திங்கள், 12 ஜூலை, 2010

வரம் தரும் கிணறு

-எஸ்கா

மக்கள் அதிகமாக சுற்றுலா வந்து செல்லும் இடம் ஒன்றில் பழங்காலத்துக் பிரசித்தி பெற்ற கோவில் ஒன்று இருந்தது. அக்கோவிலைச் சுற்றிப் பார்க்க திருமணமானவர்கள் ஜோடி ஜோடியாக வருவதுண்டு.

கோவிலின் பிரகாரத்தில் ஸ்தல விருட்சத்துடன் பழைய, பெரிய கிணறு ஒன்று இருந்தது. அந்தக் கிணற்றில் காசு போட்டு விட்டு மனதில் எதையேனும் வேண்டிக் கொண்டால் அது நடக்கும் என்பது ஐதீகம். தன் அனுபவத்தில் கண்ட வரையில் கண்டிப்பாக நிறைவேறும் என்று சுற்றுலா வந்தவர்களுக்கு விளக்கினான் கைடு.

வந்த ஜோடிகளில் ஒரு கணவனுக்கு சந்தேகம். இருந்தாலும் வேண்டித்தான் பார்ப்போமே என்று எதையோ வேண்டிக் கொண்டு கிணற்றருகே குனிந்து நின்று காசு போட்டான் அவன்.

இதைப்பார்த்தாள் அவனது மனைவி. அவளுக்கோ இதில் சுத்தமாக நம்பிக்கை இல்லை. "சும்மா சொல்லாதீங்க. பழைய கிணறாம். ஐதீகமாம். வேண்டினதெல்லாம் நடக்குதாம். நான் பார்க்கிறேன். நடக்குமா என்னன்னு?" என்றபடி குனிந்து பார்த்தாள் அவள்.

ஒரு வினாடி நிலை தடுமாறி கால் இடறி அந்தக் கிணற்றிலேயே விழுந்தாள் அவள்.

எட்டிப்பார்த்து புருவம் உயர்த்திய கணவன் சொன்னான்

"ஆமாம் நடக்குது".

-------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். நல்லாயிருந்தா தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.
-------

4 கருத்துகள்:

  1. எங்கய்யா இருக்கு அந்தக் கிணறு???

    பதிலளிநீக்கு
  2. தெரியலீங்க... எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.. ஆனதும் தெரிஞ்சுக்குவோம்னு இருக்கேன்...

    பதிலளிநீக்கு
  3. why dont you try this karthik.... :-)

    பதிலளிநீக்கு