வியாழன், 2 பிப்ரவரி, 2017

ஒரு உதவி தேவை - பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக்கான பேனாக்கள் வழங்க.

நேற்று இரவு என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தப் பதிவு இடப்பட்டது.

ஒரு உதவி தேவை.

கோவை அருகே உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர்கள் 256 பேர் இந்த வருடம் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுத இருக்கிறார்கள். பலரும் ஒரு நல்ல பேனா வாங்கக் கூட வசதி இல்லாத மாணவர்கள்.

பள்ளியின் கோரிக்கையின் பேரில் அவர்கள் அனைவருக்கும் "இங்க் பேனா - ஆளுக்கு ஒன்று" வழங்க இருக்கிறோம். நான் உறுப்பினர் மற்றும் செயலாளர் ஆக உள்ள "ஜே.சி.ஐ கோயம்புத்தூர் ஆனந்தம்" தன்னார்வத் தொண்டு அமைப்பு மூலம் இந்த முயற்சியை முன்னெடுக்கிறோம்.

20 ரூ மதிப்புள்ள பேனா என்றால், இதற்கான செலவு சுமார் ஆறாயிரம் ரூபாய் ஆகலாம். அதை உறுப்பினர்களான எங்களாலேயே தந்து விட முடியும் என்றாலும் இந்த வருடம் முழுவதும் மாதா மாதம் இதே போன்ற திட்டங்கள் உள்ளதால் பிப்ரவரி மாதத்திற்கான இந்த நற்செயலில் பங்கு பெற உதவிகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்கினை "ஜே.சி.ஐ கோயம்புத்தூர் ஆனந்தம்" வழங்கும். மீதி இரண்டு பங்குத் தொகைக்கு உதவ விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். அதிகம் வேண்டாம். ஒன்று அல்லது இரண்டு பேர் முன்வந்தால் போதும்.

குறிப்பு - நோ ஊழல், நோ பஞ்சாயத்து, முழுக்க முழுக்க வெளிப்படைத் தன்மையுடன் உதவுபவர்களை நேரடியாக அந்தப் பள்ளிக்கே இணைத்து வைக்கிறோம். சந்தேகமில்லாமல் உதவி செய்யலாம்.

பிற விபரங்கள்தேவைப்பட்டால் கேட்கலாம்.

பிற்சேர்க்கை - உதவுவோர் எண்ணிக்கை நான்கு, ஐந்து எனக் கூடியதால் அவர்களது விபரங்கள் ஃபேஸ்புக் பேஜில் குறிப்பிடப்பட்டன. பணம் வசூலித்து உதவிகள் செய்து முடித்ததும் அவர்களது அனைத்து விபரங்களும் இந்தப் பக்கத்தில் பதிவு செய்யப்படும். 

தேவையான டாகுமெண்டுகள் உருவாக்கப்பட்டு அவை அனைத்தும், அனைவருக்கும் மெயில் மூலம் அனுப்பப்படும்.