புதன், 13 ஜனவரி, 2021

கும்பகோணம் அம்மா ஊர்.


கும்பகோணம் அம்மா ஊர். செல்லுமிடமெல்லாம், எனது சுயத்தை இழந்து "கங்கா பையன்" என்றே அழைக்கப்படுவேன். எல்லா இடங்களிலும், ஊர்களிலும் கிடைக்கும் சார், வாங்க, போங்க மரியாதைகள் கிடைக்காது.

"நீ என்ன பண்றே? எங்கே இருக்கே? சாப்பிட்டுட்டுப் போடா" வகையறாக் கேள்விகளும் உரையாடல்களும் தான். அவையும் மிகவும் பெருமிதமாகவே இருக்கும். "உங்க அம்மா என் ஃப்ரெண்டு தெரியுமா? உங்க அம்மா எங்க பக்கத்து வீடுதான், உங்க அம்மாதாண்டா எனக்கு மணப்பெண் தோழி" போன்றவற்றையும் எதிர்கொள்வேன். அம்மா எத்தனையோ பேருக்கு பல விதங்களில் சிறிதும், பெரிதுமாக உதவியிருக்கிறார். வாய் அதிகம் என்பதால் நிறைய நண்பர்கள்.
நான் என்ன வேலை செய்கிறேன் போன்ற விபரங்கள் தெரிந்ததும் அவர்களின் பெருமிதமும் கூடும். "பாரேன், கங்கா பையன் நல்லா இருக்கான்" என அந்தப் பெருமிதத்தின் கிரெடிட்டையும் "அம்மா"வுக்கே தருவார்கள்.
அந்தப் பெருமிதத்தில் கிடைக்கும் மனப் பூரிப்பே வருடத்திற்கு இரு முறையேனும் என்னை கும்பகோணம் செல்ல வைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக