29 ஜனவரி 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது
எந்த ஒரு விஷயத்தையும் பார்த்த உடன் முன்முடிவுகளுடன் அணுகக் கூடாது என்பது அனுபவ வாக்கு. ஒரு நிகழ்வை பார்த்த உடன் முடிவெடுப்பது பாமரர் பழக்கம்.
எந்த ஒரு விஷயத்தையும் பார்த்த உடன் முன்முடிவுகளுடன் அணுகக் கூடாது என்பது அனுபவ வாக்கு. ஒரு நிகழ்வை பார்த்த உடன் முடிவெடுப்பது பாமரர் பழக்கம்.
29 ஜனவரி 2017 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
பெங்களூருவில் உள்ள எனது நண்பருடைய நண்பருடைய நண்பருடைய நண்பருடைய நண்பர் ஒருவர் தனது நிறுவனம், தான் செய்யும் சேவை பற்றி நெகடிவ் ஆன இரண்டு செய்திகள் வாட்ஸ் அப்பில் பரவுவதை கண்டுபிடித்தார். அதனால் அவரது பிஸினஸ் பாதிக்கப்பட்டது. அதை அனுப்பியவன் யாரென்று உடனடியாகக் கண்டுபிடித்தாயிற்று. இது மூன்று மாதங்களுக்கு முந்தைய கதை. அதுவரை ஓகே.
தற்போது ஒரு அதிர்ச்சியான, ஆச்சரியமான விஷயம். அரசு சைபர் கிரைமுக்கு அப்ளை செய்து, மேலும் ஒரு தனியார் டெக் நிறுவனத்துடன் சேர்ந்து, கொஞ்சம் பணமும், 45 நாட்களும் செலவு செய்து இதற்கு மூல காரணம் யார் என்று கண்டுபிடித்து விட்டார்கள். (அது அவரது பிஸினஸ் எதிரி) இதுவும் கூட ஓகே.
அடுத்த பாயிண்ட் தான் மிக முக்கியம். கடந்த மூன்று மாதமாக யார் யார், எங்கெங்கே, யாருக்கு, எப்பெப்போ, எந்தெந்த குரூப்புக்கு அந்த மெஸேஜை ஷேர் செய்திருக்கிறார்கள் என்று ஆதி முதல் அந்தம் வரை (போன் பில் போல) ஒரு நம்பர் விடாமல் அத்தனை நம்பரும் இப்போது கிடைத்து விட்டனவாம். இப்போது அவர் நினைத்தால் அத்தனை பேர் மேலும் ஆக்ஷன் எடுக்க முடியும். சட்டப்படி தவறான செய்தியைப் பரப்பிய அனைவரும் குற்றவாளி.
ஒரு சாதாரண நிறுவனத்தாலேயே இந்த அளவுக்கு முடியும் என்றால் டாட்டா, பிர்லா, கோலா, மேகி போன்ற பெரு நிறுவனங்களால் எந்த அளவுக்கு தோண்டித் துருவ முடியும்? வாட்ஸ் அப்பில் தேவையில்லாமல் எல்லாவற்றையும் ஷேர் செய்து நாளை பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாதீர்கள். ஜாக்கிரதை.
1. வாட்ஸ் அப்பில் வருபவை 95 சதவீதம் பொய்களே (உதா - அப்துல் கலாம் சொன்ன தத்துவம், தேசிய விளையாட்டு ஹாக்கி போன்றவை)
2. வாட்ஸ் அப்பில் வருவதை நம்பி முடிவு எடுக்காதீர்கள் (உதா - தடுப்பூசி, அனிருத்)
3. வாட்ஸ் அப்பில் வருவதை நம்பி ஷேர் செய்யாதீர்கள் (முக்கியமாக குரூப்புகளுக்கு)
4. வாட்ஸ் அப்பில் ஷேர் செய்தால் நம்மை கண்டுபிடிக்க முடியாது என நினைக்காதீர்கள் (டெக்னாலஜி டைனோசர் வேகத்தில் வளர்ந்து விட்டது)
5. ஒரு செய்தி தவறான செய்தியாக இருந்து அதை நீங்கள் ஷேர் செய்திருந்தால் நீங்களும் அதற்குப் பொறுப்பு (சட்டப்படி உங்கள் மேஸ் கேஸ் போடலாம்)
6. ஆதாரம் இல்லாத எதையும் ஷேர் செய்யாதீர்கள். நீங்கள் ஷேர் செய்யும் செய்திக்கு யாரேனும் ஆதாரம் கேட்டால் நீங்கள் இன்னொருத்தரைக் கை காண்பிக்க முடியாது.
உங்கள் நலன் கருதி.
டிஸ்கி - உண்மையான தமிழனாக இருந்தால் இதை ஷேர் செய்யவும்.
20 ஜனவரி 2013 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
முகநூல், டுவிட்டர், ப்ளாக் என்று எந்த இடத்திலும் சரளமாகப்புழங்கும் வார்த்தைகளில் ஒன்று "தங்கமணி", ஆன்லைனில் தினசரி சரளமாகப்புழங்கும் பத்தில் ஏழு பேருக்கு "தங்கமணி" என்ற வார்த்தைக்கு சட்-டென்று அர்த்தம் புரிந்து விடுகிறது. ஆனால் "தங்கமணி" என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாதவர்களும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள், இன்னும் கல்யாணம் ஆகாத கட்டிளம் காளைகளாகவோ, அல்லது ஆங்கில மீடியத்தில் படித்து அவ்வப்போது ஒன்றிரண்டு தமிழ்ப்படங்களை மட்டும் பார்க்கும் என்.ஆர்.ஐ - களாகவோ, அல்லது தமிழ்ப்படங்களை ரெகுலராகப் பார்க்காதவர்களாகவோ, அல்லது பழைய படங்களை சீன் பை சீன் பார்த்திராத புதிய தலைமுறையாகவோ, முக்கியமாக ஜனகராஜைத்தெரியாதவர்களாகவோ இருக்கலாம்.
20 ஜனவரி 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
Ilangovan Balakrishnan தன் முகநூல் சுவற்றில் பதிந்திருந்தார்.
16 ஜனவரி 2017 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
சீர்காழியில் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன். "க்ளாஸ் ரூம் அப்சர்வேஷன்" வேலை. மாலை பள்ளி முடிந்ததும், வேன் ஏறுவதற்காகக் காத்திருந்த ஒரு வரிசையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். உற்சாகமாகப் பேசிக்கொண்டும், ஆடிக்கொண்டும் நகர்ந்து கொண்டிருந்தார்கள். மறுநாள் துவங்கி நான்கு நாட்கள் விடுமுறை உற்சாகம். அதில் ஒருவன், சத்தமாக "வரலாம் வா, வரலாம் வா, பைரவா" என்று துவங்கி மூன்று, நான்கு வரிகளை ஸ்பஷ்டமாகப் பாடினான். கூடவே இன்னும் நான்கு பேர் கோரஸ். "படம் பாத்துட்டியா?" (அன்றைக்குத் தான் ரிலீஸ், சும்மா) கேட்டேன். "ஓ, மூணு தடவை பார்த்துட்டேன்" என்றான். (பதறாதீர்கள், அவன் டிரெயிலரைச் சொன்னான்). ஆறு வயது இருக்கலாம். "என்ன படிக்கிறே?" என்றேன். "கிரேடு 1" என்றான்.
அன்று மதியம் அதே பள்ளியில் நான்காம் வகுப்பில் அமர்ந்திருந்தேன். அறிவியல் பாடம். "விலங்குகள் எப்படி நடந்து கொள்கின்றன?" என்பது போன்ற பாடம். ஒன்னொன்றாக டீச்சர் நடத்திக் கொண்டிருக்க, கொஞ்சம் போரடித்ததால், "குரங்கு எப்படி மரத்துக்கு மரம் தாவும்?" என்ற கேள்வியின் போது நான் உள்ளே நுழைந்து "ஜங்கிள் புக் யாரெல்லாம் பாத்தீங்க?" (மோக்லியை, குரங்குகள் தூக்கியபடி மரத்திற்கு மரம் எப்படி தாவின என்பது என் கேள்வி) என்றதும் "சார், சார், சார், சார்" என்று ஒரே சத்தம். 99.99 சதம் பேர் கை தூக்கினார்கள்.
அதற்கு இரு நாட்களுக்கு முன் மாயவரத்தில் உள்ள ஒரு பள்ளியில் "நீட்" எக்ஸாம் பற்றிய ஒரு அறிமுக வகுப்பில் பேச அழைத்திருந்தார்கள். மாணவர்கள், அவர்தம் பெற்றோர் என்று சுமார் 600 பேர். சுமார் ஒரு மணி நேரம். பேசிய பிறகு, பெற்றோர் உட்பட பலரும் நெருங்கி வந்து பேசிச் சென்றார்கள். நடுநடுவே கொஞ்சம் மோடிவேஷன் வகுப்பு, கொஞ்சம் டெக்னாலஜி என்றெல்லாம் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்ததில் மாணவர்களும் நெருங்கி விட்டார்கள். அதில் ஒரு ஆறாம் வகுப்பு மாணவன் கூடவே சின்னச் சின்ன உதவிகள் செய்து கொண்டிருந்தான். கிளம்பும் போது "ஸ்மார்ட் போன் வச்சிருக்கியா?" என்றதற்கு "ம்" என்றவன், "சார், சல் மார் பாட்டு இருந்தா அனுப்புங்க சார்" என்றான்.
இவற்றில் உங்களுக்கு என்னென்ன விஷயங்கள் புரிகின்றன?
18 ஜனவரி 2017 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
யூபர் (ஊபர்?) டாக்ஸியில் ஒரு சரியான இன்வாய்ஸ் பெறுவது பெரும் தலைவலியாக உள்ளது. PDF தான் சரியான ஃபார்மேட். ஆனால் இவர்கள் இன்வாய்ஸை ஜி மெயிலின் கன்டென்ட் பகுதியில் பொதிந்து அனுப்புகிறார்கள். அதுவும் சிங்கிள் jpg இல்லை. மேப் ஒரு பார்ட், அதன் கீழ் டெக்னிகலி வேறொரு பார்ட், அதன் கீழ் ஒரு பார்ட் என இருக்கிறது. jpg யாக இருந்தாலாவது ரைட் க்ளிக் செய்து சேவ் செய்யலாம் என்று பார்த்தால் மேப் பகுதி கூகிள் மேப்புக்கு செல்கிறது. கீழ்ப்பகுதி வெப் பேஜ்-ஐயே சேவ் செய்யச் சொல்கிறது.
18 ஜனவரி 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது
நல்லாருக்குல்ல.
என்னய்யா இழுக்குது.
சூப்பர்ல.
2018 ஜனவரி 7 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
ஏமாற்றுவது மட்டுமே வேலை இந்த ஏர்டெல் காரனுக்கு.
2015 ஜனவரி 4 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
அவார்டு வாங்கலியோ அவார்டு....
- மாரியப்பன் பாத்திரக் கடை (நல்லா தெளிவா பேரு தெரியுற மாதிரி அடி.....)
ஒருமுறை நமது முன்னாள் கம்பேனி ஒன்றில் சில பல லோக்கல் பாலிடிக்ஸூகள் காரணமாக ஆண்டில் ஒருமுறை நடக்கும் விழாக்களில் நமக்கு ஏதும் விருதுகள் கிடைக்காதென்ற நிலை வந்த போது தானைத் தலைவன் கவுண்டமணி அவர்களின் வார்த்தைக்கிணங்க, "இவன் என்னடா நமக்கு கடன் குடுக்குறது, நாம பேங்க் ஆரம்பிப்போம், நாம எல்லாருக்கும் கடன் கொடுப்போம்" என்ற தத்ஸ் மண்டையில் உதித்தது. அது ஒரு ஜென் நிலையை போல இருந்தாலும், வாங்குகிற ஆளாய் இல்லாமல் கொடுக்கிற ஆளாய் இருப்பது சந்தோஷமாகவே இருந்ததது.
ஆகவே இந்த வருடம், அதாவது போன வருடம் நம்மை மகிழ்வித்த பலருக்கும் விருது கொடுத்து கௌரவித்தால் என்ன என்று தோன்றியது. எல்லாரும் தர்றாங்களே, நீ என்ன ஸ்பெஷலா தர்றே? என்று கேட்பவர்களுக்கு, எல்லாரும் தர்றதை வாங்கிக்கோங்க, அப்டியே போற வழில இதையும் வாங்கிட்டுப் போங்க....
இதோ விருதுகள்... முதல் லிஸ்ட்...
"லிங்கா, சங்கா" விருது
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
"தென்னையப் பெத்தா இளநீரு, பிள்ளையப் பெத்தா கண்ணீரு" ஸ்பெஷல் விருது
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
"அந்தப் பொம்மையே நீங்க தான் சார்" சிறப்பு ஜூரி விருது
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கே..
"செல்ஃபி புள்ள" விருது
- ஹி, ஹி, அவுங்களுக்கே தான்
"முடிஞ்சா வாங்க, முடியாட்டி போங்க" விருது
- கமல் ஹாசன்
"கமலே பரவாயில்லப்பா" விருது
- சாரு ஹாசன்
"ஆவாஸ் அஞ்சான்" விருது
- லிங்கு சாமி
"ரன் லோலா ரன்" விருது, (ஒரு வருடம் ஆனதற்காக)
- இளைய தளபதி விஜய்
"மாட்டுத் துணியை தூக்கிப்பாத்த ------------வி" விருது, (டேபிளுக்கடியில் குனிந்து பார்த்தற்கான சிறப்பு விருது)
- இளைய தளபதி விஜய்-க்கே
- தொடரும்...
டிஸ்கி - இது யார் மனதையும் புண்படுத்த அல்ல.