சனி, 30 ஏப்ரல், 2016

பஞ்ச் சோந்தி பராக்





தமிழ் ஹிந்து தினசரியில் "
பஞ்ச் சோந்தி பராக்" என்றொரு பகுதி வருகிறது. மேலே ஒரு செய்தியும், கீழே அதற்கு ஒரு பஞ்ச் - சும் வெளியிடுவார்கள். யார் வேண்டுமானாலும் பஞ்ச் கள் அனுப்பலாம். பல மாதங்களாக விடாமல் அனுப்பிக் கொண்டு இருக்கிறேன். ஆனால் நேற்று தான் எனது முதல் பஞ்ச் வெளியானது. 
.
ஹிந்து வின் இந்த "பஞ்ச்" ஐப் பொறுத்த வரை "விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி" ஒன்றே பலன் தரும். ஏனென்றால் ஜோக் போலவோ, சிறுகதை போலவோ, நல்லாருக்கே என்று எடுத்து வைத்தெல்லாம் வெளியிட முடியாது. மொத்தமும் கரண்ட் டாபிக்குகள். ஒரு நாள் தான் அதன் உயிர். மறுநாள் நூறு புதிய செய்திகளும் அதை வைத்து ஆயிரம் பஞ்ச் களும் வரும். இரண்டு நாள் முன்பு நாம் அனுப்பியிருந்தால், அது அரோகரா தான். விடாமல் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்ததால் தான் இது சாத்தியமாயிற்று. 
.

மீண்டும் வருமா? தெரியாது. அடிக்கடி பஞ்ச் வெளியாகும் பல எழுத்தாள நண்பர்களிடம் டிப்ஸ் கேட்க வேண்டும். 
.
வெளியிட்ட "தமிழ் ஹிந்து" வுக்கு நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக