வெள்ளி, 31 ஜூலை, 2020

ரேஷன் கார்டின் உபயோகம் தான் என்ன?

எங்க ரேஷன் கார்டு ஆல்ரெடி யூஸ்லெஸ்ஸா தான் இருக்கு. வெறும் சக்கரை மட்டும் தான் போட்றாங்க. மாசம் 5 கிலோ சக்கரையை வாங்கித் தின்னு சுகர் பேஷண்ட் ஆகவா? அதுலயும் எறும்பு ஏறுனது, மழையில நனைஞ்சது, சாக்கு நிறம் ஏறி டல் கலர் ஆனதுன்னு இன்னும் அந்தக் கால ஸ்டைல்லயே தான் போடுறாங்க.
மத்தபடி இரண்டு மாசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு கிலோ துனா பருப்பு, ஒரே ஒரு லிட்டர் மெக்கானிக் ஷாப் குருடாயில் கலர்ல ஒரு பாமாயில். அதுகளும் ஸ்டாக்கும், அதிகாரியம்மாவுக்கு மனசும் இருந்தா மட்டுமே. மூணு மாசம் தொடர்ந்து எதுவுமே வாங்காமல் விட்டால் கார்டு காலாவதி ஆகி விடும் என்பதால் எதையாவது ஒன்றை அப்பப்போ சும்மானாச்சுக்கும் வாங்கி கார்டை உயிர்ப்பாக வைத்திருக்கேன். அவ்ளோ தான். சரி விடுங்க.
"ரேஷன் கார்டு எந்த ஒரு அடையாள அட்டையாகவும் ஏற்றுக்கொள்ளப் படாது"ன்னு அனைத்து பேங்க் குகளும் சொல்லியாச்சு. இன்ஷூரன்ஸ், போஸ்ட் ஆபீஸ்களிலும் ஏத்துக்க மாட்டேன்கிறாங்க. ஆதார் கார்டை இணைக்கிறேன், ஸ்மார்ட் கார்டு ஆக்குறேன்கிற பேர்ல என் தங்கமணி ஆதார் ஸ்கேன் ஆகாம அவங்க பேரையும் தூக்கியாச்சு. அப்பாரு போய்ச்சேர்ந்ததும் அவர் பேரையும் தூக்கியாச்சு. ஆகக்கூடி......... அக்கார்டிங் டு தி ரேசன் கார்டு, என் குடும்பத்தில் நான் மட்டும் தான் இருக்கேனாம்.
இப்போ புது அறிவிப்புகளின் படி, இதைத் தர மாட்டேன், அதைத்தர மாட்டேன் என்று அரசு சொன்ன பிறகு, எதுவுமே வாங்க முடியாத, எங்குமே செல்லாத ரேஷன் கார்டை வைத்திருப்பதால் எங்களுக்கு என்ன யூஸ் என்று அரசாங்கமே கொஞ்சம் தெளிவாகச் சொல்லலாமே....

மூன்றாண்டுகளுக்கு முன்பு (31.07.17) அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக