரியர்களும், பள்ளியில் இல்லை.<br /><br />கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமனம் குறித்து, தமிழக அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடாதிருப்பது கவலையளிக்கிறது. தமிழகத்தில் 98 சதவீத<br />பள்ளிகளில், கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ளது. உடனடியாக<br />நியமிக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவதை<br />தவிர்க்க முடியும்.<br />1.தமிழகத்தில், புதிதாக துவக்கப்படும் உயர்நிலைப் மற்றும் மேல் நிலை<br />பள்ளிகளுக்கு, பாட வாரியாக ஆசிரியர் நியமனம் செய்யப்படும் நிலையில்,<br />தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், 2009-10ம்<br />ஆண்டில், 200 நடுநிலைப் பள்ளிகளும், 2010-11ம் ஆண்டில், 344 பள்ளிகளும்,<br />2011-12ம் ஆண்டில், 710 பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளிகளாக தரம்<br />உயர்த்தப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை தவிர்த்து, 4,600க்கும் மேற்பட்ட அரசு<br />உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு<br />வருகின்றன..இந்நிலையில், அனைத்து பள்ளிகளிலும் காலியாக உள்ள பட்டதாரி<br />ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி<br />திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில்,கணிபொறி<br />அறிவியல் பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வாய்ப்பு கொடுத்து,<br />அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் இருக்குமாறு நடவடிக்கை<br />எடுக்க வேண்டும் . . இதற்கேற்ப, தமிழக அரசு, பள்ளிகளில், கம்ப்யூட்டர்<br />ஆசிரியர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்....<br /><br /><br />B.ED COMPUTER TEACHER ASSOCIATION<br />CHENNAI-15dharmapuri-vijayanand.chttps://www.blogger.com/profile/14506153029815916144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-87935579844272740312010-09-09T21:10:54.640-07:002010-09-09T21:10:54.640-07:00ராமலக்ஷ்மி சொன்னது…
உங்க பதிவைப் போலவே பதிலும் சு...ராமலக்ஷ்மி சொன்னது… <br />உங்க பதிவைப் போலவே பதிலும் சுவாரஸ்யம். தெளிவு. நல்ல தகவல்கள். கல்வியாளர் சொன்னது தனியார் பள்ளிகள் குறித்ததாக இருக்கலாம்தான். விரிவான விளக்கங்களுக்கு நன்றி எஸ்கா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-67389639409557382882010-09-09T21:09:53.596-07:002010-09-09T21:09:53.596-07:00மன்னிக்கவும். தங்களது கருத்தில் நான் முரண்படுகிறேன...மன்னிக்கவும். தங்களது கருத்தில் நான் முரண்படுகிறேன். எனது கட்டுரையில் ஏதேனும் விஷயங்களைச்சேர்த்தால் அதை சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து சரியான தகவலைத் தர முயற்சிப்பதே வழக்கம். <br /><br />//எல்லாத் துறைகளிலும் சம்பளங்கள் கூடி விட்டிருக்க ஆசிரியர் தொழிலில் இன்றளவும் சரியான ஊதியம் இல்லாததால் ஆசையுடன் இத்தொழிலைத் தேடி வருபவர் குறைந்து விட்டனர். //<br />அந்தக் கல்வியாளர் சொன்னது தனியார் பள்ளிகளில் இருக்கலாம். என்னுடைய வேலை தினசரி ஒரு தனியார் பள்ளிகளுக்குச் செல்வது போன்ற வேலை. நான் சந்திக்கும் பள்ளிகளில் வெறும் ஆயிரத்தைநூறு ரூபாய், மூவாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்கும் ஆசிரியர்களை எனக்குத் தெரியும். <br /><br />//எந்த வேலையுமே கிடைக்காதவரே பி.எட் படிக்கவே வருகின்றனர் // எண்பது சதவீதம் உண்மை. என்னுடன் சுற்றிக்கொண்டிருந்த எல்லா தெள்ளவாரிகளும் பி.எட் படித்துக்கொண்டிருக்கின்றன இப்போது. <br /><br />//அவர்களும் குறைந்த ஊதியம் என்கிற மனத்தாங்கலுடனேயே //<br />முற்றிலும் தவறு. என்னுடைய நண்பன், மாதம் பதினேழாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த தனியார் வேலையை உதறி விட்டு பி.எட் படித்துக்கொண்டிருக்கிறான், இதில் அதைவிட சம்பளம் அதிகம் என்பதால். <br /><br />//அரசு பள்ளிகளில் சம்பளம் மிகக் குறைவென்பது அனைவருக்கும் தெரிந்ததே// <br />நான் ஆங்கில இலக்கியம் படித்தவன். அதனால் என் நண்பர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் ஆசிரியப்பணியில் இருப்பவர்கள். இப்போது என் மற்றொரு நண்பனுக்கு போன் செய்து கேட்டேன். அரசுப்பள்ளிகளில் பி.எட் கட்டாயமாக்கப்பட்டு வருகிறதாம். பி.எட் முடித்த ஒரு ஆசிரியரின் ஆரம்பச்சம்பளம் (24, 25 வயது) பதினேழாயிரமாம். பள்ளியையும், ஊரையும் பொறுத்து இருபதைத்தொடுகிறதாம். அதனால் அவனும் பி.எட் படிக்கிறானாம். <br /><br />(தயவு செய்து எந்தச் சம்பளத்தையும் ஐ.டி-யுடன் மட்டும் ஒப்பிட்டு விட வேண்டாம், அது அலாவுதீன் பூதம், சாதாரண தனியார் வேலைகளுடன் ஒப்பிடும் போது இந்தச் சம்பளங்கள் மிக மிக அதிகம்...)yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-10444788587136493072010-09-09T21:08:26.116-07:002010-09-09T21:08:26.116-07:00ராமலக்ஷ்மி சொன்னது…
நிகழ்ச்சியை நான் பார்க்கவில்...ராமலக்ஷ்மி சொன்னது… <br /><br />நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. உங்கள் கருத்துக்களுடன் அழகாய் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். 'விதை' பல விருட்சங்களுக்கு வித்திட வாழ்த்துவோம்.<br /><br />//யம்மோவ்?//<br /><br />“எல்லாத் துறைகளிலும் சம்பளங்கள் கூடி விட்டிருக்க ஆசிரியர் தொழிலில் இன்றளவும் சரியான ஊதியம் இல்லாததால் ஆசையுடன் இத்தொழிலைத் தேடி வருபவர் குறைந்து விட்டனர். எந்த வேலையுமே கிடைக்காதவரே பி.எட் படிக்கவே வருகின்றனர். அவர்களும் குறைந்த ஊதியம் என்கிற மனத்தாங்கலுடனேயே சரியாக வேலையில் கவனம் செலுத்துவதில்லை. இந்த நிலை நீடித்தால் வருங்கால சந்ததியரை சிறப்பாக உருவாக்குவதென்பதே கேள்விக்குறிதான்”-நான் சொல்லவில்லை. ஆசிரியர் தினத்தன்று சேனல் செய்திக்கு பேட்டியளித்த ஒரு கல்வியாளர் சொன்னது.<br /><br />நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் ஒரு பக்கமிருக்கட்டும். காலம் மாறி விட்டது. மக்களின் வாழ்க்கைமுறையும் தேவைகளும் அதிகரித்தும் விட்டது. ஆரம்பப் பள்ளி முதல் +2 வரையிலான கல்விக்காலமே மாணவருக்கு ஃபவுண்டேஷன். அரசு பள்ளிகளில் சம்பளம் மிகக் குறைவென்பது அனைவருக்கும் தெரிந்ததே. அர்ப்பணிப்பும் உணர்வு ஆசிரியர்களிடம் குறைந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாமென்ற வாதம் சிந்திக்க வைக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-38331428974163639812010-09-09T02:24:21.898-07:002010-09-09T02:24:21.898-07:00NALLA PATHIVU
NADESAN
DUBAINALLA PATHIVU<br /><br />NADESAN<br />DUBAINADESANhttps://www.blogger.com/profile/05885590807242142964noreply@blogger.com