சனி, 16 பிப்ரவரி, 2019

முட்டாள்கள் சூழ் உலகு


ஊர் முழுக்க முட்டாள்களாலும், மூடர்களாலும் நிரம்பி வழிகிறது. மாற்ற முயற்சித்தாலும், திருத்த முயற்சித்தாலும் "மாட்டேன்" என உறுதியாக இருக்கிறார்கள். முன்னால் தலையாட்டி விட்டு பின்னால் போய் அவதூறு பேசுகிறார்கள். நாம் சொல்வதை ஜஸ்ட் "புரிந்து கொள்ளவே" சிலருக்கு மூளை இல்லை. ஆன்மிகமோ, அரசியலோ தம்மை ஏமாற்றுபவனிடமே போய் தஞ்சம் புகுகிறார்கள். கடந்த சில மாதங்களாக சில பர்சனல் அனுபவங்களின் பேரில் சொல்கிறேன்.

மந்திரத்தில் மாங்காய் வரும் என்றால் நம்புகிறார்கள். எப்படியாவது பணம் வரும் வழியைக் காட்டுகிறேன் வா என்றால் கண்ணை மூடிக்கொண்டு போய் விழுகிறார்கள். இலவசம் கொடுத்தால், அது தேவையில்லையென்றாலும் போய் வாங்கிக் குப்பையில் கொட்டுகிறார்கள். திரையில் வரும் நாயகனை அப்படியே நம்பி மிக்ஸியை நெருப்பில் போடுகிறார்கள். செய்யும் வேலையில் ஒழுங்கு இருப்பதில்லை. வியாபாரம் செய்வோர் கஸ்டமரை ஏமாற்றாமல் இருப்பதில்லை.

ஒன்றுமே செய்யாமல் பணம் வர வேண்டும் என்கிறார்கள். தவறு செய்தால் அதை நியாயப்படுத்த குரூப் சேர்கிறார்கள். தன் மதம், தன் மொழி, தன் இனம் என கூட்டுச் சேர்ந்து எந்த அநியாயத்தையும் செய்யலாம் என்கிறார்கள். நியாயம் பேசுபவனை பைத்தியக்காரன் என்கிறார்கள். "ஏன்டா, ஒரு வேலையை சரியாகச் செய்யலாம்ல" என்றால் மூடிட்டுப் போடா என்கிறார்கள். இங்கே இதுதான் பெரும்பான்மை.

ஒரே பாடம் தான் - ஹன்ட்ரண்ட் அப்துல் கலாம்ஸ் வந்தாலும் இவர்களைத்திருத்த முடியாது. அவர்களை சுபாவத்தை வைத்து பணம் பண்ணுகிறான் பார்த்தீர்களா? அவன் தான் புத்திசாலி. பாவம் பார்த்து, பாடம் சொல்லி, திருத்த முயற்சித்தால் நாம் தான் மூக்குடைபடுவோம். யூடியூபில் கூடப் போய்ப் பாருங்கள். கிசுகிசுக்களும், மந்திரம், ஜோஸியம், எதைச் செய்தால் பணம் வரும் பதிவுகளும் இலட்சக்கணக்கான வ்யூஸ் தாண்டுகின்றன. நல்ல வீடியோக்கள் 1000 வ்யூஸ் தாண்டுவதில்லை.

டிஸ்கி - இது அனுபவங்களின் பேரில் விளைந்த "ரியாலிட்டி" பதிவு. "பாஸிடிவ்கள், உலகம் அழகானது" போன்றவர்கள் யூ டர்ன் போடவும். அந்த அனுபவங்கள் எனக்கும் உண்டு. அவற்றையெல்லாம் வேறு பதிவாகத் தனியாக எழுதுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக