செவ்வாய், 22 செப்டம்பர், 2015

அமிதாப் - ரஜினி - ட்விட்டர் யுத்தம்

அமிதாப்பின் ட்விட்டர் ஃபாலோயர்ஸ் 1 கோடியே எழுபது இலட்சம் பேர். ஆனால் ரஜினியின் ஃபாலோயர்ஸ் வெறும் 23 இலட்சம் பேர் என்றும் அமிதாப்பின் எண்ணிக்கையை ரஜினியால் தொடக் கூட முடியாது என்றும் ஒரு மின் பத்திரிகை கட்டுரை எழுதியிருக்கிறது. "அட வெண்ணைகளா, யாரை யார் கூட, எதுக்கு கம்பேர் பண்றதுன்னு கூடத்தெரியலைன்னா நீங்கள் - லாம் எதுக்கு எழுத வர்றீங்க?" என்றுதான் எனக்குத் தோன்றியது
.
இந்தியா முழுக்கப் பரவியுள்ள ஹிந்தி சினிமாவில் நடிக்கும் ஒரு நபரின் ஃபாலோயர்ஸையும், மாநில மொழிகளில் ஒன்றான தமிழில் மட்டுமே நடித்து இந்தியா முழுவதும் ஃபேமஸ் ஆகியிருக்கும் ஒருவரையும் ஒப்பிடுவது சரியா? அப்படிச் செய்வதென்றால் தெலுங்கில் மட்டும் நடிக்கும் சிரஞ்சீவி, மலையாளத்தில் மட்டும் நடிக்கும் மோகன்லால், கன்னடத்தில் மட்டும் நடித்த ராஜ்குமார் இப்படி யார் கணக்கையாவது எடுத்து ஒப்பிட்டுப் பாருங்கள்
.
அப்படிப் பார்த்தால் 30 மாநிலங்கள் என்று கணக்கு வைத்து அமிதாப் ஃபாலேயார்ஸ் எண்ணிக்கையை வகுத்தால் ஒரு மாநிலம் அதாவது தமிழ்நாடு கணக்குக்கு வெறும் 5 இலட்சத்து 66 ஆயிரம் ஃபாலோயர்ஸ் மட்டும் தானே கணக்கில் வருகிறது? அப்படிப் பார்த்தால் ரஜினி தான் அமிதாப்பை விட லீடிங்
வட இந்தியாவில் தெருவில் திண்பண்டம் விற்பவன் கூட இன்டர்நெட் வசதி உள்ள மொபைல் போன் வைத்திருப்பான். ட்விட்டர் அக்கவுண்ட் இருக்கும் வாய்ப்பு அதிகம். அமிதாப் ஃபாலோ செய்வான். ஆனால் தமிழ்நாட்டில் பல பேருக்கு, ஏன் பல ரஜினி ரசிகர்கள், அல்லது பெரிய வேலையில் உள்ளவர்கள், ஏன், பெரிய அரசு அலுவலர்களிடம் கூட ஸ்மார்ட் போன் இல்லை. அவர்களுக்கு இன்னும் பழகவில்லை. ட்விட்டர்னா ஸ்கூட்டரா என்று கேட்கும் அளவுதான் அவர்களுக்கு நெட்-டறிவு. இதிலே ரஜினிக்கு ஃபாலோயர்ஸ் இல்லை, கம்மி என்று அடித்து விடுவதெல்லாம் காலக் கொடுமை.
 .
ட்விட்டர் அக்கவுண்ட் இருக்கும் என்பது மட்டும் என் அதீத கற்பனையாக இருக்கலாம். ஆனால் ஸ்மார்ட் போன் எண்ணிக்கை அளவு அங்கே மிகவும் அதிகம். இங்கே கூட (கோவை மற்றும் மற்ற ஊர்கள்) பிழைப்புக்காக வந்திருக்கும் வட இந்திய இளைஞர்கள் ஸ்மார்ட்போன்களை நிறைய உபயோகிக்கிறார்கள். இவர்களுக்காகவே செகண்ட் ஹாண்ட் செட்டுகள் நிறையக் கை மாறுகின்றன. இரண்டாயிரத்தில் இருந்தே கிடைப்பதால் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை போன் மாற்றுகிறேன் என்று ஒரு இளைஞன் சொன்னான். அதே அங்கு. நினைத்த போது வாங்கலாம். மாற்றலாம்
 .
என் மாமியார் ஊர் மும்பை. அங்கே செல்லும் போது நிறைய கவனித்திருக்கிறேன். ஒருத்தர் விடாமல் அனைவர் கையிலும் ஸ்மார்ட் போன் பார்த்திருக்கிறேன். மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு பெரும் விளம்பரத்துடன் ஸாம்ஸங் காலக்ஸி எஸ் த்ரீ ரிலீஸ் ஆகி மூன்றாவது நாள், நான் சாலையில் கடந்து போன பத்தில் ஒருவர் கையில் அது இருந்ததைப் பார்த்து ஆச்சரியத்தில் வியந்திருக்கிறேன். மனைவியிடம் கேட்டால், இங்கே இதெல்லாம் ஸ்டேட்டஸ் சிம்பள். நானும் வச்சிருக்கேன் என்பது தான் அவர்கள் எண்ணம்
 .
இன்னோரு முக்கிய விஷயம் விலைவாசி மற்றும் காஸ்ட் ஆஃப் லிவிங். நம்ம ஊர் அரிசி பருப்பு, வண்டி, போன் விலைகள் போன்றவை இங்கேயும் அங்கேயும் ஒன்றா
 .
பள்ளி ஆசிரியைகள் தம் ஸ்மார்ட் போனிலேயே அட்டென்டென்ஸ் மார்க் செய்யும் விதத்தில் ஆன்டிராய்டு அப்ளிகேஷனை வெளியிட்ட என் முந்தைய கம்பெனியின் சிஇஓ இங்கே வந்தபோது இங்கே உள்ள பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியைகள் பலர் சாதாரண போன் கூட உபயோகிக்காததைப் பார்த்து வியந்தார். in north india, even a rikshawala has a smartphone yar என்றார். இங்கே போன் கூட உபயோகிக்காதவர்கள், எப்போ ஸ்மார்ட் போன் வாங்கி, எப்போ நெட் போட்டுப் பழகி, எப்போ நம்ம புராடக்டை அறிமுகப்படுத்துறது? என்று சலித்துக் கொண்டார்
 .
அவரிடம் நான் - "சார், இங்கே டவுன் தாண்டிய பள்ளிகளில் ஆசிரியைகள் வாங்கும் ஆரம்பச் சம்பளமே 3000, 4000 தான். ஆணாதிக்கக் குடும்பச் சூழ்நிலை போன்றவை காரணமாக அவர்கள் ஸ்மார்ட்போனை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் நார்த் இல் விலை வாசி அதிகம் என்பதால் அவர்கள் ஆரம்பச் சம்பளமே 10000, 12000 மாவது இருக்கும். வீட்டு வாடகையே 10000 ல் ஆரம்பிக்கும் பெருநகரங்களில் அதுவே குறைவு தான். ஆனால் ஒரு ஸ்மார்ட் போனின் விலையோ வடவர்களுக்கும், தென்னவர்களுக்கும் ஒன்றுதான். இது அபத்தம் இல்லையா? அவர்கள் ஒரு போனை ஈஸியாக வாங்கி விட முடியும். இங்கே அந்த பெண் ஆசிரியருக்கு சம்பளத்தில் இருந்து 500 ரூபாய் பாக்கெட் மணியாகக் கிடைத்தாலே அதிகம்" என்றேன். "சரிதான்" என்று ஒப்புக் கொண்டார்
 .
ஆறு வருடங்கள் முன்பு தமிழ்நாட்டில் 14 ரூபாய் விலையுள்ள 300 மில்லி பெப்ஸி டின் ஒன்றை குர்காவன் மால் ஒன்றில் 45 ரூபாய் என்று பார்த்து அதிர்ந்தேன். அந்த அளவு விலைவாசியுள்ள ஊரில் உள்ளவனுக்கு அதற்குத் தகுந்தாற்போல் சம்பளம் வாங்க வேண்டுமல்லவா? அவனைப் போய் நம்முடன் ஒப்பிட்டால் எப்படி
 .
இதே உதாரணம் தான் ஸ்டாக் மார்க்கெட்டில் ஷேர்களின் விலைக்கும். இங்கே என் திறமைக்கும் வயதுக்கும் வருடச் சம்பளமாக அதிக பட்சம் 6 இலட்சம் வாங்க முடியும் என்றால், என்னைப் போன்ற என் நண்பர் ஒருவர் அங்கே குறைந்த பட்சமே 12 இலட்சம் வாங்குகிறார். காரணம் காஸ்ட் ஆஃப் லிவ்விங். அவருக்கு அந்த அளவுக்குச் செலவு இருக்கிறது. ஆனால் நான் ஸ்டாக்-களில் இன்வெஸ்ட் செய்ய விரும்பினால், உதா - சுஸ்லான் எனர்ஜி ஷேரின் விலை எனக்கும் ரூ.22 தான். என் நண்பருக்கும் அதே தான். ஆனால் அவரின் இன்வெஸ்ட்மெண்ட் அளவு பெரிதாகும். நான் போன் வாங்க நினைத்தால் எனக்கும் 64000 தான். அவருக்கும் அதே 64000 தான்
 .
இங்கே ஒரு அபார்ட்மெண்டின் விலை 30 இலட்சம், பெங்களூரில் 60 டு 70 இலட்சம். மும்பையில் 10 கோடியில் ஆரம்பிக்கிறது (இது பற்றிய என்.சொக்கன் அவர்களின் கட்டுரை ஒன்றைப் படித்தேன்) ஒரு பிளாட்டின் விலை. இது எதுவுமே தெரியாமல், எதைப்பற்றியும் யோசிக்காமல் இவ்வளவு முரண்பாடுகள் இருக்கும் போது மொட்டையாக ரஜினியையும், அமிதாப்பையும் கம்பேரிசன் செய்வது தான் கடுப்பளிக்கிறது

வியாழன், 10 செப்டம்பர், 2015

ரேஷன்

எங்க ரேஷன் கடை வாரம் ஒரு நாள் லீவாம். ஒரே கடையில் ரெண்டு ஏரியா பார்ப்பதால் அவர்களுக்கு மூன்று நாள், எங்களுக்கு மூன்று நாளாம். அது போக மாதக் கடைசியில் இரண்டு நாட்கள் (அவர்கள் டாகுமெண்டுகளை எடுத்துக்கொண்டு தாலுகா ஆபீஸ் போய்விடுவதால்) சப்ளை கிடையாதாம். புரூஃப் செக்கிங், புது ஸ்லிப் ஒட்டுவது போன்று ஸ்பெஷல் வேலைகள் வந்து விட்டால் அன்றும் சப்ளை கிடையாதாம். இதெல்லாம் போக மிச்சம் இருக்கும் நாட்களில் என் வேலையற்ற நாளும் மேட்ச் ஆனால் போய்ப் பொருள் வாங்கிக் கொள்ளலாமாம். அது என்னென்ன என்றால்....
.
எங்க கார்டுக்கு மண்ணெண்ணெய் கிடையாதாம். இலவச அரிசி கிடையாதாம். இலவச மிக்ஸி கிடையாதாம். இலவச கிரைண்டர் - நோ. இலவச ஃபேன் - அதுவும் நோ. ஏண்டான்னா? உங்களுது வெள்ளை கார்டு. அப்டின்னா? வெள்ளையா இருக்கும். ரைட்டு. வருஷம் தவறாத பைசா விடாம அரசாங்கத்துக்கு டேக்ஸ் கட்டுறேன். எனக்கு ஏன் தரமாட்டேங்கிறீங்க? இலட்சக் கணக்குல சம்பாதிக்கிற கட்சி ஆளுங்க ஒரே வீட்ல நாலு "அம்மா" பேன் வச்சி சுத்த உட்றானுங்க? இது என்ன நியாயம்
.
எங்க கார்டு பேரு சக்கரை கார்டாம். அதுக்கு அஞ்சு கிலோ சர்க்கரை தருவாங்களாம். எங்க வீட்டுக்கு ரெண்டு கிலோவே அதிகம். அஞ்சு கிலோ சர்க்கரையை வாங்கி நான் கேசரி கிண்டி திங்கவா? அவை போக ஒரு கிலோ உளுந்து, ஒரு கிலோ துவரை, ஒரு லிட்டர் பாமாயில் - அது குருடாயிலை விட கொடூரமா இருக்கு. அதுல எது செஞ்சாலும் கசக்குது. உளுந்து, துவரை (அதுவும் லோ க்வாலிடி பட்டை துவரை) விலை வெளி மார்க்கெட்டில் அதிகமென்பதால் இப்போதைக்கு எனக்கு என் ரேஷன் கார்டினால் பிரயோஜனமானவை அவை மட்டுமே
.
சில வங்கிகளிலும், சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிலும் ரேஷன் கார்டை இப்போது புரூஃப் ஆக ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்களாம். அப்புறம் என்ன டேஷூக்கு எனக்கு ரேஷன் கார்டு


செவ்வாய், 8 செப்டம்பர், 2015

ஹெல்மெட் இஷ்யூஸ்

வண்டி ஓட்டுகையில் விடாமல் தினமும் ஹெல்மெட் அணிகிறேன் என்கிற அனுபவத்தில் திமிரில் தான் நான் இதைச் சொல்கிறேன்.

ஹெல்மெட் அணிவது நிஜமாகவே ரொம்ப ரொம்ப சேஃப்டி. எனக்கு கண்கள் கொஞ்சம் சென்சிடிவ். மேலும் உணர்ச்சிகளும். அதாவது ஒரு நண்பருடன் பைக்கில் சென்றால் மண், குப்பை, தூசி, எரிச்சல், என எல்லாவற்றையும் அவர் உணர்வதை விட நான் அதிகமாக உணர்கிறேன். கண்களில் மண் விழுந்து அதனால் ஏற்படும் பிரச்சினைகள் ஹெல்மெட்டினால் கண்டிப்பாகக் குறையும்.

ஒருமுறை மண் துகள்கள் பட்டு நான் கண்ணை கசக்கி என் கண்களில் உள்ள ஒரு சிறு நரம்பு நசுங்கி ஒரு சொட்டு ரத்தம் (கண்ணுக்குள்) வெளிவந்து அதனால் நான் பட்ட அவஸ்தை சுமார் 20 நாட்கள். பெரிய பிரச்சினை ஏதேனும் ஆகியிருந்தால் ஆபரேஷன் அளவு ஆகியிருக்கும் என்றார் டாக்டர். ஹெல்மெட் போட்டு அதோட வைஸரை இறக்கி விட்டு வண்டி ஓட்டுங்க. அதான் எப்பவும் சேஃப்டி என்றார் அவர்.

நெகடிவ் என்று பார்த்தால் - "முடி கொட்டும்". ஹெல்மெட் போடாட்டாலும் கொட்டும். அதற்கு வயது, கெமிக்கல்ஸ், உணவு, கிளைமேட், சுற்றுப்புற தூசி, அலர்ஜி என பல காரணங்கள். ஹெல்மெட் அல்ல.

"வியர்வை உள்ளே நிறைய ஊறும்" - இது மறுக்க முடியாத உண்மை. ஆனால் வியர்வையால் முடி கொட்டுமே எனாதீர்கள். விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்களை ஞாயிற்றுக்கிழமை கிரவுண்டுக்குப் போய் பாருங்கள். தலையிலிருந்து வியர்வை வழிய வழிய விளையாடுவார்கள். அவர்களுக்கு முடி கொட்டுமா? "எஸ்" என்றால் அது ஹெல்மெட்டால் அல்ல. "நோ" என்றால் அப்போ ஹெல்மெட்டுக்கும் வியர்வைக்கும் சம்பந்தமே இல்லை.

ஆனால் வேலை விஷயமாகப் போகும் இடங்களில் போய்ச் சேர்ந்த பிறகு இந்த வியர்வையினால் உங்கள் ஹேர்ஸ்டைல் கண்டிப்பாக மாறி இருக்கும். கொஞ்சம் சங்கடம் தான். ஒரு ஐடியா. போகும் இடத்திற்கு கொஞ்ச தூரத்தில் நிறுத்தி ரிலாக்ஸ் செய்து கொண்டு போங்கள்.

இன்னொன்று - உங்கள் மண்டை ரொம்ப சென்ஸிடிவ் என்றால் வியர்வையால் நன்றாக அரிக்கும். அதை மட்டும் ஒன்றும் செய்ய இயலாது.

"ஹெல்மெட் வெயிட் அதிகம்" அப்டிலாம் ஒண்ணும் கிடையாது. நானும் வச்சிருக்கேன் என பேருக்கு ஹெல்மெட் வைத்திருக்கும் சிலரை எனக்குத் தெரியும். ஹெல்மெட்டை உதறினால் உள்ளிருந்து கரப்பான் பூச்சி ஓடும். அப்படி இல்லாமல் புது ஹெல்மெட்டை இன்னும் ஒரு 200 ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்து ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் பிராண்டட் ஹெல்மெட்டாக வாங்கினால் வெயிட் லெஸ் ஆகக் கிடைக்கிறது. தலையில் இருப்பதே தெரியாது.

பின்னாலும், அருகிலும் வரும் வண்டிகளின் சத்தம் கேட்கவில்லை என்பதெல்லாம் சும்மா. எனக்கு நன்றாகக் கேட்கிறது. தெளிவாகக் கேட்கிறது. ஒருவேளை கல்லு மாதிரி உள்ள பழைய ஹெல்மெட் வைத்திருப்பவர்கள் சொல்வதாக இருக்கும். ஒரு ஹெல்மெட்டில் எல்லா பக்கமும் திறப்பு இருக்கிறது. ஒளி நுழைவது தான் குறையுமே தவிர ஒலி நன்றாகவே நுழையும். டிஸ்கவரி - யில் "சயின்ஸ் ஆஃப் ஸ்டுப்பிட்" பாருங்கப்பா.

ஆனால் எல்லாவற்றையும் மீறி என்றாவது ஒருநாள் நாம் ஒரு விபத்தைச் சந்தித்து தப்பித்தால் (டச் உட், நடக்கக் கூடாது) அப்போ தெரியும் ஹெல்மெட்டின் அருமை. உசுரு பெருசா மசுரு பெருசா?


காது மிஷின் வைத்திருப்பவர்கள், கொண்டை வைத்த பூசாரிகள் போன்ற "ப்ராக்டிகல் டிஃபிகல்டீஸ்" கொண்டவர்களுக்கு ஹெல்மெட் பிரச்சினை உண்டு. அது தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம்.