ஞாயிறு, 23 ஜனவரி, 2022

யூடியூப் கொடுமைகள் (சில சேனல்களும் கூட)

யாரைப் பார்த்தாலும் "நீங்க தளபதி பத்தி என்ன நினைக்கிறீங்க? தல பத்தி என்ன நினைக்கிறீங்க?" என்று மைக்கை வாயில் வைக்கிறார்கள். இப்ப அதைத் தெரிஞ்சு நீங்க என்ன பண்ணப் போறீங்க? 

மனசு வலிக்க ஒரு விஷயம் - ஒரு சேனலில் ஒரு ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷனில் "தளபதி விஜய் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? அவர் நடிப்பைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?" (இன்னும் ஏதோ கொஞ்சம் அபத்தமாகவே) என்று ஒரு இசையமைப்பாளரிடம் அபத்தமாகக் கேள்வி கேட்டார் ஒரு தொகுப்பாளினி. அப்படியே நேரில் போய் அறைய வேண்டும் போல் இருந்தது.

அந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

ஏ.ஆர். ரஹ்மான் எனும் இசை மேதையிடம் கேட்க வேறு கேள்வியா இல்லை? அவர் உயரம், அவர் சாதனை, அவரின் பெரு முயற்சிகள், உலகம் முழுக்க பெரும் இசைக் கலைஞர்களிடம் இணைந்து பணிபுரிந்தது, எதுவும் தெரியாமல் "எதையாவது கேப்போம்" என்று ஒரு கேள்வி. 

ஒரு ஆடியோ ரிலீஸ் என்றால் அங்கே ஹீரோ அந்த இசையமைப்பாளர் தானே? அந்தச் சின்ன லாஜிக் கூடத் தெரியாதா இவர்களுக்கு? 

இதே தான் இளையராஜா என்ற இசை மேதைக்கும் நடக்கிறது. அவரிடம் என்ன கேட்க வேண்டுமோ அதை விட்டுவிட்டு "பீப் பாட்டு பத்தி என்ன நினைக்கிறீங்க?" என்று கேவலமாக ஒரு கேள்வி. அவர் திருப்பித் திட்டியதும் "இளையராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அடுத்த நாள் ஒரு அறிக்கை. 

முட்டாள்களின் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கிறது மீடியா.

24 ஜனவரி 2021 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக