திங்கள், 24 ஜனவரி, 2011

ட்வீட்ஸ்.......


"வாடி மாப்ள....... எப்டி இருக்க? ஆமாம் உனக்கு ஜிமெயில் ஐடி இருக்கா? அப்போ ப்ளாக்கர்ல ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டியது தானே..

நீ ஆரம்பி, நான் சொல்லித்தர்றேன். அது மட்டும் இல்ல.. ஃபேஸ்புக்லயும் ஜி.மெயில் ஐடி இருந்தா போதும் அக்கவுண்ட் ஆரம்பிச்சுடலாம். அதையும் ஆரம்பிடா......

அப்புறமா ட்விட்டர் சொல்லித்தர்றேன்.. அது ரொம்ப சிம்பிள். எப்படி ஃபாலோ பண்றதுன்னு தெரிஞ்சுகிட்டியின்னா போதும்..."

என்ன? ஜூ.வியோட டயலாக் மாதிரி இருக்கிறதா? இன்றைய காலகட்டத்தில் படித்த இரண்டு போர் ஒன்றாகச் சேர்ந்தால் பேசிக்கொள்ளும் டாபிக்குகளில் மேற்கண்ட அயிட்டம் கண்டிப்பாக உண்டு..

நெட்டில் உலாவரும் எல்லா விளம்பரங்களிலும், ஏன் டி.வியில் வரும் மொபைல் போன் விளம்பரங்களிலும் ஃபேஸ்புக், ட்விட்டர் என்ற இரண்டு சமூக வலைதளங்களும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன..

ஆரம்பத்தில் ட்வீட் அடிப்பது ஒன்றும் பெரிதாய் தோன்றவில்லை... அப்படியே நம் வீட்டில் பின்னிரவில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு தனியாக உட்கார்ந்திருக்கும் போது அப்படியே ஒரு மோன நிலை ஏற்படுகிறது.. அதிலும் அராத்து போன்றவர்களின் அதே நிலையிலான ட்வீட்களை பார்க்கும் போது நமக்கும் லேசாக வெறியேறுகிறது.. ட்வீட் அடித்துத் தள்ளத் துவங்குகிறோம். துண்டு துண்டாக எல்லா டாபிக்குகளையும் டச் செய்து விட்டுப் போவதால் என்னமோ நாம் ஒரு அறிவு ஜீவி என்ற எண்ணம் நமக்கு.. அல்லது ஃபிரண்டோடு எல்லா மொக்கை டாபிக்குகளையும் பேசுவது போன்ற ஒரு பிரமை....

டிசம்பர் மாதம் நான் ட்விட்டர் அக்கவுண்ட் ஆரம்பித்த தினத்தில் இருந்து தொடர்ந்த சில நாட்களுக்கு நான் அடித்த ட்வீட்கள் இங்கே பதிவேற்றப்படுகிறது...... இவை வரவேற்பு பெறும் பட்சத்தில் மிச்சமும் வெளியிடப்படும். (ரிப்ளைகள், ரீட்வீட்கள், தேவையற்ற பர்சனல் ட்வீட்கள், ரொம்ப மொக்கையானவை இவற்றில் இடம் பெறாது) அதுக்குப்பிறகு வாரம் ஒரு முறை அனைத்து ட்வீட்களும் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும்.

ஆனால் கீழிருந்து மேலாக ட்வீட்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நான் அடித்த முதல் ட்வீட் விருதகிரி பற்றியது. அங்கிருந்து காப்பி செய்யும்போது கீழிருந்து மேலாகத்தான் வருகின்றன..

=============================================================

ஒரு ட்வீடடுக்கு ரிப்ளை ட்வீட் அடித்தால் @abcdef என்றே ட்வீட் போகிறது. ரிப்ளை எதற்கானது என்பதற்கான குறிப்பே இல்லை.

=============================================================

எங்கு பார்த்தாலும் யாரைப்பார்த்தாலும் பொங்கல் வாழ்த்துக்கள். டெம்ப்ளேட் வாழ்த்துக்கள் சொல்லி போரடிக்கிறது.

=============================================================

சாவடிக்குறாங்கப்பா...

=============================================================

வாக்குக் கொடுத்து விட்டு தவறும் பெண்களை என்ன செய்யலாம்?

=============================================================

வரவர நாணயம் விகடன் படித்தால் ஒதுக்குப்புறமான மண்டபத்தில் நடக்கும் இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்வது போல் பயமாக இருக்கிறது.

=============================================================

தோழி ஒருத்தி வீட்டில் இருக்கிறேன்.. நல்ல உபசரிப்பு - அவளும், அவள் கணவனும். நல்ல துவக்கம் இந்தப்புத்தாண்டில்.

=============================================================

"சூப்பர் ஸ்டார் சூர்யாவை மும்பை ஜிம்மில் சந்தித்தேன்.. தமிழ் த்ரீ இடியட்ஸில் கமிட்டாகி இருக்கிறாராம். பணிவான ஆள் மட்டுமல்ல... பெண்கள் சொல்வது போல செம ஹாட்" - சொன்னது சேதன் பகத்.. மூல நாவலின் ஆசிரியர்.

=============================================================

நண்பன் வந்திருக்கிறான். சாவடிக்கிறான்.

=============================================================

உறங்கும் குழந்தையை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.

=============================================================

சிறுத்தை டிரெயிலர்ல இருந்து கார்த்தின்ற பேரை மட்டும் கட் பண்ணி எடு்க்கச்சொல்லிருக்கேன்... (ஒரு வெளம்பரரரரரரம்)

=============================================================

நாளை ஈரோட்டுல பதிவர் சந்திப்பாமே.. யாரெல்லாம் வர்றீங்க?

=============================================================

ஓஞ்ச வாளப்பளம் ஒரு டஜன் வாங்கினேன்....

=============================================================

திறந்த மனதுடன் இருப்பது எப்படி? பனிரண்டு மணிக்கு எஃப்.டிவி மங்கையர் கற்றுக்கொடுக்கிறார்கள்.

=============================================================

லேப்பு டாப்பை மடி மேலே வைத்து வேலை செய்தால் "அது"க்கு ஆபத்தாமே.... அய்யய்யோ...

=============================================================

கல்யாணம் ஆன முன்னாள் காதலியை பார்க்கப்போகும்போது என்ன வாங்கிக்கிட்டு போகலாம்?

=============================================================

புரொஃபைல் பிக்சர் மாற்றி விட்டேன். ஒருவேளை நம்ம ட்வீட் விகடனில் வந்தால்? (சொந்தப்போட்டோவை போட யோசிப்பாய்ங்க இல்ல)

=============================================================

சந்திராயன் எடுத்த போட்டோக்களில் நிலாவில் வடை சுட்டு விற்ற பாட்டியின் டெட்பாடி கிடைத்திருக்கிறதாம். ஆனால் காக்காவைக்காணுமாம்.

=============================================================

பாட்டி வட சுட்ட கதையில வடை உளுந்த வடையா? மசால் வடையா?

=============================================================

தினசரி நிறைய ஃபேஸ்புக் பிரண்ட் ரிக்வஸ்ட். இன்றைக்கு ரிக்வஸ்ட் கொடுத்திருப்பது நித்யானந்தா சுவாமி. என்ன செய்ய?

=============================================================

தங்கை கல்யாணத்தப்போ கே.எஃப்.சி பக்கெட் சிக்கன் ரூ.400. இப்போ அவளுக்கு பையன் பிறந்தான், சிக்கன் ரூ.500. அவனோடு போகும்போது எவ்வளவு ஆகும்?

=============================================================

மதுரையிலிருந்து வந்த தூரத்து உறவுப்பாட்டி "ராசா" மாதிரி இருக்கணும் என்றார். அய்யய்யோ, வேண்டாம் பாட்டி என்றேன்.

=============================================================

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதுக்கு ஒரு உதாரணம் - விஜயகாந்த் டைரக்ஷனில் விருதகிரி

=============================================================

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

கலவை சாதம் (17/01/2011)

பெட்ரோல் விலை மீண்டும் ஏறியிருக்கிறது. உடனடி அமல் ரூபாய் இரண்டு ஐம்பது லிட்டருக்கு.. விலையேற்றம் மட்டும் உடனடியாக அமலுக்கு வருகிறது. ஆனால் விலைகுறைப்பு என்றால்? வரமாட்டேனென்கிறது. ஒருமுறை கச்சா எண்ணெயின் விலை மிகவும் குறைந்து போன பிறகு, அதிலிருந்து லிட்டருக்கு இரண்டு ருபாயை குறைப்பதற்கு எத்தனை நாள் மீட்டிங் போட்டார்கள். பல நாள் பேசி பேசி பேசி பேசி அப்புறமாக ரொம்ப நாள் கழித்து பிறகுதான் அமலுக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் விலை ஏறும்போது மட்டும் "இன்று நள்ளிரவு முதல்" என்ற ஒற்றை அறிவிப்போடு... இந்த நேரத்தில் ஒரு லிட்டர் எழுபது பைசா என்று என் பைக்குக்கு பெட்ரோல் போட்டிருக்கிறேன் என்று தலைவர் சுஜாதா சொன்னது நினைவுக்கு வருகிறது. எழுபதைத்தொடப்போகிறது இன்னும் ஒரே வருடத்தில்.. கடவுளே இது எங்கே போய் நிற்குமோ?

-------------------------------------------------------------------

நீயா? நானாவில் கஷ்டப்பட்டு பேசிய பல பாயிண்டுகளில் நிறைய எடிட்டிங்கில் போய்விட்டது. என்ன தவம் செய்தனை? எனக்காக தன் நண்பர்களையும், குடும்பத்தினரையும் அழைத்து டி.வி முன்னால் உட்கார வைத்து நீயா நானா பார்க்க வைத்து, நான் நிறைய முறை பேசவில்லை என்று போன் போட்டு என்னைத்திட்டிய 23 அன்பர்களுக்கும் நன்றி. நான் டி.வியில் வந்தபோதெல்லாம் மெஸேஜ் அனுப்பி சேட்டில் இருந்த சுமார் 40 பேருக்கும் ஸ்பெஷல் நன்றி..

-------------------------------------------------------------------

ஆனந்த விகடனில் சாரு வின் மனம் கொத்திப் பறவை போன வாரமே முடிந்து விட்டது. அவரே முடித்து விட்டாரா? அல்லது ---------------------------------------------? அதுவே விகடன் பிரசுரம் மூலம் புத்தகமாகவும் வந்து விட்டது. சென்னை புத்தகக் காட்சியில் இருந்ததாகக் கேள்வி. அடுத்து விகடனில் மீண்டும் எஸ்.ரா வந்தால் நன்றாக இருக்கும். அல்லது என்னுடைய கணிப்புப் படி நாஞ்சில் நாடனை வைத்து ஒரு தொடர் வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன். கரண்டில் லைம் லைட்டுக்கு வந்திருப்பவராயிற்றே...

-------------------------------------------------------------------

டிவிட்டரில் நாம் நிறைய பேரை ஃபாலோ செய்கிறோம்.. ஆனால் நம்மை நிறைய பேர் ஃபாலோ செய்ய வைப்பது எப்படி? அன்பர்கள் யாரேனும் வழி சொன்னால் நன்றாக இருக்கும். மேலும் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் உபயோகிக்க சிறந்த மொபைல் போன் மாடல் என்னவென்று சொன்னால் நன்றாக இருக்கும் (தமிழ் டைப்பிங் வசதியுடன்)

-------------------------------------------------------------------

ஆடுகளம், சிறுத்தை, காவலன் மூன்றுமே தேறும், நன்றாகப்போகும் என்று சொல்கிறார்கள். படங்கள் எப்படி? எதை முதலில் பார்க்கலாம்? தியேட்டரில் போய் காசு கொடுத்துப்பார்க்கலாமா? அல்லது கொஞ்சம் வெயிட் பண்ணலாமா? இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக சுறா சன் டி.வியில் இன்று ஒளிபரப்பாகித் தொலைத்தது. சந்தோஷூடன் 75 ரூபாய் கொடுத்து போனது வேஸ்டாகிப்போனது. நல்ல வேளை.. சிக்கு புக்கு வுக்கும் அந்த மாதிரி தான் கூப்பிட்டார்கள். நான் போகவில்லை.

இன்றைக்கு விஜய்யில் சிக்கு புக்கு, அய்யனார், அந்தப்பக்கம் ஈரம், இந்தப்பக்கம் மதராசப்பட்டினம், வேறெதோ டி.வியில் சேரனின் பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, இன்னோரு சைடில் அருணாச்சலம், வேறு ஒரு சைடில் முரட்டுக்காளை என்று இரட்டை இரட்டையாக படங்கள் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தன. ஸோ........... அவசரப்பட்டு எந்தப்படத்துக்கும் போக வேண்டாமென்று நினைக்கிறேன்.

-------------------------------------------------------------------

போனவாரம் சென்னை போனபோது பாரீஸ் கார்னரில் சுமார் 35 டிவிடிக்கள் வாங்கி வந்தேன். ஒன்று ரூபாய் பனிரெண்டு ஐம்பது என்ற கணக்கில். எல்லாமே இங்கிலீஷ் படங்கள் தான். காம்போ பேக் வேறு.. ஒற்றைப்படம், இரட்டை, நான்கு, டிராலஜீ சீரீஸ் வகை, க்ளாஸிக் வகைகள், ஆஸ்கர் கலெக்ஷன், உலகப்படம் என்று கலவையாக. முப்பது ரூபாய் சொன்னார்கள். பேசிப்பேசி பேரம் படிந்து 35 டிவிடிக்களை எடுத்துக்கொண்டு மொத்தமாய் 430 ரூபாய் கொடுத்து விட்டு நடையைக்கட்டி விட்டேன். போட்டுப்பார்த்ததில் அவ்வளவு தெளிவாக இல்லாவிட்டாலும் ஓக்கே ரகம் தான் எல்லாமே. பிரச்சினை என்னவென்றால், பாரீஸ் கார்னரில் நல்ல கடைகளை, நல்ல பிரிண்ட் உள்ள டிவிடி கடைகளை கண்டுபிடிப்பது தான் கஷ்டம். இப்போது ப்ளூ ரே டிஸ்க் என்று ஒன்று வந்திருக்கிறது. பிரிண்ட் ஓக்கே. ஆனால் ஆடியோ ப்ராப்ளமாக இருக்கிறது. பார்க்கலாம். சேலத்திலும் அதே தரத்தில் தான் கிடைக்கிறது.. ஆனால் முப்பது ரூபாய் சொல்கிறார்கள். ஓசூரில் நாற்பது. அதான்... சென்னை ரேட் பரவாயில்லை என்று வாங்கிவிட்டேன்.

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

நடு ரோட்டில் கிடக்கிறீர்கள், தலைக்கு மேல் லாரி, முகத்திற்கு நேரே அதன் பேக் வீல்(கள்)..

தலைப்பில் இருப்பது போன்ற ஒரு சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள். நடு ரோட்டில் கிடக்கிறீர்கள், தலைக்கு மேல் லாரி, முகத்திற்கு நேரே அதன் பேக் வீல்(கள்).. எப்படி இருக்கும் உங்களுக்கு..?

சென்ற வாரம் சேலத்தில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம் பற்றி பேசலாம் என்றுதான். அதற்கு முன்னால்......

எனக்கு ஆட்டோக்காரர்கள் மீது பொதுவாக அவ்வளவு நல்ல அபிப்ராயம் கிடையாது. என்னதான் ஆட்டோக்காரர்கள் உங்கள் நண்பர்கள் என்று சொன்னாலும், ஒன்றிரண்டு குடும்பப் பாங்கான நாற்பது சொச்சம் வயதொத்த, மரியாதையாகப்பேசும் டிரைவர்களைப் பார்க்கும் போதும், வரும் மரியாதை இரண்டே நாளில் மீண்டும் சில ரவுடி ஆட்டோக்காரர்களைப் பார்க்கும் போது காணாமல் போய்விடுகிறது.

ரஜினி, விஜய் வகையறாவைச்சேர்ந்த ஹீரோக்கள் ஆட்டோ டிரைவர்களாக நடித்து அந்த வேலைக்கு ஒரு ஹீரோ இமேஜைக்கொடுத்து விட்டார்கள். இதனால் ஆட்டோ ஓட்டும் எல்லோருக்குமே தான் ஒரு ஹீரோ என்று நினைப்பு. இதெல்லாம் பெரிசுகள் சொல்வது போல் இள ரத்தம் ஓடும் வரை தான். பத்து வருடம் ஆட்டோ ஓட்டி பைல்ஸ் வந்து, சொட்டையும், தொப்பையும் விழுந்து, போகிற வருகிற போலீஸூக்கெல்லாம் வணக்கம் வைத்து, பிள்ளைகளுக்கு பீஸ் கட்டும் நேரத்தில் ஆட்டோ ரிப்பேர், மழை பிரச்சினைகளைச் சமாளித்து, (மைனாவில் தம்பி ராமையா புலம்புவதைப்போல) முக்கி முக்கி உழைத்தும் மூணு ஜட்டி கூட முழுசா மிச்சம் நிற்கல என்று புலம்பித் திருந்தும் வரை அந்த ஹீரோ இமேஜ் கொடுக்கும் திமிர் அடங்காது. அப்படி அடங்கிய பின் அட்வைஸ் செய்தாலும் அடுத்த தலைமுறை திருந்துவதாகத் தெரியவில்லை.

ஒருமுறை ஜூவியில் படித்ததாக ஞாபகம். நியாயமாக நாலு சவாரி பார்த்தாலும், ஆட்டோக்காரர்களின் தினசரி வருமானம் நானூறு முதல் அறுநூறு ரூபாய் வரை வரும். மாதம் சர்வ சாதாரணமாக பனிரெண்டாயிரம் ரூபாய் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை பார்க்கலாம். சாதாரணமாக மாத வருமாத்னதிற்கு வேலைக்குச் செல்பவர்களை விட இவர்களின் வருமானம் அதிகம். ஆனால் என்னதான் அவ்வளவு வருமானம் வந்தாலும் மாமூல், தினசரி கூத்து, குடி போன்ற விஷயங்களுக்கே வீணாய்ப்போகிறது என்று எழுதியிருந்தார்கள்.

இதில் ஷேர் ஆட்டோக்கள் தனி வகை. ஷேர் ஆட்டோக்கள் பார்த்திருக்கிறீர்களா? நார்மல் ஆட்டோக்களை விட சைஸில் பெரியவை. கோவை, சென்னை, சேலம் உட்பட பல ஊர்களிலும் ஃபேமஸ். இங்கே சேலம் போன்ற ஊர்களில் பியாஜ்ஜியோ ஆபே வண்டிதான் பொதுவாக ஷேர் ஆட்டோ பணிக்கு உதவுகிறது...

சேலத்தில் ஏகப்பட்ட ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் பத்தாயிரம் ஆட்டோக்கள். ஒரு பெரிய கட்டிடத்தின் மாடியில் நின்று கொண்டு கீழே பார்த்தால் ஆட்டோக்கள் ஏதோ பேரணி நடத்துவது போலவே இருக்கும். ஆனால் அது சாதாரணமாக ஓடும் ஷேர் ஆட்டோக்கள் தான். அது சரி, இத்தனை ஆட்டோக்கள் ஓடினால் எல்லா டிரைவர்களிடமும் பக்காவாக லைசென்ஸ், ஆர்.சி வகையறாக்கள் இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? ஒவ்வொரு முறை நான் ஷேர் ஆட்டோ ஏறும் போதும் அவர்களிடம் சாதாரணமாக பேச்சுக்கொடுத்துக்கொண்டே இந்தக் கேள்வியை கேட்பது வழக்கம். பத்தில் ஒரு ஆட்டோக்காரரிடம் லைசென்ஸ் கிடையாது. இதில் பல ஆட்டோக்கள் லோக்கல் போலீஸாரின் பினாமிகளாம்.



இது தவிர இரு மாதங்களுக்கு முன்பு, இன்னோரு மூவாயிரத்தைநூறு ஆட்டோக்களை இறக்கியிருக்கிறார்களாம். வரும் எலக்ஷன் வரையில் பர்மிட் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்று சொன்னார் ஒரு ஆட்டோ டிரைவர். சேலத்தில் இந்தப்பக்கம் புதிய பெரியாஸ்பத்திரி திறப்பு விழா, புதிய கலெக்டர் ஆபீஸ் திறப்பு விழா, கோர்ட் மற்றும் வணிக வளாகங்கள் திறப்பு விழா என்றெல்லாம் பெரிய மேட்டர்கள் நடந்து கொண்டிருப்பதால் எல்லா ரூட்டுகளிலும் ஆட்டோக்கள் ஓடும் என்று கேள்வி.

முக்கியமான ஏரியாக்கள் என்று பார்த்தால் கொண்டலாம்பட்டி பை பாஸ், சீலநாயக்கன் பட்டி பை பாஸ் என்ற இரண்டு பகுதிளுக்கு அதிக எண்ணிக்கையில் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்தப்பக்கம் பார்த்தால் அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை என்ற இரு பகுதிகளுக்கு. ஆனால் என்னவோ தெரியவில்லை. இன்னும் செவ்வாய்ப்பேட்டை பக்கம் ஷேர் ஆட்டோ விடுவதே இல்லை. ஒருவேளை சரக்கு லாரிகள் நிறைய இருக்கும் என்பதாலோ என்னவோ?

டிரைவர்களைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால்……….. ஸீட்டில் கோணலாக உட்கார்ந்து, பான்பராக், மாணிக்சந்த், சைனி சைனி ஏதாவது ஒன்று வாங்கி குதப்பிக் கொள்ள வேண்டியது. அதில் ஒரு சந்தோஷமான ஹீரோ இமேஜ். நானும், எப்போதும் ஷேர் ஆட்டோவில் போகும்போது அதன் டிரைவர் சீட்டில் டிரைவர் கூடவே ஒட்டிக்கொண்டு வருவதே என் பழக்கம். அந்த டிரைவர் தனக்குத் தோதான ஆள் யாராவது பேச்சுத் துணைக்கு மாட்டுவானா என்றே வருவார்கள். ஏதேனும் விஷயம் தெரிந்து கொள்ளலாம்.

சென்ற வாரம் நடந்த கோர சம்பவம் இது. ஒரு ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது அந்த டிரைவர் புலம்பியபடியே வந்து கொண்டிருந்தான். ஒரு ஆட்டோக்காரன் செய்த தப்புனால ரெண்டு குடும்பத்தோட வாழ்க்கையே போச்சே என்றபடி புலம்பிக்கொண்டிருந்தான்.. என்னவென்று விசாரித்தால், அன்று ஒரு ஆக்ஸிடென்ட் நடந்திருக்கிறது.

சேலத்தில் பொதுவாக ஷேர் ஆட்டோக்களுக்கென்று எந்த ஒரு ஸ்டாப்பிங்கும் கிடையாது. கை காட்டும் இடத்திலெல்லாம் நிறுத்துவார்கள், கண்ட இடத்தில் நிறுத்துவார்கள், போட்டியின் காரணமாக நிறுத்துவார்கள். பஸ்ஸை முந்திக்கொண்டு போய் நிறுத்துவார்கள். சடன் ப்ரேக் போட்டு நிறுத்துவார்கள்.

அன்று சேலம் உடையாப்பட்டி பெருமாள் கோவில் மேடு என்ற இடத்துக்கு அருகில் (அம்மாப்பேட்டை ரூட்). இரண்டு பெண் குழந்தைகள், இரண்டும் ப்ளஸ் ஒன் படிக்கிற குழந்தைகளாம். சைக்கிள் ஓட்டியபடி போய்க் கொண்டு இருந்திருக்கிறார்கள். வழக்கம் போல் முன்னால் பின்னால் என எல்லாப்பக்கமும் ஷேர் ஆட்டோக்கள். முன்னால் போன அந்த ஆட்டோவின் பரதேசி டிரைவர் எதையும் கவனிக்காமல் சடன் பிரேக் அடிக்க பின்னால் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குழந்தைகள் இருவரும், ஷேர் ஆட்டோ மேல் மோதி (துரதிர்ஷ்டவசமாக வலது பக்கமாக) ரோட்டில் சைக்கிளோடு கீழே விழுந்திருக்கிறார்கள்.

எதிரே லாரி..

ஆனால் இவர்களைப்பார்த்த அந்த லாரி டிரைவர் குழந்தைகள் மேல் ஃப்ரண்ட் வீல் ஏறக்கூடாது என்று லாரியை வளைத்து இடப்பக்கம் திருப்ப முயற்சித்ததாகவும் ஆனால் அதையும் மீறி பேக் வீல் அந்தக் குழந்தைகள் மீது ஏறியிருக்கிறது என்று நான் சந்தித்த ஆட்டோ டிரைவர் சொன்னார். ஒரு பெண் குழந்தை ஸ்பாட்டிலேயே அவுட். இன்னொன்று ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் பின்னர் கோர மரணம். இத்தனைக்கும் காரணமான அந்த ஆட்டோக்காரன் என்ன செய்தான் என்று கேட்டால், "அதெப்டி சார்? இதைப் பார்த்துட்டு, நானாவே இருந்தாலும் சிட்டாப் பறந்துருப்பேன் இல்ல?" என்று கேட்டார் இந்த டிரைவர்.

லாரி டிரைவர் ஸ்பாட்டிலிருந்தே எஸ்கேப் வழக்கம் போல, ஆனால் க்ளீனரை பின்னி பெடலெடுத்து பிசிறு கடாசி விட்டார்கள் பப்ளிக். என்ன பிரயோஜனம்.? போன உயிர்கள் போனது தானே.. இத்தனைக்கும் அவர்களில் பலருக்கும் அங்கே உண்மையில் நடந்த இந்தக் கூத்துக்களும், இதற்குக்காரணமானவன் யார் என்றும் தெரியாது. (கிரிக்கெட்டில முதலில் டொக்கு டொக்கு என்று ஆடி ஓவரை வீணாக்கும் பேட்ஸ்மேனை விட்டு விட்டு, இந்தியா தோற்றுப்போகையில் கடைசி ஓவரில் உயிரைக்கொடுத்து ஆடிய பேட்ஸ்மேனை விளாசுவோமே, அந்த மாதிரி) ....

இப்போது மீண்டும்.................. நடு ரோட்டில் நாலு பக்கமும் வண்டிகள் போக வர இருக்கும் போது, நீங்கள் விழுந்து கிடக்க, உங்கள் முகத்திற்கு நேராக ஒரு பெரிய லாரியின் இரட்டை பேக்வீல் வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

அது மட்டுமல்ல...

இந்த ஆட்டோ அட்டகாசம் பற்றி கட்டுரை எழுதப்போகிறேன் என்று சொன்னபோது நண்பர் ஒருவர் சொன்னார். சில வாரங்களுக்கு முன்பு சேலத்தின் லோக்கல் டி.வி ஒன்றில் கொடுத்த பேட்டியில் திருவாளர் அமைச்சர் அவர்கள் என்ன திருவாய் மலர்ந்திருக்கிறார் தெரியுமா? போலீஸ்காரர்கள் தான் இதற்குக் காரணம். அவர்களுக்குச் சம்பளம் ரொம்பவும் குறைவு. அப்புறம் அவர்கள் தங்கள் வருமானத்துக்கு வேறு என்ன தான் செய்வார்கள்? வருமானத்திற்காக இப்படி பினாமி பெயரில் ஆட்டோ ஓட்டத்தான் செய்வார்கள் என்று..... எப்படி இருக்கிறது கதை... ?

எனக்கு ஒன்று புரியவில்லை.. யாரோ ஓனராக இருக்கட்டும் வண்டிக்கு. ஆனால் அதற்கென்று ஒரு லிமிட் இல்லையா? ஒரு ஊருக்கு இவ்வளவு தான் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கும் அதிகாரம் போக்குவரத்துத் துறைக்கு இல்லையா? அல்லது இப்படியே போனால் இந்தப் பூனைகளுக்கு மணி கட்டுவது யார்?

இதோ இதை டைப்பி முடித்து விட்டு டீம் பையர் (பையனின் மரியாதைச்சொல் - அவருக்குத் திருமணமாகி விட்டதால்) ஒருவருக்கு கால் செய்தால் பதட்டமாகப்பேசினார். எங்க இருக்கீங்க என்றதற்கு "சார், என் கண் முன்னாடி ஒரு ஆக்ஸிடென்ட் சார். பைக்குல ரெண்டு பசங்க. ரோடு க்ராஸ் பண்ணும் போது தலை மேலேயே லாரி ஏறி, தலை கூழாகிடுச்சு சார். பயமாயிருக்கு, ஒய்ப் வேற என் கூட இருந்தாங்க. இதைப்பார்த்துட்டு கத்திட்டாங்க...

வாழ்க்கை............???????????



-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------