வெள்ளி, 31 டிசம்பர், 2010

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி

-----------------------------------------

முதலில் ஒரு விஷயம். இது என்னுடைய பதிவு அல்ல. கடந்த ஒரு வாரமாக இது மெயில் மூலமாக மூன்று, நான்கு நண்பர்களிடம் இருந்து வந்து கொண்டே இருந்தது. இதை நீங்கள் கூட எங்காவது படித்திருக்கலாம்.... அதனால் இதைப் பதிவாகப்போட வேண்டாம் என்று நினைத்தேன்.

ஆனால் இதைப்படித்து விட்டு என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை. ஆதித்ய பிர்லாவில் இருக்கும் போது, XXX என்ற மிகப்பிரபல சாஃப்ட்வேர் கம்பெனியில் இருந்து ஒரு நான்கைந்து பேர் கொண்ட பெரிய டீமே இந்த மாதிரி "Maintenance and Support" என்று புரியாத விஷயங்களைச்சொல்லி ஒவ்வொரு விஷயத்துக்கும் நாள் கடத்திக்குழப்புவார்கள். அதிலும் ஒரு பெண் இருப்பாள். குறைந்தது ஒரு நாளைக்கு நாலரை மணிநேரம் அங்கும் இங்கும் நடந்து கொண்டே செல்ஃபோனில் பேசிக்கொண்டே இருப்பாள்.

அவள் எங்கள் நேரடி எம்ப்ளாயீ கிடையாது என்பதால் யாரும் அவளை கேள்வி கேட்க முடியாது. யாராவது அவளை முறைத்தாலும் அவளது டீம் மெம்பர் ஆபத்பாந்தவன் வந்து கூட்டிக்கொண்டு போய்விடுவான். இரண்டும் சேர்ந்து சேட்டிங்கில் உட்கார்ந்தால் அதில் ஒரு இரண்டு மணி நேரம் போகும். அப்புறம் சனிக்கிழமையானால் வரவே மாட்டார்கள். வாராவாரம் மீட்டிங் என்று ஒரு அரை நாள் போடுவார்கள்.

அதேபோல் எனக்குத்தெரிந்த பெண்ணொருத்தி இப்போது XXXXXXX என்ற கம்பெனியில் பணிபுரிகிறாள். அவளும் இப்படித்தான் "பெஞ்ச், சேர், க்ளையண்ட் லொக்கேஷன்" என்று சொல்லி கதை அளப்பாள். அவள் கதையைக்கேட்டாலும் ஒரே காமெடியாக இருக்கும். சரி, அதெல்லாம் கிடக்கட்டும், விடுங்கள். மேட்டரைப்படியுங்கள்.

-----------------------------------------

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
-
"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".



"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"
-
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.



அப்பா : "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MS-னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

அப்பா : "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

அப்பா : “சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?”

“அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்”

அப்பா : "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐயோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
-
"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
-
அப்பா : "CR-னா?"
-
"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
-
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

அப்பா : "இதுக்கு அவன் ஒத்துபானா?"
-
"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

அப்பா : "சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
அப்பா : "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."



அப்பா : "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –
-
அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை."
-
"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

அப்பா : "எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
-
அப்பா : "நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!"



"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
-
அப்பா : "இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

அப்பா : "அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

அப்பா : புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்கறது மாதிரி."
"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"



அப்பா: "கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
-
அப்பா : "எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.

அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

அப்பா : "சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
-
"அப்புறம்?"

"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.


அப்பா : "எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா."

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

சுஜாதா எழுதிய // "ரிசப்ஷன் 2010" //

போன பதிவில் வெளியிட்டிருந்த சுஜாதா பற்றிய குறிப்பை படித்து விட்டு நண்பர்கள் நிறைய பேர் அந்த // "ரிசப்ஷன் 2010" // கதையின் லிங்க்கை அனுப்புங்கள் என்று மெயிலியுள்ளார்கள். சிலர் அந்தக் கதையை கட், காபி, பேஸ்ட் செய்து மெயில் அனுப்புமாறு மெயிலியிருந்தார்கள்.

அந்தக் கதைக்கு என்னிடம் லிங்க் கிடையாது. விகனுக்கு ஆன்லைனில் பணம் கட்டி சப்ஸ்க்ரிப்ஷன் எடுத்திருக்கிறேன். வேண்டுமானால் கட் காபி பேஸ்ட் செய்து மெயில் அனுப்புகிறேன் என்று சொல்லியிருந்தேன். சொன்னபடி சிலருக்கும் அனுப்பியாயிற்று. இன்னும் சிலர் நீ அதை மெயில் அனுப்பாதே, ஆபீஸில் ஜி.மெயில் ப்ளாக் செய்திருக்கிறார்கள். பார்க்க முடியாது, பேசாமல் உன் பதிவில் போட்டுவிடு என்று சொன்னதனால் அவர்கள் அனைவரின் அன்புக்கிணங்கி தானைத் தலைவர், எழுத்துலகத்தின் வாத்தியார் சுஜாதா அவர்கள் எழுதிய // "ரிசப்ஷன் 2010" // கதையை இங்கே வெளியிடுகிறேன்.

முதலில் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. இதை இங்கே வெளியிடலாமா? என்று. அப்புறம், இலட்சக் கணக்கான பேர் படிக்கும் விகடனே அதை வெளியிட்டு விட்ட பிறகு சிலநூறு பேர் படிக்கும் என் ப்ளாக்கில் வெளியிட்டால் என்ன? என்றே தோன்றியது.

ஸோ................................. இதோ

------------------------------------------------------

ரிசப்ஷன் 2010

சுஜாதா

ஆறரைக்கு ரிசப்ஷன் என்று ராமலிங்கத்தின் வி-மெயில் அறி வித்தது. ஏழரைக்கு ஏர்போர்ட்டில் ஒரு

ஐகான் இருந்ததால், ஆறு பதினாலு நாற்பத்தேழுக்கே புறப்பட்டுவிட்டேன். ஹாலந்தில் இருந்து ட்யுலிப் மலர்க்கொத்து காரில் காத்திருந்தது. ராமலிங்கத் துக்குப் பிடித்த பானமான 'மே 22’ ஒரு காஸ்க் கொள்ளை விலை கொடுத்து வாங்கி வைத்திருந்தேன். கல்யாணத்துக்குப் பொருந்தாத பரிசுப்பொருளோ என்று யோசித்தேன். வேறு என்ன கொடுப்பது?

எல்லாப் புத்தகங்களும் வலையில் உள்ளன. ராஜேஸ்வரியருகில் பார்க்கிங் இருப்பதாக ஜிபிஎஸ் சொன்னது. மாடி எண்ணை பைக் கணினி மனப்பாடம் செய்துகொண்டதற்கு அறிகுறியாக பீப்பியது. லிஃப்ட்டில் இறங்கி க-மண்டபத்தில் நுழையும்போது Aruna weds Ramalingam என்று பாலிமர் எழுத்துக்கள் பொருத்திக் கொண்டிருந்தார்கள். சீக்கிரம் வந்துவிட்டதால் மெள்ள நடந் தேன்.

மணமக்களின் மேடை காலியாக இருந்தது. ஆர்க்கெஸ்ட்ரா ஸின்தரானைச் சுருதி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரிசப்ஷன் பெண்கள் நீல ரோஜா மலர்களையும், லோ காலரி கல்கண்டையும் தட்டில் அமைத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி குஜராத்தி உடையில் சூப்பராக இருந்தாள். பழக்கதோஷத்தில் ''நீங்க ராமலிங்கத்துக்கு உறவா?'' என்று கேட்டேன்.



''இல்லைங்க... நாங்க கன்ட்ரோல்ல டைனமிக்ஸ் ஹாஸ்டர்ஸ்ங்க..!''

போச்சுடா, ரோபாட்!

இப்போதெல்லாம் மனிதர்க ளுக்கும் இயந்திரங்களுக்கும் வேறுபாடே இல்லை. கன்னக்குழி கூட அப்படியே செய்கிறார்கள். உரித்துப் பார்த்தால்தான், அந்தரங்க முடி அக்ரிலிக் என்று தெரியும். ஒருமாதிரி லூபாயில் வாசனை வரும்.

அந்தப் பெண் 'களுக்’ என்று சிரித்தாள். அதைப் பார்த்தால் கவியரசு கணிதாசன் சொன்னது போல, ''ஏமாந்த கவிஞர்கள் எழுநூறு கவிதை செய்வர்!''

ஏகதேசம் காலியாக இருந்த ஹாலில் போய் வீற்றேன்.

''ஹாய்ஸ்ஸ்ஸத்யா... என்ன இவ்வளவு சீக்கிரம்...?'' என்றபடி வந்தான் ராமலிங்கம். கருநீல சூட் அணிந்து, ஸ்ப்ரே தெளித்து வாரி யிருந்தான். கல்யாணத்துக்கென்று முடியை வைக்கோல் நிறத்துக்கு மாற்றியிருந்தான். மூக்கைத் திருத் தியிருந்தான்.

''எங்கே, வாழ்க்கைப் படகில் உன்னோடு துடுப்புப் போடப் போகிற அருணா..?''

''அருணாவுக்குத்தான் காத்துக் கிட்டிருக்கேன். கமான்... வாழ்க் கைப் படகு, துடுப்பு... என்னடா 'ரொமான்டிக்’காயிட்டிருக்கே..? நீயும் கல்யாணம் பண்ணிக்க ணுமா..? அம்மாகிட்டே சொல் லவா?''

''ச்சே! 'ராமலிங்கம் கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டானா’னு அம்மா ஆச்சரியப்பட்டுப் போயிட்டா. முதல்ல எப்ப சந்திச்சே..?''

''போன வாரம் நம்ம வெங்கி கல்யாணத்துல... லவ் அட் ஃபர்ஸ்ட் மில்லி செகண்ட்! ஒரே ரசனை, ஒரே சாப்பாடு, ஒரே கணிபாஷை எல்லாம். பிடித்த கவிஞர்கள்கூட ஒரே ஒரே... நூறாண்டு காலம் ப்ராஸ்தெட்டிக் வாழ்க்கை வாழ உத்தேசம்..! எக்ஸ்க்யூஸ் மி, அலங்காரமெல்லாம் ஆயிடுச்சுனு நினைக்கிறேன். நீ நேர்ல வர முடிஞ்சதுக்குச் சந்தோஷம். எல்லோரும் வி-மெயில்லயே நழுவறாங்க. ஒரு நிமிஷம்... அழைச்சுட்டு வந்துர்றேன்...''

மெள்ள மெள்ளக் கூட்டம் சேர ஆரம்பிக்க, ராமலிங்கம் அதில் மறைந்தான். வாசலை நோக்கி விரைந்தான். நான் அருணாவைப் பார்க்க ஆவலாகக் காத்திருந்தேன். ராமலிங்கத்தின் மனதைக் கவர்வது அத்தனை எளிதல்ல. எல்லாவற்றிலும் வித்தியாசமானவன். கணிமேதை. மேடைக்குச் செல்லும் முன், ஒரு முறை தெரிந்தான்.

கடிகாரம் 'ஆறு நாற்பது முப் பது’ என்றது. 'காலம் பொன்னானது’ என்று போதனை வேறு.

''ஷட் அப்..!'' என்றேன்.

''ஏர்போர்ட்டில் ஏழரைக்கு இருந்தாகணும். ப்ளேன் லேட்டா வதில்லை. என் கடமை சொல்ல வேண்டியது...''

''வர வர உனக்குப் பிரசங்கம் அதிகமாகிவிட்டது. ஒரு நாள் உன் ஆக்ஸிலியரி மெமோரியை நோண்டிவிடப்போகிறேன்...''

''நஷ்டம் உனக்குத்தான்; நானூறு ஷா. இன்னும் தவணையே முடியவில்லை'' என்றது.

ராமலிங்கம் நண்பர்கள் சூழ வந்தான். அவன் பின்னால் மறைந்திருந்த அருணாவைப் பார்த்தேன். கண்ணுக்கு மை தீட்டி, கன்னத்தில் சிவப்பு ஒத்தி, ஒரு வாட்டசாட்ட தேவதை போல...

வெயிட் எ மினிட்!

''அருணா... சொன்னேன் பார்த்தியா, இது என் அருமை நண்பன் சத்யா...''

நெருங்கினேன்.

''ஹாய், ஐம் அருணாசலம்!''

அவன் கைகுலுக்கல் மென்மையாக இருந்தது.
------------------------------------------------------

எப்படி? திகீரென்று இல்லை?

(பத்து வருடம் முன்னால் வெளியான கதை இது. இன்டர்நெட் கிடையாது. ஐ.டி இன்டஸ்ட்ரி கிடையாது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் கிடையாது. சாமியார் சரச சல்லாபங்கள் கிடையாது. ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா? என்ற சர்ச்சைகள் கிடையாது. ஊர் ஓரளவுக்கு கொஞ்சம் அமைதியாகவும், ஒழுக்கமா(?)வும் இருந்த காலகட்டம் - அந்தக்கால கட்டத்தை வைத்து கதையை அணுகவும்)

------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

சனி, 25 டிசம்பர், 2010

கலவை சாதம் (26/12/2010) மற்றும் சுஜாதா


விகடன் பொக்கிஷம் பகுதியில் தலைவர் சுஜாதா பத்து வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்த "ரிசப்ஷன் 2010" என்ற கதையை படிக்க நேர்ந்தது. கே (GAY) மேரேஜ் பற்றிய ஒரு கதை. கிட்டத்தட்ட இன்றைய நிலைக்கு ஒட்டி வந்திருந்தது. ஒரு ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்வதாகக் கதை. ஆனால் அது முழுமையாய் நடக்க இன்னும் இருபது வருடங்களேனும் ஆகும்.

"உண்மைக்கு மிக நெருக்கமாய் கதை எழுதுவது என்பது கத்திமேல் நடப்பது போன்றது" என்று ஒருமுறை சுஜாதாவே சொல்லியிருந்தார். "அது உடனே உண்மை வாழக்கை வெளியில் நடந்து விடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்" என்று சொன்னார். ஒரு தேசியத் தலைவரின் படுகொலை பற்றிய சுஜாதாவின் கதை (பெயர் ஞாபகமில்லை) பிற்காலத்தில் ராஜீவ் காந்தி படுகொலை விஷயத்தில் நடந்தேறியது. அவரது விஞ்ஞானச் சிறுகதைகள் தொகுப்பில் உள்ள "திமலா" எனும் கதை, திருமலை திருப்பதிக்கு அனுமதி வாங்கி சுவாமி கும்பிடப்போகும் ஒரு ஹைடெக் தம்பதி பற்றிய கதை. அதுவும் இன்றைய காலகட்டத்திற்கு கிட்டத்தட்ட எழுபது சதம் நடந்தேறி விட்டது. திருமலாவுக்குச் செல்ல வேண்டும் என்றால் முன் அனுமதி தேவையாகி விட்டது.

கருப்பு, சிவப்பு, வெளுப்பு தொடர் வந்த போது குமுதத்திற்கும் சுஜாதாவிற்கும் எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை பலரும் அறிவார்கள். அதன் பின்னர் அது பெயர் மாற்றப்பட்டு ரத்தம் ஒரே நிறம் என்று வெளியானதும் சமீபத்தில் உயிர்மையில் தனிப்பதிப்பு கண்டதும் வரலாறு. "ஜில்லு" கதை வந்தால் போச்சு. அது இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் நடைபெறும் அணு ஆயுதப் போர் பற்றிய கதை. (கிட்டத்தட்ட அவர் வர்ணித்துள்ள கதைக் காட்சிகள் டாம் க்ருஸ் நடிப்பில் இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் War of the worlds மற்றும் வில் ஸ்மித்தின் I am legend திரைப்படத்திலும் காட்சிகளாக விரிகின்றன.

"ரிசப்ஷன் 2010" கதைக்கு ஆன்லைனில் அருமையான சில பின்னூட்டங்களும் வந்திருந்தன வாசகர்களிடம் இருந்து. சில சாம்பிள்கள் இதோ............... 1. தீர்க்கதரிசி. என்ன, 2020ல் இதில் உள்ள எல்லாமே நடந்து விடும்(.இயல்பாக) 2. அதுதானே பார்த்தேன் சுஜாதாவை தவிர வேரு யாரால் முடியும் மிக நன்ரு 3. தலைவர் தலைவர் தான்...'gay marriage; பத்தி 10 வருஷம் முன்னாடியே....ஹ்ம்ம் 4. சுஜாதா இதையும் முன்னேயே எழுதிவிட்டாரா.. அபாரம்!

எப்படி?? சுஜாதா சுஜாதா தான் இல்லையா?
------------------------------------------------------------
ஷங்கர் இயக்கத்தில் தயாராகப்போகும் "3 இடியட்ஸ்" தமிழ் ரீ-மேக்கில் சூர்யா நடிப்பது உறுதியாகி இருக்கிறதாம். இந்த கேரக்டருக்கு முதலில் பேசப்பட்டிருந்தவர் நமது டாகுடர் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்தில் டிவிடி, திருட்டு விசிடி பார்க்கும் அனைவர் வரை தெரிந்த ஒரு ரகசியம். முதலில் விஜய் நடிப்பதாக இருந்து, பிறகு சூர்யா நடித்த 'அயன்’, 'சிங்கம்’ படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற சென்ட்டிமென்ட்டில் "3 இடியட்ஸு"ம் ஹிட்தான் என்று இப்போதே குஷியில் இருக்கிறதாம் சூர்யா தரப்பு. அது தவிரவும் தெலுங்கு பதிப்பிலும் மகேஷ் பாபுவுக்குப் பதில் சூர்யாவேதான் இடியட்டாம்.
------------------------------------------------------------

ஏதோ யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு செமை மேட்டர் சிக்கியது. ராவணன் படத்தைப் பாருங்களேன். ப்ருத்விராஜ், ஐஸ்வர்யா ராய், விக்ரம் காம்பினேஷன் தான் படத்தின் அடிநாதத்தை நகர்த்தும் கதாபாத்திர முடிச்சு. அவர்களது வயதைப்பாருங்களேன். முறையே 28 (ப்ருத்விராஜ்), 37 (ஐஸ்வர்யா ராய்), 46 (விக்ரம் ). கிட்டத்தட்ட இந்த வரிசையில் ஒவ்வொருவருக்கும் ஒன்பது வயது வித்தியாசம். விக்ரமுக்கு காலாகாலத்தில் திருமணம் ஆகியிருந்து சீக்கரமே பையன் பிறந்திருந்தால் அவனுக்கு ப்ருத்விராஜ் வயது ஆகியிருக்கும் இல்ல.......................?
------------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

செவ்வாய், 21 டிசம்பர், 2010

கலவை சாதம் (22/12/2010)



நாஞ்சில் நாடன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறதாமே.. வாழ்த்துக்கள் ஐயா... அவரது கதைகளெல்லாம் பெயர் தெரியாத காலத்தில் படித்திருக்கிறேன். ஆனால் அவரை முழுக்க முழுக்க பரிச்சியப் படுத்தியது விகடன் தான். அதில் அவர் எழுதிய தீதும் நன்றும் தொடர் தான் அவரை ரசிக்க வைத்தது. பிற்பாடு இரு வருடங்கள் கழித்து நான் யூத்ஃபுல் விகடனில் சிலபல கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த போது ஒரு தீபாவளி சமயத்தில் யூத்ஃபுல் விகடனில் எழுதுபவர்களுக்கெல்லாம் ஒரு பரிசு கொடுக்கலாம் என்று இருக்கிறோம் என்று மெயில் வந்தது. என்னவென்று பார்த்தால், தலைக்கு மூன்று மின் புத்தகங்கள் பரிசு என்று ஒரு லிஸ்ட் அனுப்பி அதில் ஏதேனும் மூன்று புத்தகங்களை தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள்.

நான் டிக் அடித்தது நாஞ்சில் நாடனின் "தீதும் நன்றும்", அது தவிர கம்ப்யூட்டர் பற்றிய புத்தகம் ஒன்று, மேலும் யுகபாரதியின் "தெருவாசகம்". எல்லாமே விகடன் வெளியீடுகள். விகடனில் வெளிவந்து பிற்பாடு புத்தகமாக உருப்பெற்றவை. நாஞ்சில் நாடன் எழுதியதில் எனக்குப்பிடித்தது (கருத்து மட்டும் தான் நினைவிருக்கிறது, வரிகளை அப்படியே நினைவு படுத்திக் கூற முடியவில்லை, எனவே என் வரிகளில் தந்திருக்கிறேன்)

"இரண்டு மூன்று படங்கள் ஹிட் கொடுக்கும் ஒரு தமிழ் சினிமா கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம். சில வருடங்களில் எங்கேயோ போய்விடுவான் அவன். வருடத்துக்கு நூறு (அதிகபட்சம் ஆயிரம் வரை) மாணவர்களை உருவாக்கும் ஒரு நல்லாசிரியருக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்த மனுஷன் மூன்று கோடியை சேர்க்க 3000 மாதங்கள் ஆகும். அதாகப்பட்டது சுமார் 250 வருடங்கள், எப்படி இருக்கிறது கதை? அப்புறம் எப்படி நாடு உருப்படும்?

------------------------------------------------------

அதே போல் சச்சினுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட உள்ளதாமே.. சூப்பர் இல்ல.. இந்த சச்சின், ஏ. ஆர். ரஹ்மான் போன்ற ஆட்கள் எல்லாம் இந்தியாவில் பிறக்க நாம் தான் அதிர்ஷ்ட சாலிகள். என்னமோ போங்கள் இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் விருது கொடுப்பதை விட்டு பிளைட்டில் புட்போர்டு அடித்த மாமனிதர்களுக்கெல்லாம் டாகுடரு பட்டம் கொடுக்கும் மாங்காய்களையெல்லாம் எந்த கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவதென்றே தெரியவில்லை. அந்தப் பட்டத்தைக்கொடுத்த மேதாவிகள் மேல் பாராவில் நாஞ்சில் நாடன் வருத்தப்பட்டு சொல்லியிருக்கும் பரிதாப வாத்தியார் ஜீவன்களில் கோஷ்டியைச் சேர்ந்தவை தான்.

------------------------------------------------------

ரத்த சரித்திரம் பாக்கணும். ரொம்பவும் ரத்தமாக இருக்கிறது என்றார்கள். பயமாயிருக்கிறது. பார்க்கலாமா? பார்த்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள். ஏழாம் அறிவு எப்பங்க வரும்?

------------------------------------------------------

அப்பபபபபபடிடிடிடியேயேயேயே வலை மேய்ந்து கொண்டிருந்த போது............. ஒரு கில்மா வெப்சைட் லிங்க் கிடைத்தது. அடல்ட்ஸ் ஒன்லி.. செமையாக இருக்கிறது. லிங்க் வேண்டுபவர்கள் என் ஈ.மெயில் முகவரியை கண்டுபிடித்து ரிக்வஸ்ட் அனுப்பினால் அந்த லிங்க்கைத் தரத்தயார். உண்மையிலேயே கிளுகிளு, ஜிலுஜிலு லிங்க். லேட் பண்ணாதீங்க... போனா வராது, பொழுது போனா கிடைக்காது. அதைப்பார்த்துட்டு நான் கெட்டவன்னு முடிவு பண்ணிணீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை....

------------------------------------------------------



இதை டைப்பிக் கொண்டிருக்கும் போது சன் டிவியில் "கடல் மேலே பனித்துளி" ஓடிக்கொண்டிருக்கிறது வாரணம் ஆயிரம் படத்தில் இருந்து..... அட்டகாசமான மெலடி... சூப்பர்ப் பிக்சரைசேஷன்.

விஷூவலைசேஷனில் லேசாக ஆளவந்தான் வாசனை வந்தாலும் இது ரொம்ப நன்றாக இருக்கிறது. அதில் கமல் தான் தெரிவார். ஆனால் இந்தப்பாட்டில் சூர்யா தெரியவில்லை. கல்யாணம் முடிந்து ஆறு மாதத்திற்குள் ஹனிமூன் போன ஒரு ஜில் ஜோடியின் பின்னாடியே கேமராவை தூக்கிக் கொண்டு போனது போல் இருக்கிறது. அந்த ஜோடியின் சின்னச் சின்ன சீண்டல்கள், சிணுங்கல்கள், கெஞ்சல், கொஞ்சல், வெட்கம், ஆசை, கூச்சம், பயம், தயக்கம், லேசாய் முளைக்கும் தைரியம் என எல்லாவற்றையும் அழகாய் காட்சிப் படுத்தியிருக்கிறார் கெளதம் மேனன்.. ஸாரி கெளதம் வாசுதேவ் மேனன்..

ஏற்காடு லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் போனதெல்லாம் நினைவுக்கு வருகிறது........ ம்ஹ்ஹ்ம்ம்ம்...... கல்யாணத்துக்கு அப்புறம் ஜோடியாக ஒரு தடவை போய்வர வேண்டும். இந்தப்பாட்டில் சூர்யா எவ்வளவு உயரமாக, கம்பீரமாக, ஃபிட்டாக, ஆறு பையோடு (சிக்ஸ் பேக்கோடு) இருக்கிறார். சூப்பர் போங்கள்.

அய்யய்யோ கடவுளே, இந்தப்பாட்டு முடிந்தவுடனே சிங்கம் பாட்டு.

ஹேய்... எவ்ரிபடி லிசனு சம்பா, சம்பா, கும்பா... சம்பசம்பா.. ஹேய்... காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே... காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே..........ன்னு பாடிக்கொண்டே வருகிறார் சூர்யா... அனுஷ்காவுடன்....

அய்யய்யோ. என்ன ஆச்சு. திடீரென்று சூர்யா குள்ளமாகி விட்டார்? எப்படி? போச்சு போச்சு.. டிவியில் ரிலே ப்ராப்ளமா? எதும் ரிப்பேரா....? அப்பா அந்த ரிமோட்ட எடு.. வி டோன் அட்ஜஸ்ட் பண்ணேன்...... என்னாச்சுன்னு தெரியல.........

------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

------------------------------------------------------

திங்கள், 20 டிசம்பர், 2010

அப்பாடா டேட்டா கார்ட்.......... அப்புறம் சாருவின் "தேகம்"

எப்படியோ ஒரு வழியாக வேலை முடிந்து டேட்டா கார்ட் திரும்ப வந்து விட்டது. உடைந்த கையை மீண்டும் ஒட்ட வைத்தது போல் இருக்கிறது.

வந்த பிறகு ஒன்றும் பெரிய வெட்டி முறிக்கிற வேலை இல்லை. ஆனால் பயங்கர ரிலாக்ஸாக இருக்கிறது. மூவி டவுன்லோட், ஸாங் டவுன்லோட் என்று எதையும் செய்ய முடியாத படியான (ஆபீஸில் இருந்து கொடுக்கப்பட்ட) கனெக்ஷன் இது். ஆனால் டேட்டா கார்ட் இல்லாமல் ஆபீஸ் வேலை பார்ப்பதென்பது தான் ரொம்பவும் கொடுமை.

டேட்டா கார்ட் இல்லாத போது ஒவ்வொரு முறை ஈ.மெயில் அனுப்புவதற்காகவும் பிரவுஸிங் சென்டரில் போய் கியூவில் நின்று கொண்டு, அதுவும் லேப்டாப்பில் (தான் எம்.எஸ்.அவுட்லுக் போட்டு வைத்திருக்கிறேன். அதனால் லேப்டாப்பில்) கனெக்ட் செய்து கொடுங்கள் என்றால் சம்பந்தப்பட்ட சிஸ்டத்தில் அமர்ந்திருப்பவர் எழும் வரை உட்கார்ந்திருக்க வேண்டும். உட்கார்ந்திருக்கும் போது எதாவது ஃபைலை நோண்டலாம் என்றால் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விடும். சார்ஜ் போடலாம் என்றால் சார்ஜரை மறந்து விட்டு வந்திருப்போம். சார்ஜரை கொண்டு வந்திருந்தால் சார்ஜ் போடும் சாக்கெட் நமக்குத் தேவையான சிஸ்டத்தை விட்டு மிக தூரத்தில் இருக்கும். இருக்கும் சார்ஜை வைத்துக்கொண்டு பென்டிங் மெயில்களை அனுப்பி விட்டு புதிய மெயில்களை டவுன்லோட் செய்து கொண்டு செல்ல வேண்டும்.

வீட்டிலிருந்து பத்து நிமிட நடை தானே என்று ஈஸியாகச் சொல்லி விடலாம். ஆனால் பத்து நிமிடம் என்றால் ஷார்ப்பாக பத்து நிமிடமா ஆகும்? இல்லை. ஒவ்வொரு முறையும் கேஸை ஆஃப் செய்து விட்டு, எல்லா லைட்டயும் ஆஃப் செய்து விட்டு, ஹீட்டரை ஆஃப் செய்து விட்டு, வீட்டைப்பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு என்று இருபது நிமிஷ வேலை வைக்கும். போக இருபது, வர இருபது. கணக்குப்போட்டுக் கொள்ளுங்கள்.

இதில் மழை வந்தால் போச்சு. மழையிலேயே நனைந்து கொண்டே வீட்டிலிருந்து நடந்து வந்து மெயில் அனுப்பி விட்டு திரும்பி வீட்டுக்குப்போக வேண்டும். நாம் நனையாவிட்டாலும் லேப்டாப் நனையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிரவுசிங் சென்டர் 9.15க்கு க்ளோஸ். ஆக எட்டேமுக்காலுக்குள் போய் நிற்கவேண்டும். இல்லாவிட்டால் ஜென்டிலாக ஸாரி சொல்லி விட்டு ஷட்டரை இறக்கி விடுவார்கள். அப்புறம் பத்து மணிக்கு மேல் போய் சாப்பாட்டுக்கச்சேரியை ஆரம்பிக்க வேண்டும். ஓசூரில் மகா பிரச்சினை ஒன்று உண்டு அது குளிர். நடுக்கி எடுக்கும் குளிர். அதற்கு பயந்து கொண்டே ஆளாளுக்கு ஒன்பது மணிக்கே கடையை சாத்தி விட்டு போய் விடுகிறார்கள். பிறகு சிங்கி தான். அதாங்க சோத்துக்கு. மேகி, கெலாக்ஸ், ரெடி டு ஈட் வகையாக்களை கண்டு பிடித்த புண்ணியவான்களை கோயில் கட்டி கும்பிட வேண்டும் போலத்தோன்றும்.

எப்படியோ போங்கள். வந்து விட்டது அல்லவா? மற்ற வேலைகளை பார்க்கத் துவங்கலாம். சப் கலெக்டருக்கு டெமோ எடுத்தது, நீயா நானாவில் கலந்து கொண்டது, பாண்டிச்சேரி போய் பேக் வாட்டர்ஸ் போய் வந்தது, மைனா படம் பார்த்தது என இன்னும் எழுத வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

ஆரம்பிக்கலாமா? ரெடி ஜூட்.

-----------------------------------------------------

சாருவின் தேகம்



சாருவின் தேகம் நாவல் நன்றாக இருக்கிறதாமே. ப்ளாக் வட்டாரம் முழுக்க ஒரே டாக் தான். பகீரென்று இருக்கிறது. திகீரென்று இருக்கிறது என்று. சாருவின் முந்தைய கதாபாத்திரங்களான சூர்யா, பெருமாள் வரிசையில் சேர்வானா தர்மா? பார்க்கலாம். சரோஜாதேவி நாவல் என வேறு மிஷ்கின் கிளப்பி விட்டுவிட்டுப் போய் விட்டார். சாருவின் ப்ளாக்கில் போட்டுக் கிழி கிழி என்று கிழிக்கிறார் மிஷ்கினை. அவருடைய அடிப்பொடிகள் எல்லோரும் தத்தமது ப்ளாக்கில் சப்போர்ட்டாக எழுதிக்குவிக்க ஐநூறு புத்தகங்களைத் தாண்டி விற்றுக்கொண்டிருக்கிறதாம் அது. என்ன ஒன்று? விலைதான் தொண்ணூறு ரூபாய். ஏழு ரூபாய்க்கு மாத நாவலும் அதையும் செகண்ட் ஹாண்டாக மூன்று ரூபாய்க்கு வாங்கிப்படிக்கும் என்னை மாதிரி கஞ்சப்பிசுனாறிகளுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். பார்க்கலாம். யாராவது வாங்காமலா போய்விடப்போகிறார்கள்? ஓசி வாங்கிப் படித்துக்கொள்வோம். ஒரு வேளை மிஷ்கின் மேலான தூற்றலே தேகம் நாவலுக்கான பப்ளிசிடியோ என்று தான் எனக்குத் தோன்றுகிறது.
------------------------------------------------------
படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...
------------------------------------------------------

வியாழன், 16 டிசம்பர், 2010

டாகுடரு விஜய் வாழ்க, சாரு நிவேதிதா?

போன வாரம் வலை மேய்ந்து கொண்டிருந்த போது பார்த்(துத் தொலைத்)தேன். நம்ம ஊரு நடிகர் டாகுடர் விஜய்க்கு கேரளாவில் சிலை வைத்துள்ளார்களாம் அவருடைய அம்மாநில ரசிகர்கள். நம்மூரு டாகுடரு ரசிகர்களுக்கு ஒரே சந்தோஷம் தான் போங்கள். இன்னும் ஒரே மாதம் தான். போதும். இங்கேயும் தமிழ்நாட்டில் சிலை வைத்து விடுவார்கள்.

அந்தக் காமெடியை நீங்களே பாருங்கள்.

இதைப்பார்க்கும் போது எல்லாருக்கும் என்ன ஞாபகம் வருமோ தெரியாது. எனக்கு இந்த சாரு நிவேதிதா இருக்கிறாரே சாரு நிவேதிதா அவரது ஞாபகம் தான் வந்தது எனக்கு. ஆ....... ஊ.......... என்று குதிப்பாரே அடிக்கடி. கேரளாவில் எல்லாரும் படிப்பாளிகள்.. கேரளாவில் எல்லாம் புத்திசாலிகள். கேரளாவில் நடிகனைக்கொண்டாட மாட்டார்கள். கேரளாவில் எல்லாரும் என்னைத்தான் படிப்பார்கள்....... கலா கெளமுதியில் கட்டுரை கேட்பார்கள். மம்முட்டியே வரிசையில் நின்று வேடிக்கை பார்ப்பார். அங்கே நடிகன் எல்லாம் பிறகுதான் என்றெல்லாம் கூவுவார். நாமும் நம்பிக்கொண்டு அவரது திட்டுக்களை படித்துக்கொண்டிருப்போம். பிறகென்ன செய்ய முடியும்? அவர் சொல்வது உண்மையா பொய்யா என்று கேரளாவுக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு போய் பார்த்து விட்டா வரமுடியும்? அவர் இப்போது இதற்கு என்ன சொல்லப்போகிறார்.

அவர் சொல்வதைப்பார்த்து நான் ரொம்ப நாளாக கலா கொளமுதி தான் கேரளாவில் நம்பர் ஒன் பத்திரிகை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது எங்க தெரு முக்கில் ஒரு புது நாயர் கடை போட்டிருக்கிறார். அவர் கடையில் பாட்டெல்லாம் நன்றாக இருக்கும். நேயர் விருப்பம் போல நாயர் விருப்பம். அவர் மலையாள மனோரமா தான் நம்பர் ஒன் என்கிறார். சாருவை விட அவரது டீக்கு ரசிகர்கள் அதிகம். இப்போ கலா கெளமுதியா மலையாள மனோரமாவா? எது பெரிசு...?



இப்போது அங்கே விஜய்க்கு சிலை. ரைட்டு. யார் முன்னேறுகிறார்களோ இல்லையோ..... சினிமாக்காரன் இன்டர்நெட்டை விட வேகமாக காற்றில் கலந்து பரவுகிறான். ஒரு நடிகனுக்கு சிலை வைக்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இருக்கிறதென்றால் சோத்துக்காக என்ன வேலை பார்க்கிறார்கள். அல்லது விஜய் அவர்கள் ஏதேனும் மாதாந்திர உதவித்தொகைத்திட்டம் வைத்து அவர்களுக்கெல்லாம் உதவுகிறாரா? (அப்படி இருந்தால் நம்ம சாருவுக்கும் அவரது பிராண்ட் ரெண்டு பாட்டில் பார்சல்ல்லல்ல்ல்ல.....................)

இங்கே தமிழ்நாட்டில்? நடிகர்களை முதலமைச்சராகவே ஆக்கும் அளவு வெறித்தனமாக ரசிகத்தன்மை இருந்தாலும் சிலை வைக்கும் அளவுக்கெல்லாம் போகாத ஆட்கள் நம்ம தமிழ்நாட்டு ஆட்கள். (என்று பெருமை பீத்த முடியவில்லை. குஷ்புவுக்கு கோவில் கட்டியதைத்தவிர என்று வேண்டுமானால் சொல்லலாம். அது ஒரு விதிவிலக்கான கரும்புள்ளி. அதுவும் கேபிள் டி.விக்களும் இன்டர்நெட்டுகளும், வெறெந்த பொழுதுபோக்குகளும் ஆக்கிரமிக்காத காலம்) அப்புறம் கோயில் இடிக்கப்பட்ட பிறகு கற்களை நக்மாக்காரர்கள் வாங்கிப்போனதாகக் கேள்வி. பிறகு திரிசா கோஷ்டி களம் இறங்கி கற்களைப் பறிமுதல் செய்தார்களாம். (நம்ம திரிசாவையும் சாருவுக்கு பிடிக்கும் போலிருக்கிறது. ஒரு முறை திரி ஆங்கில மேகஸின் ஒன்றுக்கு குனிந்து நிமிர்ந்து வளைந்து நெளிந்து கொடுத்த போஸ்களின் வீடியோ கிளிப்பிங்களை தன் பிளாக்கில் கொடுத்து திரி யின் புகல் பரப்பினார்)

அடப் போங்கப்பா............. தூக்கம் வருது.......
(என்ன சாமி. புத்தக விழாவுல எம்புட்டு புக்கு வித்துச்சாம்?)


டெயில் பீஸ் குயில் குஞ்சு: சார், ஒரு டவுட்டு. ஒரு லட்சத்து எழுபத்தஞ்சாயிரம் கோடிக்கு எத்தனை சைபர் சார்..? அப்புறம் டூ ஜி, திரீஜி னா என்ன சார்?
நான்: போய் புள்ளைங்களைப்படிக்க வைங்கடா, கப்பித்தனமாப்பேசிகிட்டு.

------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....

எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
------------------------------------------------------

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

தி.நகரும் அங்காடித்தெருவும் கூடவே நானும்

பாதியில் நின்ற படத்தையோ பாதியில் நின்ற படைப்பையோ பார்த்திருக்கிறீர்களா? அந்த அனுபவம் நமக்கு என்றைக்கும் கிடைக்காது. எப்போதும் ஒரு முழுமை பெற்ற படைப்பே நமக்கு பார்க்கக் கிடைக்கும். என் பங்காக பாதியில் நின்ற படைப்புக்கு இதோ ஒரு சாம்பிள்.

தோன்றும் விஷயங்களை அப்படியே ஒன்றிரண்டு பாராக்கள் டைப்படித்து வைத்துக்கொள்வது நம் வழக்கம். பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மசாலாக்கள் சேர்த்து சேர்த்து பெரிதாக்கி அதனை முழுக்கட்டுரை ஆக்க சிலபல நாட்கள் பிடிக்கும். ஒரேயடியாக உட்கார்ந்து ஒரே கட்டுரையாக எழுவதெல்லாம் ஒரு சிலவே...

அங்காடித்தெரு படம் வரும் முன் எழுத ஆரம்பிக்கப்பட்ட கட்டுரை இது. அப்போது சென்னையில் வேலை. ரூமுக்குப் போக தவுசண்ட் லைட்ஸில் இருந்து டி.நகர் வரை பஸ்ஸில் வந்து ரங்கநாதன் தெருவை குறுக்கே கடந்து மாம்பலம் போய் அங்கிருந்து டிரெயினில் கிரோம்பேட்டை போகவேண்டும்.

ரங்கநாதன் தெருவில் தினசரி கவனிக்கும் விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக கவனித்து கட்டுரைக்கு பேட்ச் ஒர்க் செய்து கொண்டிருந்தேன். முழுதாக எழுதி முடித்தவுடன் ஆனந்த விகடனுக்கு அனுப்பத்திட்டம். ஆனால் என் நேரமோ என்னவோ நான் கட்டுரையை முடிக்கு முன் அங்காடித்தெரு படம் வெளிவந்து விட்டது. படம் வந்தபின் என்னவோ எனக்கு இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து முடிக்க மனமில்லை. அப்படியே விட்டு விட்டேன். என்னமோ படத்தைப்பார்த்து விட்டு கட்டுரை எழுதினாற்போல் இருக்கும்.

(இடையில் ஜெயமோகனின் புத்தக வெளியீட்டு விழாவில் வசந்தபாலனைப்பார்த்தேன். "லோகி" புத்தகத்தை வெளியிட்டு விட்டு மறைந்த இயக்குனர் லோகித தாஸ் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் மேலிருந்த "வெயில்" வெளிச்சம் குறைய ஆரம்பித்திருந்த நேரம் அது. அடுத்த படமான அங்காடித்தெரு நீண்ட நாட்களாக இழுத்துக்கொண்டிருந்த நேரம். படம் எப்போது தான் வெளிவரும் என்று அவரிடம் கேட்டதற்கு மேலே கையைக்காட்டி என் கையில் ஏதும் இல்லை என்றார்.)



அவரும் தினசரி தி.நகருக்குப் போய் அங்கே இருப்பவர்களை அவதானித்து படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளை செய்ததாகப் படித்தேன். இக் கட்டுரை குறுக்கே பல இடங்களில் இணைப்பு இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கும். உட்கார்ந்தால் இரண்டு மணி நேரம் தேவை அங்கங்கே வரிகள் சேர்த்து செயின் லிங்க் கொடுப்பதற்கு.

தலைப்பு கூட பாதியில் நிற்கிறது. தி.நகரும் அங்காடித்தெருவும் என்று வைத்துக்கொள்ளலாமா? படியுங்கள். படித்து விட்டுச் சொல்லுங்கள்...

---------------------------

தி.நகரும்……………………..

திகுதிகுவெனத் தீப் பற்றியது போல் பரபரத்துக் கொண்டே இருக்கிறது தி.நகர்.

தி.நகர் எனச்சுருக்கப் பட்ட தியாகராய நகர் எனும் சென்னையின் மிக முக்கிய வர்த்தகக்கேந்திரம் இது. குண்டூசி முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாமே கிடைக்கும் என வழக்கமான வாக்கியத்துடன் ஆரம்பிக்கக் கூடாது என நினைத்தாலும் எல்லாமே இங்கே கிடைக்கும். தியாகராய நகர் ஏன் தி.நகர்னு ஆச்சு? இங்க சென்னைல எல்லாமே அப்படித்தான். கலைஞர் கருணாநிதி நகர் தான் கே.கே நகர், மகாகவி பாரதியார் நகர் இப்போ எம்.கே.பி நகர், அதே மாதிரி தியாகராய நகர் தான் தி.நகர்.

"எல... என்னல இது.. எங்கிட்டு திரும்பினாலும் சனக்காடாவுல்ல கெடக்கு" எனப் பிரமிக்கும் கிராமத்து அப்பாவை சும்மா வாப்பா என இழுத்தபடி நடக்கிறார் ஒரு ஐடி இளைஞர்..

போ, போ, போ நிக்காத நகந்துகிட்டே இரு, டேய் ஆட்டோ, இங்க நிறுத்தக் கூடாதுன்னு சொன்னா கேக்க மாட்டியா? கேஸ் புக் பண்ணாதான் அடங்குவியா? மூங்கில் லத்தியால் ஓங்கித் தட்டியபடியே உறுமுகிறார் ஒரு சின்சியர் போலீஸ்மேன்.

மொளகா பஜ்ஜி எங்கன கெடைக்கும் என்ற அம்மணியின் கேள்விக்கு பஸ் ஸ்டாண்டு வெளியில போயிடு பெரீமா. அங்க ஒரு பஜ்ஜிக்கடை கீது. என்ற பதில் வரும்போதே தே.. சும்மாயிரு. ஊருக்கு எத்தனை மணிக்கு வண்டின்னு நான் யோசிட்டு இருக்கேன். மொளகா பஜ்ஜி வேணுமாம் இவுளுக்கு என்று சடைத்த படியே இழுத்துக் கொண்டு நடக்கிறார்

தி.நகர் என்றாலே ரங்கனாதன் தெரு தான் எனுமளவு கூட்டம். அதிலும் திறந்து விடப்பட்டுள்ள புதிய பாலம் சரியாக ரங்கனாதன் தெருவின் துவக்கத்திலேயே வந்து முடிவதால் கன்ட்ரோல் செய்ய முடியாத அளவு ஜனக்கூட்டம். மாதம் ஒருமுறை டிராபிக்கை புதிய புதிய வழிகளில் திருப்பி விட்டு கூட்டத்தையும், டிராபிக்கையும் சமாளிக்க முயற்சிக்கிறது போலீஸ். ரங்கனாதன் தெரு முழுக்க தலைகள் மட்டுமே தெரிகின்றன.

என்னடா மாப்ள இது? இங்கயும் ஒரு சரவணா ஸ்டோர்ஸ். டி.நகர் முழுக்க சரவணா ஸ்டார்ஸ் இருக்கா என்ன? இனிப்பில் ஆரம்பித்து, துணிக்கடை, நகைக்கடை, பாத்திரங்கள் என ரங்கநாதன் தெரு முழுக்க வியாபித்து இருக்கின்றன சரவணா ஸ்டோர்ஸூம், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸூம். அது போக நூற்றுக்கணக்கான கடைகள். முப்பதடி இருந்த சாலை சுருங்கி பத்தடி ஆகிப்போயுள்ளது. சமீபத்திய சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்தின் விளைவாக கோர்ட் உத்திரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் மீண்டும் மெள்ள மெள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன.

செருப்பு வாங்க காதிம்ஸிலும், பாட்டாவிலும் நுழையும் மேட்டுக்குடி வர்க்கம். நூறு ரூபாய் சேலையைக் கூட நடைபாதையில் பேரம் பேசி எண்பது ரூபாய்க்கு வாங்கும் கீழை வர்க்கம், மூணு பத்து மூணு பத்து சார் மூணு கர்ச்சீஃப் பத்து ரூபா சாரில் துவங்கி, இருபது ரூபாய், இருபது ரூபாய் டி.சர்ட்டுகள் வரை வாங்கி மாட்டி அழகு பார்க்கும் மத்திய வர்க்கம் எனக் கலவையாய் நகர்ந்து கொண்டே இருக்கும் ஜனத் திரள்.

பழம் வாங்கியபடியே சென்ட்ரல் செல்வதற்கு வழி விசாரிக்கும் வெளியூர் கஸ்டமருக்கு "இதோ இருக்கு பாரு, மாம்பலம் ரெயில்வே ஸ்டேஷன், அங்க போ சார். பார்க் ஸ்டேஷன்னு சொல்லி டிக்கெட் எடு. இறங்கி மெயின் ரோட்ட கிராஸ் பண்ணியானா சென்டிரல் தான். சப்வே இருக்கும் சார். அதுல போ. ஊர் ஞாபகத்துல அங்க போய் ரோட்டுக்கு குறுக்க கிராஸ் பண்ணிடாத. போலீஸ் ஃபைன் போட்
பத்து ரூபாய் ஃபேன்ஸி கம்மல் வாங்கித்தரும் காதலன்.

அம்மா எனக்கு கரும்பு ஜூஸ், அவனுக்கு ஐஸ்கிரீம் தான் வேணுமாம். ஒன்பதரை மணி ஆனவுடன் துணி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனங்கள் வந்து நிற்கின்றன.

எஸ்.கே.சி மாதிரி பிராண்ட் ஷோரூம்லாம் அந்தப்பக்கம் இருக்கு. இதெல்லாம் நம்ம ரேஞ்சுக்கு. உள்ளாற போய் பாரு. சத்யா பஜாருன்னு ஒன்னு கீது. ஜீன்ஸூ, டி.சர்ட்டு, பர்பியூமு, புதுப்பட சிடி, பேக்கு, பெல்ட்டு, பேன்ஸி அயிட்டம்னு இன்னா வேணும் உனுக்கு? எல்லாம் கிடைக்கும்.

"இவ்ளோ பெரிய பாலத்தை எப்பிடிறா கட்டியிருப்பானுக? இம்மாம் கூட்டம் வரும்போது எங்கன நின்னு கான்கிரீட்லாம் போட்டிருப்பாங்க?" உஸ்மான் ரோடை ஊடறுத்து ஓடும் புதிய மேம்பாலத்தை அண்ணாந்து பார்த்தபடியே போகிறது ஒரு கும்பல். "ஏன் பச்ச பெயிண்ட் அடிச்சுருக்காங்க. அது அம்மா கலராச்சே, கலைஞருக்குன்னா மஞ்ச பெயிண்டுல்ல அடிச்சிருக்கணும்?" என்று பாலத்தில் பாலிடிக்ஸை மிக்ஸ் பண்ணியபடியே போகிறது ஒரு கரைவேட்டிப்பெருசு.

கரும்பு ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ், இட்டாலியன் சாஃப்டி ஐஸ்கிரீம், பானி பூரிக் கடைகள், நாகற்பழம், சமோசா, மசால் சோடா, வெள்ளரிக்காய், புரூட் மிக்ஸ், மசால் பொரி, ஆட்டுக்கால் சூப் என அனைத்து ஐட்டங்களையும் விற்கிறார்கள் நடைபாதை வியாபாரிகள். இந்தக் கடைக்கெல்லாம் வாடகை கிடையாதுல்ல, எனக் கேட்கும் பெண்மணியிடம் அட நீ வேற சங்கத்துக்கு காசு, டெய்லி டோக்கன், போலீஸ் மாமூல், ரெளடிங்க தண்டல்னு எல்லாத்துக்கும் அழுவணும்.



போத்தீஸ் வாசலில் நின்றபடி சரவண பவன் எங்க இருக்கு என்று கேட்ட பப்ளிக்கிடம், உக்காரு சார், 20 ரூபா குடு, கொண்டு போய் விடுறேன் எனும் ஆட்டோக்காரரை விரட்டுகிறார் மற்றொரு ஆட்டோக்காரர். சார் நீங்க போங்க சார், நடக்குற தூரம் தான், இப்பிடியே லெஃப்டுல மூணு நிமிசம் நடந்தியானா சரவணா பவன் வந்துடும். டேய் ஏண்டா ஏமாத்துற அவுங்கள.

இடித்தபடி நகரும் கும்பலில் எரிச்சலுற்று "இதுக்குத்தான் ஞாயித்துக்கெழம வரவேணாம்னு சொன்னேன் கேட்டியா?" எனக்கூறியபடியே நடக்கும் ஒரு நடுத்தர வயது அப்பாவிடம் "எப்ப வந்தாலும் இதே கூட்டம் இருந்துகிட்டு தான் இருக்கும், புலம்பாம வாப்பா" என்றபடி நடக்கும் ஒரு கல்லூரி மாணவி.

ரங்கநாதன் தெருவில் ஒன்பதரை மணிக்கு நைட் இட்லிக்கடைகள் முளைத்திருக்கின்றன. பர்ச்சேஸ் முடித்து ஊர் செல்லும் அவசரத்தில் ஓடும் மக்கள், வேலை முடிந்து போகும் இளைஞர்கள், மாம்பலம் ஸ்டேஷன் வரும் இளைஞர்கள் என கலவையான கும்பல் மொய்க்கிறது. நாலு இட்லி கொடுப்பா என்பவரிடம் அஞ்சு இட்லியா வாங்கிக்கோ. இட்லிக்கு சேர்வையா? சாம்பாரா? என்றபடியே அள்ளி ஊற்றுகிறார் சர்வர் ப்ளஸ் சேல்ஸ்மேன் ப்ளஸ் மாஸ்டர் ப்ளஸ் ஓனரான வண்டிக்காரர். சேர்வைன்னா என்ன? கறிக்குழம்பா? குருமாவா? ரெண்டும் இல்லப்பா குடல் குழம்பு. அந்தா மொதக்குது பாரு குடலு.

தடதடத்தபடி கடந்து செல்கிறது ரயில்.

------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....

எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
------------------------------------------------------