செவ்வாய், 20 ஜூன், 2017

ஹாவேரி



2016 ஜூன் 16 ஆம் தேதி ஃபேஸ்புக்கில் எழுதியது.

கர்நாடகாவில், ஹாவேரி என்றொரு ஊரில் ஒரு பள்ளியில், ஆசிரியைகளுக்குப் பயிற்சி வகுப்பு எடுக்கப் போயிருந்தேன். அதுவே மிகச் சிறிய ஊர். அதிலிருந்து இன்னும் 40 கி.மீ உள்ளே தள்ளிப் போய் ஒரு கிராமத்தில் இருந்தது பள்ளி. அந்தக் கிராமமும், பள்ளியும் இருந்த நிலையைப் பார்த்தால் அந்தப் பள்ளியைத் தாண்டி அடுத்த காம்பவுண்டு தான் உலகத்தின் எல்லை என்பது போல இருந்தது.
.
இரண்டு நாள் வகுப்பு. முதல் நாள் 10 ஆசிரியைகள் வந்தால் இரண்டாம் நாள் அதில் மூன்று பேரைக் காணவில்லை. என்ன சார் என்றால், பி.ஏ எக்ஸாம் எழுதப் போயிருக்காங்க சார் என்று கேஷூவலாக பதில் வந்தது.
.
இங்கே பள்ளிகளில் ஆசிரியைகளுக்கு அவர்களின் படிப்பு தவிர பி.எட் இல்லை என்று புலம்பல் வெகுவாகக் கேட்கிறது. அய்யா, அங்கே ஒரு சாதாரண டிகிரி கூட இல்லை. பன்னெண்டாப்பு படித்த லோக்கல் பிள்ளைகளை ஆசிரியைகளாக வைத்துப் பள்ளி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே கர்நாடகாவில் கல்வி சதவிகிதம் மிகக் குறைவு.
.
இதே போல் இன்னும் இரு அனுபவங்களுக்குப் பிறகு, பெங்களூர் என்ற ஒற்றை நகரத்தை வைத்துக் கொண்டு கர்நாடகர்கள் நம்மையெல்லாம் சீன் காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று நன்றாகப் புரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக