வியாழன், 17 செப்டம்பர், 2009

பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க

ஹலோ! வணக்கமுங்கோவ். ஹலோ! எப்படி இருக்கீங்க? ஹலோ! உங்களத்தான். ஹலோ! ஹலோ! இங்க! இங்க! என்னது ஹலோவா? எதுக்கு இத்தன ஹலோ! ஆமாம். எப்ப பாத்தாலும் போன்லயே பேசிக்கிட்டு இருக்கோமில்ல.. அந்த ஞாபகம்தான்.. சமீபத்துல ஒரு மொபைல் நெட்வொர்க் விளம்பரம் பாத்துருப்பீங்களே.. ஹலோ! ஹலோ! ன்னு சொல்லிக்கிட்டே இருக்குற வியாதி வந்தா எப்படி இருக்கும்னு. அது கிடக்கட்டுங்க.. நினைச்சுப்பாருங்க. மொபைல் போன் கைல இல்லன்னா கிறுக்குப் பிடிச்சாப்புல இருக்குல்ல.. இன்கமிங், அவுட்கோயிங், எஸ்.எம்.எஸ்ஸூ, எம்.எம்.எஸ்ஸூ, ரிங் டோனு, காலர் டியூனு, எம்.பி.த்ரீ பாட்டுங்க, எஃப்.எம்மு, ப்ளூடூத்து, கேம்ஸூ, இன்டர்நெட்டுன்னு.... அப்பப்பா.. என்னா அட்டகாசம்?

கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க.. மொதல்லலாம் (நம்ம தாத்தாஸ் பீரியட்ல) ஒரு டெலிபோன் கனெக்ஷ்ன் வேணுமின்னா என்ன பாடு படணும்? எக்ஸ்சேஞ்சுக்குப்போயி நம்ம பேர பதிவு பண்ணிட்டு வெயிட் பண்ணி, என்னமோ நாம அந்த போனுல இந்திய ராணுவ ரகசியத்தையே பாகிஸ்தானுக்கு கடத்துற மாதிரி பில்டப்லாம் குடுத்து, அவனுங்க கேக்குற ஆயிரத்தெட்டு டீட்டெயிலயும் குடுத்து எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சுல பதிஞ்சு வச்சு வேலை வாங்குறது மாதிரி காத்திருக்கணும். அப்டியும் அவ்ளோ சுளுவா கனெக்ஷ்ன் குடுத்துடுவாங்களா? சீனியாரிட்டி, பாப்புலாரிட்டி எல்லாம் பாத்துட்டு அது வந்து சேர்றதுக்குள்ள நம்ம வீட்ல ரெண்டு மூணு சீனியர் சிட்டிசன்ஸ் பர்மனெண்ட் டிக்கெட்டே வாங்கிடும்க. அவ்ளோ கஷ்டமான விஷயம்.

பழைய சினிமாலல்லாம் பாத்தீங்கன்னா (பொதிகைல போடுறாங்க பாஸ், உங்க ஏரியால கரண்ட் கட் ஆகாம இருந்தா பாக்கலாம்) நம்ம மேஜர் சுந்தர்ராஜனோ, வி.எஸ்.ராகவனோ "ஹலோ! என்னது? மெட்ராஸூல இருந்து டிரங்க் காலா? சொல்லுங்க. என்ன? பாஸ்கருக்கு ஆக்ஸிடென்டா? (டொய்ங்க்...னு பேக்கிரவுண்ட் பிஜிஎம் போடுவாங்க) எங்க? திருவான்மியூர்லயா? எப்படி இருக்காரு? என்னது? உயிருக்கு ஆபத்தான நிலைமையா? - அப்டின்னு அவுங்களே கேள்வியும் கேட்டு அவுங்களே பதிலும் சொல்லிக்குவாங்க. அப்படி இருந்தது நிலைமை. ஒரு போன் பேசணும்னா டிரங்க் கால் புக் பண்ணி அது கனெக்ட் ஆகற வரைக்கும் தேவுடான்னு வெயிட் பண்ணணும். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு மட்டும் தான் கரெக்டா லைன் கிடைக்கும். அதுவும் ஒழுங்கா பேச முடியுமான்னா கிடையாது. பாதியில டிங்குன்னு கட் ஆயிடும். ஹலோ ஹலோன்னு கதறிகிட்டே கிடப்பாங்க. கத்தி கத்தியே பாதி பேருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும். ரொம்பக் கஷ்டம்.

அப்புறமாதான் வந்துதுங்க டெலிபோனு (நம்ம மம்மி, டாடீஸ்லாம் குட்டிப்பசங்களா பிளாக் & ஒயிட்ல சுத்துன பீரியட்). டார்க் கருப்பு கலர்ல குட்டிப் பன்னி மாதிரி பெரிய சைஸூல, டிபன் பிளேட் அளவுல டயலோட அட்டகாசமா என்ட்ரி குடுத்துது. எல்லா வீடுகள்லயும் அந்த போன்தான் இருக்கும். ஆனா அதுல போன் பண்ணினாலும் சாமானியமா லைன் கிடைக்காது. கிடைச்சாலும் பாதியில கட் ஆயிடும். மறுபடியும் ஒண்ணொண்ணா எல்லா நம்பரையும் சுத்தணும். நம்பர் சுத்தி சுத்தியே விரல் வீங்கி நகச்சுத்தி வந்துடும். அவ்ளோ டார்ச்சராயிருக்கும்.

அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணி சைஸைக்குறைச்சு டிசைன் டிசைனா டெலிபோன்லாம் வர ஆரம்பிச்சுது. ரூமுக்கொரு போனு வைக்க ஆரம்பிச்சாங்க. போனு இருந்தாதான் கெளரவம், போன் இருக்குற வீடு பெரிய பணக்காரங்க வீடுன்னு ஆச்சு. எங்க வீட்ல போனு இருக்குன்னு பெருமையா வெளில சொல்லிக்குவாங்க. கொஞ்ச நாள்ல எல்லாரும் போனு வாங்க ஆரம்பிச்சாங்க. தெருவுக்குத்தெரு எஸ்.டி.டீ பூத்துங்க மொளச்சுது. பூத்துகள்லயும், பூத்துகள் மூலமாவும் காதல்கள் முளைச்சுது. அத வச்சு ஸ்கிரீன் கிழியுற அளவு சினிமாவா எடுத்துத்தள்ளினாங்க. டெலிபோன் காதல்-லாம் ஆச்சுது.

பொறவு வந்துதுங்க செல்போனு. செங்கல் சைஸூல. அம்மாம்பெருசா. எங்க வேணாலும் எடுத்துட்டுப்போலாம். வயர்லெஸ் மாதிரி. கார்ட்லெஸ் மாதிரினு. அப்புறமா சைஸைக்கொறைக்க ஆரம்பிச்சு அது ஃபேமஸாயி, இப்ப பாருங்க எங்க பாரு செல்போனு, அதுக்கு ஊரெல்லாம் சிக்னல் டவரு.. மரம், செடி, கொடிய விட செல்போன் டவருதாம்பா ஜாஸ்தியா இருக்கு.

ஏர்டெல்லு, ஏர்செல்லு, வோடபோன், ஐடியா, ரிலையன்ஸூ, டாடா இண்டிகாமு, ஸ்பைஸூ, விர்ஜின், எல்லாத்துக்கும் மேல பெரியண்ணன் பி.எஸ்.என்.எல்லுன்னு வரிஞ்சு கட்டிட்டு எறங்கி இருக்காங்க. பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கன்னு (அப்பாடி டைட்டில் வந்துடுச்சு) அள்ளிக்குடுக்க ஆரம்பிச்சாங்க. நம்ம ஜனங்க மேல அப்டி என்னதான் பாசமோ தெரியல இவுங்களுக்கு. இப்பப்பாரு. புதுசா ஒருத்தன் வந்திருக்கான். ஏதோ எம்.டி.எஸ்ஸாமே.. டெய்லி நூத்தம்பது நிமிசம்னு கணக்கு வச்சு பத்து லட்சம் நிமிசம் ஃப்ரீயாம். யப்பே. கணக்குப்பாத்தா எல்லாத்தயும் பேசி முடிக்க பதினெட்டு பத்தொம்பது வருசம் ஆகுமே. யாத்தே. சும்மாவே நம்மாளுங்களுக்கு பேச சொல்லித்தரணுமா? இப்போ ஃப்ரீயா வேறயாம். இன்கமிங் ப்ரீ, அவுட்கோயிங் ப்ரீ, செல் டு செல் ப்ரீன்னு ஒரே ஆஃபர்தான்.

தூங்காத, சாப்புடாத, ஆய் போகாத, போனாலும் கக்கூஸூக்கு எடுத்துட்டுப்போ இந்தான்னு ஆளாளுக்கு கொண்டாந்து கைல திணிக்கிறாங்க செல்ல. அதிலயும் இந்த அம்பானி அண்ணனுங்கள பத்தி சொல்லியே ஆவணும். எல்லாத்தயும் ஆரம்பிச்சு உட்ட புண்ணியவானுங்களாச்சே. கூறு கட்டியில்ல வித்தாங்க செல்ல.. பத்தாயிரம் ரூபா செல்லு ஆயிரம் ரூபா, ஆயிரம் ரூபா வேணாம், ஐநூறு கொடு போதும், முடியலயா நூறு ரூபா கொடு, அட காசில்லயா ஒரு ரூபா குடுத்து எடுத்துட்டு போ மீதிய அப்பால குடுன்னு என்னா அராஜகம். அப்பதான இவ்ளோ ஃபேமஸாச்சு செல்லு. யம்மாடி, நம்ம ஊட்டு நண்டு சிண்டுக கைலல்லாம் செல்லத்திணிச்சுபுட்டாங்களே.

ப்ரீபெய்டு வேணுமா, போஸ்ட் பெய்டு வேணுமா? இன்கமிங் ப்ரீ, அவுட்கோயிங் ப்ரீ, செல் டு செல் ப்ரீ, அது இதுன்னு என்னென்ன பண்ண முடியுமோ அதெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. சிம்மு வேணுமா வாங்கிக்கோ ஆயிரம் ரூபான்னாங்க முதல்ல. அப்பறம் ஐநூறாச்சு, நூறாச்சு, இப்போ ஒர்ரூபா குடு சிம் வாங்கிக்கோ, அதும் லைப் டைம் ப்ரீ ஆஃபர்னு ஆளாளுக்கு சிம்மு விக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

நம்ம சீனி இப்டிதான் திடீர்னு புதுசா ஒரு டவுட்டக் கெளப்புனான். ஒரு சிம்மு விலை 50 ரூவா, 99 ரூவா, 150 ரூவா, 499 ரூவானு இப்டியே இந்தியா முழுக்க சிம் வித்துட்டு டவர் வைக்கலன்னா என்ன பண்ணுவன்னான். எனக்கு டார்ச்சராயிடுச்சு. இதுல இன்னோன்னு.. நாம கூட இந்த மாதிரி கம்பெனி ஆரம்பிச்சு நெறய சிம் வித்துட்டு கம்பெனிய மூடிட்டு ஓடிடலாம்னான். ஆடிப்போயிட்டேன் நானு. (யாராவது இதுக்கு பதில் சொல்லுங்கப்பா, நான் அவன்ட்ட சொல்லணும்).

கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க பத்து வருஷத்துக்கு முன்னாடி எவனாவது தனியா, அதுவும் தலய தலய (அஜித் ரசிகர்கள் கோச்சுக்காதீங்க) ஆட்டிக்கிட்டே பேசிக்கிட்டுப் போனா அவன என்னன்னு நினைப்போம் நாம, பைத்தியக்காரன்னு கல்ல உட்டு அடிக்க மாட்டோம்? இப்ப பாருங்க ரோட்ல.. எல்லா பசங்களும் புள்ளைங்களும் ஆளாளுக்கு ஒரு (சிலது ரெண்டு, சிலது மூணு) செல்ல வச்சுக்கிட்டு இயர்போன மாட்டிகிட்டு தானா நடுரோட்டுல சிரிச்சிகிட்டே, முனகிக்கிட்டே போகுதுங்க.

இதுல என்னடான்னா இப்போதைக்கு இந்தியாவுல மொத்த மக்கள் தொகையில மொத்தம் இருபதோ இருபத்தஞ்சு சதவீதமோ தான் மொபைல் யூஸ் பண்றாங்களாம். புள்ளி விபரம் வேற. மீதி இருக்குற எல்லாரையும் போன் வாங்க வைக்காம விட மாட்டோம்னு எல்லாரும் இறங்கிட்டாங்க. நோக்கியா, ஸேம்ஸங், எல்.ஜி, விர்ஜின், மோட்டோரோலா, கொரியாக்காரன், சைனாக்காரன் செல்லுன்னு இப்பவே இப்டி இருக்கே. இது அம்பது, அறுபது இல்ல நூறு சதவீதம் ஆயிடுச்சுன்னா என்ன ஆகும்? யோசிக்கவே பயமாருக்கே. எல்லா பயபுள்ளகளும் சாமியாடிக்கிட்டே இருக்குமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக