செவ்வாய், 24 நவம்பர், 2020

optimistic ஆ? over confidence ஆ?

சில நேரங்களில் optimistic என்பது பல நேரங்களில் over confidence ஆகப் போய்விடுகிறது. சிலர் பல நேரங்களில் ஓவர் optimistic ஆகத் தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டு, அறியாமையால் தான் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை. தன் கன்டென்ட் இல், டெலிவரியில் வரும் தவறுகளைக் கூடத்திருத்திக் கொள்ளத்தயாராக இல்லை. பல நேரங்களில் அது over confidence ஆக முடிந்து போய் விடுகிறது.
நண்பர்கள் - டிரெயினர்கள் சிலரை இப்படிப் பார்க்கிறேன். வருத்தமாக இருக்கிறது. வேறு துறையில் இப்படி இருந்தால் தவறில்லை. ஆனால் டிரெயினர்கள் இப்படி இருந்தால், அது learner களிடம் அதே தவறுடன் தானே போய்ச்சேரும்?
put - putted - putted என்று எழுதிப் போடுகிறார் ஒருவர்
what actually ur doing sir? என்று கேள்வி கேட்கிறார் ஒருவர்
"கண்னீர்" என்று எழுதுகிறார் ஒருவர்
"நம்பிகை" என்று ஒருவர்.

25 நவம்பர் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

இது எவரையும் குறிப்பிடும் பதிவு அல்ல. பலரையும்.

25 நவம்பர் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது (அதன் லிங்க்)

பிரபலங்கள், எழுத்தாளர்கள், பிரபல எழுத்தாளர்கள் பலரும் ஃபேஸ்புக்கில் எழுதுவதை வைத்து சண்டைக்குப் (அட் லீஸ்ட் விவாதத்திற்குக் கூடப்) போக வேண்டாம். 

ஆன்லைன் அடிமைகளாகிப் போன பலரது பதிவுகளைப் பார்த்தால் உண்மையை, நடந்ததை எழுதுகிறார்களா? புனைவு எழுதுகிறார்களா? கதையா? வஞ்சப் புகழ்ச்சியா? ப்ளாக் ஹியூமரா? என்று புரிந்து தொலைய மாட்டேனென்கிறது. யானை படம் வரைந்து கீழே "யானை" என்று போட்டுத் தொலைத்தால் அது "யானை" என்று புரிந்துபோகும். அதையும் செய்ய மாட்டேனென்கிறார்கள். 

பிரபலத்தை மதித்து கமெண்டில் எதிர்வினை புரிபவர்களையும் "கீழாக" மதித்து பதில் கமெண்டுகிறார்கள். "இந்த சமூகத்திற்கு புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை" என்று ஒரு சீண்டல் வேறு. "நான் ஏற்கெனவே என் நிலையை அந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன், இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன்" என்று ஒரு ரிப்ளை. அவர்களது பதிவுகளை ஆதி முதல் அந்தம் வரை நோண்டித் தேடிப் படிப்பது தான் நம் வேலையா? 

டிஸ்கி - இது எவரையும் குறிப்பிடும் பதிவு அல்ல. பலரையும். 

அல்லது தங்கள் பாசறைக்குள் இருக்கும் இரண்டு பேருக்குள் பேசி வைத்துக் கொண்டு எதிரணியில் நின்று சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இவ்வுண்மை தெரியாமல் உள்ளே நுழைந்து ஒரு சார்பாகப் பேசும் அப்பாவிகளுக்கு ரத்த விளார் தான். ஜாக்கிரதை.

புது டிஸ்கி - நான் பொதுவாச் சொன்னதை யாரேனும் "என்னைத் தான் சொல்றான்" னு தப்பாகப் புரிந்து கொண்டால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல.


டீமானடைசேஷனை முன்னிட்டு - பதிவு 4

25 நவம்பர் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

டீமானடைசேஷன் விஷயத்தில் எதிர்ப்பு அல்லது ஆதரவு என்பது அவரவர் நிலைப்பாடு. ஆனால் அதற்காக மொக்கை மொக்கையாய் சம்பவங்களை யோசித்து க்ரியேட் செய்வது அல்லது பின்னணி பற்றி யோசிக்காமல் தன் கண்ணில் படுபவற்றை மட்டும் வைத்தே ஸ்டேட்டஸ் உருவாக்குவது, அதை வைத்து மோடியைத் திட்டுவதெல்லாம் சரியான காமெடி. 

கீழுள்ள ஸ்டேட்டஸைப் (லிங்க்) படியுங்கள். 




அந்த சிறு வியாபாரியின் வருமானம் போச்சாம். இவர்களின் வியாபாரத்தை நசுக்கி விட்டு பெரு நிறுவனங்களை வாழ வைக்கப் போகிறாரா (மோடிதான் வேற யாரு?) என்று முடித்திருக்கிறார். செம காமெடி. 

இது போன்ற "அய்யோ பாவம்" செய்திகளைப் பகிரும் போது இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கலாம். அந்தப் பெண்மணி விற்கும் "க்வாலிட்டி வால்ஸ்" மட்டும் இந்தியக் கம்பெனியா? அல்லது சிறுதொழில் மூலம் அந்தப் பெண்மணியே உருவாக்கிய ஐஸ்கிரீமா? அவர் முடித்துள்ள கடைசி வரியின் படி இந்தப் பெண்மணியின் வியாபாரம் நன்றாக நடந்தாலும் "க்வாலிட்டி வால்ஸ்" என்ற பெரு நிறுவனம் தான் பலன் பெறப் போகிறது. 

க்வாலிடி வால்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் இன் ஒரு அங்கம் என்பதும், அது நெதர்லாந்து - லண்டன் கூட்டு நிறுவனமான யுனிலீவர் இன் ஒரு அங்கம் என்பதும், க்வாலிடி வால்ஸ் தயாரிப்பது ஐஸ்கிரீமே அல்ல, (அவர்கள் "ஃப்ரோஸன் டெஸர்ட்" என்ற வார்த்தையைத்தான் இன்று உபயோகப் படுத்துகிறார்கள். அப்படி என்றால் கிட்டத்தட்ட டால்டா என்று அர்த்தம்) 

அவர்கள் ஐஸ்கிரீம் என்ற வார்த்தையை உபயோகப் படுத்தக் கூடாது என்றொரு கேஸ் நிலுவையில் இருப்பதும் அவருக்குத்  தெரியுமா? தெரியாதா? என்று கேட்டால் நான் மடைமாற்றுகிறேன், அறிவு ஜீவி என்றெல்லாம் சொல்கிறார். 

இதில் கமெண்டுகளில் என்னை அறிவுஜீவி என்று வஞ்சப் புகழ்ச்சி செய்கிறார். அவரது கருத்தை நான் மறுக்கலாம். என் கருத்தை அவர் மறுக்கலாம். ஆனால் "ஜீவித்தனமான அறிவாளிகளுக்கு" என்று சொல்வது என்னை நேரடியாகத் தாக்குவதாகும். (அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வேறு). 

அந்தப் பெண்மணியின் வியாபாரம் பெருகினாலும் க்வாலிடி வால் என்கிற பெரு நிறுவனம் தான் பயன் பெறப் போகிறது. ஸோ, பிரதமரையும், அவரது திட்டத்தையும் திட்ட எதையாவது சம்பவங்களைக் கஷ்டப்பட்டு தேடித்தேடி ஸ்டேட்டஸ் போடுவது போல இருக்கிறது இது.


இருக்கின்ற வாழ்க்கையை இன்னும் நன்றாக ரசித்து வாழ வேண்டுமா?


25 நவம்பர் 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

சென்ற வாரம் தான் "96" முழுதாகப் பார்க்க அமைந்தது. அதற்கு முன் சன் டி.வியில் விளம்பரங்கள், குழந்தைகளில் இடைஞ்சல்களுடன் பிட்டு பிட்டாக பார்த்ததில் ஒரு எளவும் பிடிக்கவில்லை. ஆனால் சென்ற வாரம் இரண்டு முறை பார்த்தேன். ஒரு குரூப்பில் வந்த லிங்க் மூலம் யூ டியூபில் ஒருமுறை. பார்த்து முடித்துவிட்டு மாலை திரும்ப லிங்க் ஓப்பன் செய்தால், லீகல் பிரச்சினை என்று தூக்கியிருந்தார்கள். பிறகு மறுநாளே டெலகிராமில் இரண்டாம் முறை.

படம் "96" பத்தாப்பு, நாம 97 பேட்ச் - பத்தாப்பு. ஒன் இயர் ஜூனியர். (ஆனால் சலூன் சீனில் த்ரிஷா பத்தாப்பு 94 என்றும், ஆரம்பத்தில் இருந்து மற்ற எல்லோரும் 20 வருஷம் என்றும் சொல்ல, ஹோட்டல் வாசலில் 22 வருஷம் ஆச்சு என்றும் சொல்லிக் குழப்புகிறார்) படம் முதல் பாதி முழுக்க நாஸ்டால்ஜியா தான். படம் வேறு கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலில் எடுத்தார்களாம். அம்மா ஊர். நானும் அங்கே ஒருமுறை சென்றிருக்கிறேன். ஆறாப்பு படிக்க என்ட்ரன்ஸ் எழுதி பாஸ் செய்து விட்டு அங்கே சேராமல் சேலம் வந்து விட்டோம். ஒரு வேளை அங்கேயே படித்திருந்தால், ராமச்சந்திரன், ஜானு, முரளி, சதீஷ், சுபாஷினி எல்லாரையும் பார்த்திருக்கலாம். நமக்கு ஒரு வருஷம் சீனியர்ஸ்.
முதல் பாதி நாஸ்டால்ஜிக் ஃபீலிங்க்ஸைக் கிளப்பினாலும் நாம படிச்சது மொட்டைப்பசங்க - பாய்ஸ் ஸ்கூல் என்பதாலும், பள்ளி லவ்ஸ் ஏதும் இல்லாததாலும் இரண்டாம் பாதி அவ்வளவாக நம்மை பாதிக்கவில்லை. ஒருவேளை இப்டி ஒரு லவ் இருந்திருந்தா நல்லாருக்குமே என்று தோண வைத்தது. படம் பற்றி சில பேர் சில குறை சொன்னாலும், முடிந்தவரை எல்லாவற்றுக்கும் லாஜிக் இருந்தது. "92 ல் ஏ.ஆர்.ரஹ்மான் வந்து விட்டார், 95 ல் முத்து படம் வந்து செம ஹிட் ஆனது ஆனால் படத்தில் இளையராஜா பாடல்கள் மட்டும் தான் உள்ளன" என்றெல்லாம் சில பதிவுகள் பார்த்தேன்.
ஒரு சின்ன விஷயம், ஹீரோயின் பேர் ஜானகி என்பதால், அவர் ஜானகி பாட்டு மட்டும் தான் பாடுவார் என்றொரு டயலாக் படத்தில் வரும். 4 வருடத்தில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஜானகி எத்தனை பாடல்கள் பாடியிருக்க முடியும்? இளையாராஜாவிடம் தானே ஜானகி அதிகம் பாடியிருப்பார்? மேலும் இப்படி ஒரு படம் எடுக்கும் போது இளையராஜா பாடல்கள் தானே நம்மை ஒரு சுகானுபவத்திற்கு அழைத்துச் செல்லும்? ஏ.ஆர்.ரஹ்மான் இன்னும் கரண்ட் ட்ரெண்டில் இருப்பதால், இதை முந்தைய தலைமுறை படமாகக் காட்டவும் இளையராஜா தேவை.
பல படங்களில் அட்டென்டன்ஸ் எடுக்கும் சீன்களில் ராஜா (R) வுக்கு அப்புறம் பாலு (B) என ஒரு வரிசையே இல்லாமல் கன்னா பின்னாவென்று பெயர்கள் வருவதைப் பார்த்து எனக்கு எரிச்சலாக வரும். ஆனால் இதில் கரெக்ட்டாக - ஜானுவுக்குப் பிறகு முரளி, முரளிக்குப்பிறகு ராமச்சந்திரன், அதற்குப்பிறகு சதீஷ், பின்னர் சுபா என சரியான ஆங்கில அகர வரிசைப்படி அட்டென்டன்ஸ் எடுக்கப்படும். இது போல எத்தனையோ நுணுக்கமான விஷயங்கள் படத்தில் உண்டு.
ராமச்சந்திரனும் சுபாவும் ஒரு பாலத்தில் போகும்போது அங்கே தூண்களில் ஒட்டப்பட்டுள்ள பழைய சினிமா போஸ்டர்கள், சதீஷின் பேண்டில் பட்டன் வைத்த மடிப்பு டிசைன், லேட்டா வீட்டுக்கு போனா அம்மா என்ன அரிஞ்சிடும் என்பது போன்ற வட்டார வழக்குகள், வாட்ஸ் அப் மேப் ஷேரிங் பற்றி யோசிக்காமல் நண்பனுக்கு போனில் வழிசொல்லும் முரளி ஆனால் கூகிள் மேப் பற்றிப் பேசும் ஜானு, வர்ஜினா என்று கேட்கப்படும் போது கூச்சப்படும் விஜய் சேதுபதி, என நிறைய விஷயங்களை கலை இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர், டயலாக் எழுதியவர், நடிகர்கள் என அனைவரும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். அவையும் அட்டகாசம்.
கடைசியாக ஒரு விஷயம். நீங்கள் இப்படி ஒரு பள்ளியில் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, உங்களுக்கு பப்பி லவ் இல்லையென்றாலும் பரவாயில்லை, நீங்கள் நல்ல படங்களை ரசிப்பவர் என்றால் அமைதியாக உட்கார்ந்து ஒரு முறை "96" படத்தை பார்த்துவிடுங்கள். அட்லீஸ்ட், இருக்கின்ற வாழ்க்கையை இன்னும் நன்றாக ரசித்து வாழ வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிளது படம். அந்த விதத்தில் இயக்குனரும், படக்குழுவும் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்றே நான் சொல்வேன்.
- எஸ்கா

வெள்ளி, 20 நவம்பர், 2020

அவார்டு வாங்கலையோ அவார்டு

21 நவம்பர் 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

(பாஸிடிவாகச் சொன்னால்) சில இயக்கங்களில் (ஒரு நல்ல காரியத்துக்காக) ஒரு டொனேஷன் தொகை கொடுத்தால் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பட்டம் வழங்கப்படும். வேறு விதமாக ஃபேஸ்புக் பாஷையில் சொன்னால் இப்ப காசு கட்டினா அடுத்த ஃபங்க்ஷன்ல பட்டம் வழங்கப்படும். இது கஷ்டப்பட்டு படித்து வாங்குவதோ, அல்லது ஏதேனும் சாதனை செய்து வாங்குவதோ அல்ல. காசு கட்டினா பட்டம் கிடைக்கும்.

ஆனா (பின்னணியில) காசக்கட்டிட்டு ஒரு பட்டத்தை வாங்கிப்போட்டுக்கறதுக்கு இவனுங்க பண்ற அளப்பறை இருக்கே யப்பா... இந்த ஃபோட்டோஷாப்பையும், வச்சிகிட்டு... அவரு என்னமோ கவுந்து போன கப்பலை நட்டமா தூக்கி நிறுத்திட்ட மாதிரியும், கீழ விழுந்த ஏரோப்ளேனை சூப்பர்மேன் மாதிரி பறந்து அலாக்கா தூக்கி நிறுத்தி அதை காப்பாத்தின மாதிரியும், அதை அந்த இயக்கமேமே.........தானா பாத்து, பாராட்டி, அங்கீகரிச்சு இவருக்கு பட்டம் வழங்குனா மாதிரியும் தம்பட்டம் அடிச்சுக்குவானுங்க பாரு.......... சாமி. முடியல. டேய், என்கிட்ட காசு இருந்தா நானும் ஏழு பட்டம் வாங்கிப்போட்டுக்குவேன்டா... பக்கிகளா..
இதுக்கெல்லாம்
Maram R
மாதிரி ஆளுங்கதான் சரி. கழுவி ஊத்தறதுக்கு. இந்த ஸ்டேட்டஸூம் அந்த ஸ்டைல் தான்.
யாருக்கு? யாருக்கோ. இது பல இயக்கங்களுக்குப் பொருந்தலாம். நீங்களா யாரையாவது கற்பனை பண்ணிகிட்டா கம்பேனி பொறுப்பில்லை.

"தீபாவளி சீட்டு" கேள்விப்பட்டிருக்கிறீர்களா?





தீபாவளிப் பலகாரங்களுக்காக, துணி மணிகளுக்காக, பண்ட பாத்திரங்களுக்காக, பட்டாசுகளுக்காக, ஏன் தீபாவளி தங்கச் சீட்டு, ஃபுல் விஸ்கி சீட்டு கூட உண்டு. அன்றாடங்காய்ச்சிகளாக இருந்தாலும் வருடா வருடம் சீட்டு கட்டியே வீட்டிற்கும், பெண் பிள்ளைகள் கல்யாணத்திற்கும் என பெரிய பெரிய பாத்திரங்கள் வாங்கியவர்கள், பணம் சேர்த்தவர்களைப் பார்த்திருக்கிறேன். 

லோயர் மிடில் கிளாஸ் மற்றும் ஏழை மக்கள் இருக்கும் இடங்களில் இந்த சீட்டு மக்கள் புழங்குவார்கள். ஒரு தீபாவளி முடிந்ததும் அடுத்த தீபாவளி சீட்டு துவங்கும். முதல் வாரம் ஒரு துகை அட்வான்ஸாகவும், வாரம் ஒரு துகை என்றும் கட்ட வேண்டும். தீபாவளிக்கு ஒருவாரம் அல்லது இருவாரம் முன்பு பொருட்களும், பணமும் வந்து சேரும். பொறுப்பற்ற, குடிகாரக் கணவன்கள் உள்ள பெண்மணிகள் இதை வைத்தே தீபாவளிச் செலவை ஈடுகட்டுவதைப் பார்த்திருக்கிறேன். 

சிறுவயதில் என் அம்மா வாரம் 10 ரூபாய் சீட்டு கட்டுவார். தீபாவளியின் போது இரண்டு கிலோ ஸ்வீட்ஸ், இரண்டு கிலோ காரம், ஒரு பித்தளை அண்டா என்று கொணர்ந்து தருவார்கள். அதை டிஸ்ட்ரிபியூட் செய்வதைப் பார்க்கவே அவ்வளவு குஷியாக இருக்கும். அண்டா வேண்டாம் என்றால் பணமாக வாங்கிக் கொள்ளலாம். 

இப்போதும் அவ்வகை சீட்டுகள் ஜகஜ்ஜோதியாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. வாரம் ஒரு தொகை கட்டினால் தீபாவளியின் போது இவ்வளவு ஸ்வீட்ஸ், இவ்வளவு காரம், இவ்வளவு பட்டாசு, தங்கச் சீட்டு என்றால் ஒரு கிராம், இரண்டு கிராம், ஃபுல் சீட்டு என்றால் மூன்று ஃபுல், 5 ஃபுல், முழுதுமே கேஷ் என்றால் "இவ்வளவு கேஷ்" என முன்பே லிஸ்ட் தரப்படும். அது உங்களுக்குத் திருப்தியாக இருந்தால் அதில் சேர்ந்து கொள்ளலாம். 


சென்ற வருடம் என் தங்கை சொல்லி, இங்கே ஒரு அம்மணி யிடம் ஒரு சீட்டு போட்டேன். வாரம் 300 ரூபாய். சின்ன தொகைதானே. மளிகை செலவு போல போகட்டும் என. என்று தீபாவளி சமயத்தில் துணி, பட்டாசுகள், கிஃப்ட் பர்ச்சேஸ்களுக்கு உதவும் என்று கணக்குப் போட்டேன். XIRR போட்டுப் பார்த்தாலும் கிட்டத்தட்ட 16% வந்தது. இந்த தீபாவளி சமயம் சீட்டு முடிந்து சுமார் 15,000 ஓவாவும் ஒரு அழகான துணிப்பை கிஃப்ட்டும் வந்தது. 

ஆனால் இந்த முறை ரெகுலர் செலவுகள் போக உறவில் இரண்டு “பெரிய காரியங்கள்” வேறு சேர்ந்து கொண்டன. அதற்கு மொய்கள், செய்முறைகள், உணவுச் செலவுகள், இதர, இதர என அத்தனைக்கும் இந்த முறை கை கொடுத்தது அந்தப் பணம் தான். போனஸ் இல்லா வேலையில் இருப்பவர்களுக்கு இவை போன்ற சீட்டுகள் ஒரு மிகப்பெரிய நண்பன். 

ஒருவேளை XIRR குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. இது போன்ற சீட்டுகள் முதலீட்டுக் கணக்கில் வரா. சேமிப்பு வகையில் சேரும். சின்ன விஷயம் போலத் தெரிந்தாலும் உங்கள் போர்ட்ஃபோலியோவில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம். செலவுகள் இல்லாதவர்கள் இதை அப்படியே பல்க் ஆக வேறு முதலீட்டுக்குத் திருப்பலாம். 

உதா - அலுவல் நண்பன் ஒருவன் 14,000 த்துக்கு யமஹா கீபோர்ட் வாங்கியிருக்கிறான். வேறொருவர் அரை பவுன் மோதிரம் வாங்கியிருக்கிறார். அவர்களுக்கு இது போல பல்க்காக வரும் தொகை உதவும். அல்லது ஷேர் வாங்கும் எண்ணம் உள்ளவர்கள் அதில் இறக்கலாம், பணம் கைக்கு வந்ததும் FD போடலாம், அட்வான்ஸ் கொடுத்து EMI இல் டூவீலர் வாங்கலாம், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போல, வீட்டுக்குப் பெரிய பொருள் வாங்கலாம் உங்கள் தேவை எப்படியோ அதற்கு உதவும். 

பழைய மந்திரம் தான் - சிறு துளி பெரு வெள்ளம். 

உஷாராக இருக்க வேண்டிய இடங்கள் - 1. சீட்டு வசூலிக்கும் ஆள் அப்ஸ்காண்ட் ஆகலாம். மொத்தமும் போச்சு, பல வருடங்களாக நம்பிக்கையாக உள்ளவர்களிடம் மட்டும் போடவும். 2. தங்கச் சீட்டு நமக்கு நட்டம். சீட்டு முடியும் நேரத்தில் உள்ள தங்கம் விலைதான் எடுத்துக் கொள்ளப்படும். 3. இன்னும் சில சேஃப்டி விஷயங்களை அனலைஸ் செய்து கொள்ளவும். இதிலேயே இலட்சக்கணக்கில் மோசடி செய்து ஓடிப்போய் டி.வியில் வந்தவர்களும் உண்டு. உஷார், உஷார், உஷார். 



அழகுப் பிள்ளையாரும், ரங்கோலி போட்டியின் கதையும்







அப்போது குமுதத்திற்கு அனுப்பிய அந்த விநாயகர் கலெக்ஷனிலேயே எனக்குப் பிடித்த படம் இது (மற்ற படங்களுக்கு ஆல்பம் பார்க்கவும்). சன்னமான இந்த அவுட்லைன் வரிகளை பிரஷ்ஷிலேயே வரைய கொஞ்சம் சிரமப்பட்டேன். ஆனால் அவுட்புட் பார்த்தபோது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
இதற்கு ஒரு பின் கதையும் உண்டு. கல்லூரிக் காலத்தில் ஹிந்தி க்ளாஸ் படிக்கும் போது, இந்தப் பிள்ளையாரை மனதில் வைத்து, அவர்கள் நடத்திய ஒரு ரங்கோலி போட்டிக்கு துணிந்து பெயர் கொடுத்து விட்டேன். ஒரே ஒரு பச்சை நிறப் பொடி மட்டும் வாங்கிக் கலந்து கலர் கோலப் பொடியும் தயார் செய்தேன். சார்ட் டில் வரைந்த படம்தான் நல்லா வந்திருக்கே என்று ஒரு கான்ஃபிடன்ஸில், முன்கூட்டியே சிலமுறை கோலம் போட்டுப் பார்த்து ப்ரிப்பேர் செய்ய வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. கூச்சம் காரணமாக யாரிடமும் தகவல் சொல்லவும் இல்லை.
போட்டியன்று போய் மண்டபத்தில் பார்த்தால் புள்ளிக்கோலம், ரங்கோலி அது இது என என்னைத் தவிர எல்லாம் பெண்கள். அதிலும் பலர் காலம் காலமாக கோலம் போட்டுப் பழகியவர்கள். நான்லாம் கும்பகோணத்தில் எங்க அக்காக்களுடன் மார்கழி மாதத்தில் கூட இருந்து கோலம் போட்டு கலரடித்துப் பழகிய ஓவர் கான்பிடன்ஸ் கேஸ். பாண்டியராஜன் மாதிரி திருதிரு தான் அவர்களைப் பார்த்ததும். விதவிதமான கலர்கள், தனிப் பொடிகள், வெள்ளைப் பொடி, ஜிகினா அயிட்டங்கள், பூக்கள், ஊசிமணி, பாசிமணிகள் என்று அள்ளிக் கொண்டு வந்திருந்தார்கள்.
என்னிடம் இருந்ததோ ஒரே ஒரு பச்சை கலர் கோலப்பொடி மட்டுமே. ஆனாலும் "இந்த ஓட்டக் கண்ணாடியப்போட்டுட்டு எப்படித்தான் தைரியமா நிக்குறியோ?" என்று மன்னன் ரஜினி மாதிரி கூச்சப்படாமல் ஸ்கேல், இன்ச் டேப், சாக்பீஸ், கோலப்பொடி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய் எனக்குத் தந்த பாக்ஸில் அமர்ந்து விட்டேன். போட்டி ஆரம்பித்ததும், அவற்றை வைத்து மார்க்கிங் எல்லாம் செய்து, கோடுகள் போட்டு நான் கொடுத்த பில்டப்புக்கும், போட்டியில் பங்கு பெற்றதில் ஒரே ஒரு ஆண் என்பதாலும் மண்டபத்தில் ஒரே அப்ளாஸ். கூட ஹிந்தி படித்த ஆண்கள் எல்லாம் விசில் அடித்துக் கொண்டிருந்தார்கள் எனக்காக.
நானோ "தம்பிக்கு எந்த ஊரு" ரஜினி மாதிரி சுற்றி எதையும் பார்க்காமல் பொறுமையாக நெல்லு கீழே விழாமல் ஒரொரு கதிராக அறுத்து விட்டு, மார்க்கிங்கையும், பிள்ளையார் அவுட்லைனையும் முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் சைடில் இருந்த அனைவரும் பாதி ரங்கோலியை முடித்து விட்டிருந்தார்கள். அதிர்ந்து போய் தடதடவென்று இருந்த மெட்டீரியலை வைத்து வேலையை ஆரம்பித்தேன். ஓரளவு திருப்தியாகவே முடிந்தது.
அருகில் இருந்த வண்ண வண்ண அலங்கார ரங்கோலிகளுடன் கம்பேர் செய்கையில் என் கோலம் கொஞ்சம் டல்லாகவே வந்திருந்தது. சாதாரணமான ஒரே ஒரு கலர். ஆனாலும் தனியாகப் பார்த்தால் என் ரங்கோலி அவுட்புட் நன்றாகவே
அருமையாக
வந்திருந்தது. பாராட்டுக்களும் கிடைத்தன.
ஹிந்தி க்ளாஸ் நண்பர் கண்ணன் "என்கிட்ட சொல்லியிருந்தா காசு போட்டு நான் நாலஞ்சு கலர் வாங்கிக் கொடுத்திருப்பேனேடா" என்றார். அக்கறையாக அவர் சொன்னாலும் அப்போது தான் முன் தயாரிப்புகள் இன்றி போட்டிக்கு வருவது தவறு என்று சில விஷயங்கள் உறைத்தன.
ஆனாலும், to my surprise........ வந்திருந்த 15 போட்டியாளர்களில் என் ரங்கோலிப்பிள்ளையார் பிடித்த இடம் ஐந்தாவது. முதல் பரிசுகள் மூன்று தான் என்றாலும் ஆறுதல் பரிசு என்ற வகையில் எனக்கு ஒரு அழகான பிளாஸ்டிக் தட்டு ஒன்றைக் கொடுத்தார்கள். ஒட்டு மொத்தப் போட்டிகளில் கலந்து கொண்ட ஒரே ஆண் என்பதால் அதை ஸ்பெஷலாகப் பாராட்டி எனக்கு டபுள் கைதட்டல் கிடைத்தது.
அந்தத் தட்டை நீண்ட நாட்கள் வைத்திருந்தேன். கொஞ்ச நாட்கள் தங்கையிடம் இருந்தது என ஞாபகம். இப்போ அது எங்கே என்று தெரியவில்லை.

செவ்வாய், 17 நவம்பர், 2020

ஃப்ரீலான்சர் கொடுமைகள்

2017 நவம்பர் 17 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

ஃப்ரீலான்சர் ஆக வேலை செய்வதில் இருக்கும் பெரிய கொடுமை பேமெண்ட் வாங்குவது.

(முஸ்கிளெய்மர் - நியாயமாக பேமெண்ட் வழங்கும் நண்பர்கள் கோபிக்க வேண்டாம். இது அவர்களைப் பற்றி அல்ல. அவர்களுக்கு முன்பே நன்றி. பெரும்பாலானோர் சரியான சமயத்தில், சரியான நேரத்தில், நியாயமாக பேசிய தொகையை வழங்கி விடுகிறார்கள்)
சில கல்வி நிறுவனங்களில் நேரடியாக பேசிச் சென்றால் அன்றைக்கு மாலையே கையில் காசு வந்து விடும். வேறொரு கன்சல்டன்ஸி நிறுவனம் மூலம் சென்றால் அவற்றில் சில வார இறுதியில் வழங்கும், சில மாத இறுதியில், சில 30 நாள் அவகாசத்தில், சிலர் அடுத்த மாதக் கடைசி - அதாவது ஜூலையில் எந்த தேதியில் வேலை செய்திருந்தாலும், ஆகஸ்ட் இறுதியில் பணம் (இதை அவர்கள் ஆரம்பத்திலேயே சொல்வது முக்கியம். 30 நாள் என்று சொல்லி விட்டு, அதை நான் ஒப்புக்கொண்டு போய் வந்தால், 30 நாள் வரைக்கும் நான் காசு கேட்பது தப்பு). டிரெயினிங் ஃபீல்டில் 30 நாள் என்பது ஐடியல்.
பெரும்பாலும் பல நிறுவனங்கள் உணவு மற்றும் டிராவல் கன்வேயன்ஸை உடனடியாகத் தந்து விடுவார்கள். கைக்காசு செலவில்லை. பேமெண்ட் மட்டும் பிறகு, அதுவும் முன்பே சொன்னபடி. சிலர் முன்கூட்டியே "சார் எல்லாம் உங்க செலவு, ப்ராஸஸ் படி கடைசியில் தந்து விடுகிறோம் என்பார்கள். சொன்னபடி நியாயமாகவும் தந்து விடுகிறார்கள். இந்த ஏற்பாட்டில் கல்வி நிறுவனத்திற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. கன்சல்டன்ஸி தான் பொறுப்பு.
ஆனால், தனியாக நிறுவனம் வைத்திருக்கும் ஒரு நாதாறி, ஒருமுறை இன்றைக்கே டிரெயினிங், அவசரம் என்று அழைத்து வகுப்பெடுக்க வைத்து விட்டு, பேமெண்டுக்கு 4 மாதம் அலைய விட்டான் (அவனுக்கு என்னாங்க மரியாதை?)
அதே போல, ஒரு நிறுவனம். மஹிந்திரா கம்பெனியின் இணை நிறுவனங்களில் ஒன்று. முதலில் பேச்சுவார்த்தையில் 15 நாட்களுக்கொரு முறை பேமெண்ட் என்றார்கள். அக்ரிமெண்ட் (அதுவே ஒன் சைடர் அக்ரிமெண்ட் வேறு) போடும் போது மாதம் ஒரு முறை 10 ம் தேதி என்றார்கள். ஆனால் வகுப்புகள் நடக்கையில், அரசு காசு தந்தால் தான் பேமெண்ட் என்றார்கள். ஏன்யா? உன் அக்ரிமெண்ட் என்ன? இப்போ நீ பேசுவது என்ன? உனக்கு பேமெண்ட் வரலைன்னா, எங்களுக்குத் தரமாட்டியா? அப்ப எதுக்கு அக்ரிமெண்ட் போட்டே?
இப்படியே நான்கைந்து மாதங்கள் அலைய விட்டு, டென்ஷன் ஆக்கி, கடுப்பேற்றி, வம்பிழுத்து, சண்டை போட வைத்து, அதற்கு அவர்கள் கடுப்பாகி, (அவர்கள் அக்ரிமெண்ட் எங்கள் அனைவரிடமும் இருந்ததால்) லீகல் நோட்டீஸ் அனுப்பவா என்று கேட்ட நான்காவது நாள் பேமெண்ட் தந்தார்கள். கிட்டத்தட்ட நாங்கள் 10 பேர் இப்படி.
இப்போது அதே போல் ஒரு நிறுவனம். அந்நிறுவனத்தின் சார்பாக __________________ ஊரில் உள்ள ஒரு "பிரபல" கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் எடுத்திருந்தேன். 30 நாள் பேமெண்ட் சைக்கிள் என்றார்கள். அதன்படி அக்டோபர் 7 ம் தேதி கையில் காசு வந்திருக்க வேண்டும். இன்று நவம்பர் 17ம் தேதி. 70 நாள் ஆச்சு. நடுநடுவில் கோ ஆர்டினேட்டரிடம் வாட்ஸ் அப்பினால் இன்று, நாளை, இந்த வாரம், அடுத்த வாரம் என்பான். கன்சல்டன்ஸி யின் தலைவர் அம்பேரிக்காவில் இருக்கிறார். அவருக்கு கால் செய்து மேலும் 30, 40 ரூபாயை இழக்க நான் தயாரில்லை. வாட்ஸ் அப்பை அவரும் கண்டுகொள்வதில்லை.
ரெஃபர் செய்த பெரிய மனிதரிடம் கேட்டால், ஸாரிங்க, எனக்கும் வரலை. நானும் உங்களைப் போலத் தான் என்கிறார். (அப்போ என்ன வெங்காயத்துக்கு நீ பார்ட்னர் மாதிரி என்னை மினி இன்டர்வியூ எடுத்தே?).
இப்போது போன் செய்தால் அந்த கோ ஆர்டினேட்டர் நீங்க யாரு? எப்ப கிளாஸ் எடுத்தீங்க? என்கிறான்.
ஆப் கி பார் ஃப்ராடு சர்க்கார் (இப்ப இதானே ட்ரெண்டு) மோடி ஒழிக.

அப்டேட் - அந்த பேமெண்ட் வந்து சேர சுமார் ஒரு வருடம் ஆச்சு. நானும் விடாமல் பிறாண்டி வாங்கிவிட்டேன்.

ஞாயிறு, 15 நவம்பர், 2020

டாக்டர் ஸ்டிரேஞ்ச்.


16 நவம்பர் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

மார்வல் லின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதே இல்லை. இணையம் முழுவதும் அவை பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. கருந்தேள் போன்றோர் அவற்றை விலாவாரியாக அலசிக் காயப்போட்டிருக்கிறார்கள் தமிழிலேயே. இவற்றில் பல படங்கள் ஒரு சூப்பர் ஹீரோ வின் பூர்வ கதை என்கிற கான்செப்டிலேயே இருப்பது ஒரு விதத்தில் அவர்களது வெற்றிக்குக் காரணம். 

டாக்டர் ஸ்டிரேஞ்ச் - ஒரு பிரபல, வழக்கம் போல், பிரில்லியண்ட் ஆன நியூரோ சர்ஷன் டாக்டர் ஸ்டீபன் ஸ்டிரேஞ்ச் - க்கு நேரும் ஒரு விபத்து. அதன் காரணத்தினால் ஒரு ஆபரேஷன் எனத்துவங்கும் இந்தக் கதை இந்த சூப்பர் ஹீரோ எப்படி உருவாகிறான், அவனது முதல் வில்லன், ஒரு சண்டை, இப்போதைக்கு சுபம், அடுத்த வில்லனின் அறிமுகம் என்ற மார்வலின் டெம்ப்ளேட் இல்ல அமைக்கப் பட்டிருக்கிறது. 

"கேப்டன் அமெரிக்கா - சிவில் வார்" படத்தை தியேட்டரில் பார்த்தபோது நம்மைப்போன்ற நண்பர்களின் தூண்டுதலால் தியேட்டருக்கு வந்திருந்த பல பேர், "இது யார்றா? அது யார்றா? அவன் எப்டி டா பறக்கறான்? இவன் எப்டி பெருசானான்?" என கத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேன் மட்டுமே. அப்படிப்பட்ட பொது ரசிகர்களுக்கு ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இந்தப் படம் பார்க்க நீங்கள் முந்தைய மார்வல் படம் எதையும் பார்த்திருக்கத் தேவையில்லை. கம்ப்ளீட் பேஸிக் கில் இருந்து ஆரம்பிக்கிறது படம்.



சனி, 14 நவம்பர், 2020

டீமானடைசேஷனை முன்னிட்டு - பதிவு 3

டீமானடைசேஷனை முன்னிட்டு 14 நவம்பர் 2016 அன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சில கருத்துக்கள். 

------------------------------------------ 

(பி.ஜே.பி, மோடி, ஏழைகள் பாவம் அது இது என முன் முடிவுகளுடன் படிக்க வேண்டாம்) 

------------------------------------------

கேள்வி பதில் 3

"கியூவுல நின்னு மக்கள் கஷ்டப்படுறாங்க"
"பதில் 1 - வங்கி நடைமுறைகளை மிக மிக மிக எளிதாக்கிய பிறகு வங்கிக்குப் போவது குறைந்து விட்டது. ஆனால் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் இதே போல கியூவில் தானே நின்னோம்? இன்றைக்கும் பெரிய வங்கிகளில் டோக்கன் வாங்கிக் கொண்டு இரண்டு மணி நேரத்துக்கு நின்று தானே பல வேலகள் நடக்கின்றன. அதெல்லாம் உங்க கண்ணுல இத்தனை நாள் படலையா?"
"பதில் 2 - தந்தவர்
Latha Pondy
அந்த காலத்தில் ரேஷன் que வில் நின்று கிட் வந்ததும் மண்ணெண்ணெய் தீர்ந்து ட்டதுன்னு சொல்வாங்களே அதை விட வா கஷ்டம்ப இருந்துவிடப்போகிறது பெரிசுகள இந்த generation க்கு சொல்லி பொறுமை காக்க பழக சொல்லணும்"
"பதில் 3 -இன்றும் ஏழ்மையான பகுதிகளிலும், கிராமங்களிலும் ரேஷனுக்கு மணிக் கணக்கில் கியூவில் அப்படித்தான் நிற்கிறார்கள்"
"கையில காசு இல்ல. சாப்பாட்டுக்கு வீட்டுல பிள்ளைங்க உண்டியலை உடைக்க வேண்டியதா போச்சு"
"தப்பொன்றும் இல்லை. ஸேவிங்க்ஸ் என்றைக்குமே காப்பாற்றும், இன்றைக்கு உண்டியல் வடிவத்தில். நாளை வேறொரு சந்தர்ப்பத்தில் தங்க நகை. வங்கிப் பிரச்சினை தீர்ந்ததும் வங்கி சேமிப்பும் கூட (நான் கூட சாமி உண்டியலில் கை வைத்திருக்கிறேன்)"
"சிறு, குறு நிறுவனங்கள் அனைத்தும் முடங்கி விட்டன"
"பதில் 1 - அனைத்தும் அல்ல. சமாளிக்கத் தெரியாதவையும். கேஷ் டிரான்ஸாக்ஷனை நம்பியிருந்தவை மட்டுமே"
"பதில் 2 - தொடர் மழை, அடை மழை, வெள்ளம், இரண்டு வருடம் விடாத மின்வெட்டு, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி மாற்றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, ராஜீவ், இந்திரா படுகொலைகள், எம்.ஜி.ஆர் மரணம், ஜெயலலிதா அரஸ்ட், புயல், என நிறுவனங்கள் முடங்கக் காரணமா இல்லை?
"தினக் கூலிகள் கஷ்டப் படுறாங்க"
பதில் 1 - 500, 1000 நோட்டுகளில் கூலி வாங்கும் தினக்கூலிகள் மிகக் குறைவு. 300, 250, 400 போன்ற டினாமினேஷன்களில் வாங்குவோருக்கு 100 ரூபாய் நோட்டுக்களில் தான் பட்டுவாடா நடக்கும். நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.
பதில் 2 - டெம்ப்ளேட் வார்த்தைகளைப் போட்டு எழுதும் திறமை எல்லாருக்கும் வந்து விட்டது. தினக்கூலிகள், பாமரர்கள், கஷ்டம், விவசாயிகள், பாடு படுகிறார்கள், இயல்பு நிலை, கட்டில், தொட்டில், மஞ்சம், நெஞ்சம், ப்ளா, ப்ளா, ப்ளா,
"நாளொன்றுக்கு 4,000 ரூபாய் தான் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்க முடியும் (18-ம் தேதி வரை நாளொன்றுக்கு ரூ. 2000, அதன் பிறகு ரூ. 4,000)"
"பதில் தந்தவர்
மாயவரத்தான் கி ரமேஷ்குமார்
- அதில் என்ன தவறு? நாளொன்றுக்கு 4,000 ரூபாய் மட்டும் தான் உபயோகிக்க முடியும் என்று கட்டுப்பாடு விதித்தால் தான் தவறு. 4,000 ரூபாய் ரொக்கமாக எடுக்கலாம். அதைத் தாண்டி தான் உபயோகிப்பேன் என்றால் ஆன்லைன் ட்ரான்ஸ்ஃபர் செய்யுங்கள்.. செக் கொடுங்கள்.. POS உபயோகியுங்கள்"
"மைண்ட் வாய்ஸ் - பல கோடி ரூபாயை நான் கையில் தான் வைத்துக் கொண்டிருப்பேன். என்னைக் கேள்வி கேட்கக் கூடாது"
"பதில் - மாயவரத்தான் - என்று கேட்பது உங்களுக்கு சரி என்றால், வங்கியிலிருந்து இவ்வளவு தான் பணமாக தர முடியும் என்று அரசாங்கம் உத்தரவிடுவதில் என்ன தவறு? பிடிக்கவில்லையென்றால் ‘அரசாங்கத்தின் பணத்தை நான் உபயோகிக்க முடியாது’ என்று தூர வீசிவிட்டுப் போங்களேன்யா. யாரு வேண்டாம் என்று சொன்னார்கள்?
அல்லது வேறு எங்கு உங்கள் இஷ்டப்படி எல்லாம் பணத்தை கையில் வைத்துக் கொண்டு புழங்கலாம் என்று சலுகை தருகிறார்களோ, அங்கேயும் செல்லலாம் - அவர்கள் வரவேற்றால்"
தொடரும்
கீழே வங்கி ஊழியர் தினேஷ் அவர்களின் கமெண்ட் ஐப் படிக்கவும்.
(Can withdraw 10000 perday... Now it increased... 4000 fr only exchange.... )

டீமானடைசேஷனை முன்னிட்டு - பதிவு 2

டீமானடைசேஷனை முன்னிட்டு 14 நவம்பர் 2016 அன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சில கருத்துக்கள். 

------------------------------------------ 

(பி.ஜே.பி, மோடி, ஏழைகள் பாவம் அது இது என முன் முடிவுகளுடன் படிக்க வேண்டாம்) 

------------------------------------------

கேள்வி பதில் - 2 

"500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதாமே"

"அது பயமுறுத்தும் வகையில் வைக்கப்பட் தலைப்பு. சாமானியர்கள் பயப்படும் அளவுக்கு ஒரேடியாக அப்படி ஆகி விடவில்லை. இன்று முதல் 500 ரூபாய்க்கு புதுசு வருதாம். 2000 ரூபாய் ஆல்ரெடி வந்தாச்சாம். ஆக, 1000 மட்டும் தான் செல்லாது"

"இப்படி ஒரே நைட்ல செல்லாது ன்னு சொல்றதுக்கு பதிலா, டிசம்பர் 30 வரை செல்லும் னு அறிவிச்சிருக்கலாமே"

"பதில் 1 - கிட்டத்தட்ட இரண்டும் கலந்த நிலை தான் இப்போது. கடைகளில் தான் செல்லாது. டிசம்பர் 30 வரை பேங்கில் செல்லுமே"

"பதில் 2 - அப்படி சொல்லியிருந்தா இன்னைக்கு 44 இலட்ச ரூபாய் செல்லா நோட்டுகளை வேலூர் கோவிலில் கொண்டு கொட்டிய பெரிய மனிதர் நின்று நிதானமாக பினாமிகளை வைத்து தினம் தினம் வேறு வேறு வங்கிகளில் அந்தப் பணத்தை வௌ்ளையாக்கி இருப்பார். இவர் போல் எத்தனையோ இலட்சம் பேர் செய்திருப்பார்கள்". 

"என் சொந்தக்காரர் கைல பிஸினஸ் பணம் 3 இலட்சம் வச்சிருக்கார். பாவம். அவர்லாம் என்ன செய்வார்?"

"முதல் பதில் - அது உண்மையிலேயே உங்க சொந்தக் காரரா? இல்ல நீங்களேவா?"

"பதில் 2 - பிஸினஸ் பணம் தானே? பயம் ஏன்? மூன்று இலட்சம் இருந்தா, வீட்ல இருக்குற நாலு பேர் அக்கவுண்ட்ல பிரிச்சு பேங்க்ல கட்டுங்க. வொய் பொலம்பிங்?"

"பேங்குல கட்டுனா வருமான வரி பிடிப்பாங்களாமே?"

"பதில் 1 - அப்போ இதுவரை கட்டலை. அப்படித்தானே?"

"பதில் 2 - 3 இலட்ச ரூபாய் பல்க் ஆ வர்ற அளவுக்கு பிஸினஸ் பண்றாருன்னா, வருமான வரி கட்டியிருக்கணுமே. கட்டியிருந்தா பயப்படாமே பேங்க்ல போய் கட்டச் சொல்லுங்க" 

உங்க மைண்ட் வாய்ஸ் - இல்ல, கொஞ்சமா கணக்கு காட்டி வரி கட்றாரு. முழுசா கட்றதில்லை. 

(உதா - மாதம் மூன்று இலட்சம் சம்பாதிப்பவர்கள் எல்லாம், வருடம் வெறும் 5 இலட்சம் என கணக்குக் காட்டுபவர்கள். அதாவது உங்களுக்கு பில் போடாமல் துண்டுச் சீட்டில் எழுதியே பொருள் விற்கும் மளிகைக் கடை அண்ணாச்சி போன்றோர், ஹோல்சேல் கடை சேட்டு, ஸ்வீட் கடைக்காரர்கள், பொருள் கை மாற்றி கமிஷன் வாங்கும் நபர், லேண்ட் புரோக்கர்கள், சீட் வாங்கிக் கொடுத்து கமிஷன் வாங்குவோர், பாட்டி பெயரில் டாடா ஏஸ் வாங்கி வாடகைக்கு விடுபவர்கள், மொத்தமாய் கூலி வேலைக்கு ஆள் அனுப்பி கமிஷன் வாங்குவோர் ப்ளா, ப்ளா, ப்ளா) 

"பதில் - இவ்ளோ நாளா எத்தனை வருஷம் கட்டாம எஞ்சாய் பண்ணியிருப்பீங்க? இப்போ கட்டுங்க"

இந்த இடத்தில் தனியார் பெரு நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களையும், நாம் எப்போதுமே திட்டிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களையும் பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் தான் ஒழுங்காக வரி கட்டிக் கொண்டு இருப்பவர்கள். வரி பிடித்தம் போகத்தான் சம்பளம் கைக்கே வருகிறது. 

தொடரும்..


டீமானடைசேஷனை முன்னிட்டு - பதிவு 1

டீமானடைசேஷனை முன்னிட்டு 14 நவம்பர் 2016 அன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சில கருத்துக்கள். 

(பி.ஜே.பி, மோடி, ஏழைகள் பாவம் அது இது என முன் முடிவுகளுடன் படிக்க வேண்டாம்) 

மருத்துவச் செலவு, காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். அந்த 5 சதம் பேரை விட்டு விட்டுப் பார்த்தால் மற்றவர்கள் புலம்புவதில் அர்த்தமே இல்லை. 

(டிஸ்கிளெய்மர் - எனக்கு அரசியல் என்றாலே வேப்பங்காய். நான் யாருக்கும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது)

கல்யாணம் போன்ற மிக அத்தியாவசியமான செலவுகளைச் செய்பவர்களுக்கும் கொஞ்சம் தடுமாற்றம் தான். ஆனால் என் பர்சனல் கருத்து கல்யாணத்திற்கான பொருட்கள் வாங்கும் போது கூட கடைக்காரரின் வங்கி அக்கவுண்ட் டுக்கு பணம் அனுப்பிப் பொருள் வாங்க முடியும். நாலரை வருடம் முன்பு என் கல்யாணத்தின் போதே பல இடங்களில் கேஷ்லெஸ் பணம் டிரான்ஸ்பர் செய்தேன். இங்கே பிரச்சினை என்னவென்றால் பலரும் பில் போடாமல் வியாபாரம் செய்வதே. பில் போடாமல் வியாபாரம் செய்யும் நீ, ஆல்ரெடி அரசாங்கத்தை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கிறாய். அப்போ அவதிப் படு. 

சில கேள்வி பதில்கள்

"நான் நைட்டு அஞ்சு ஏ.டி.எம் போனேன். ரெண்டு கி.மீ சுத்துனேன்" 

"கபாலிக்காகவோ, வேதாளத்துக்காகவோ, ரெமோவுக்காகவோ கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கலை? வாங்கினதை விலாவாரியா ஸ்டேட்டஸ் போடலை?"

"இல்லியே. நான் போகலை. நான் டாரண்ட்ல டவுன்லோட் பண்ணியில்ல பார்த்தேன்"

"இது வேற டிபார்ட்மெண்ட். ஆபீஸர்ஸ் இவரை திருட்டு பிரிண்ட் பார்த்த கேஸூல புக் பண்ணுங்க"

"நான் படத்துக்கே போகலை. நான் கஷ்டப்படுறேனே?"

"மாரியம்மன் கோவில் பண்டிகைக்கோ, வைகுண்ட ஏகாதசிக்கோ பெருமாள் கோவிலில் அனுமார் வால் நீளக் கியூவில் நிற்கலை?"

"நான் நாத்திக வாதி. நான் அதுக்கும் போனதில்லை, பேங்குல தான் என் நேரம் வேஸ்ட் ஆகுது"

"பத்து வருடம் முன்னால் இதே போல பேங்க் வேலைகளுக்குக் கால் கடுக்க நிற்கவில்லையா? இப்போது ஒரு இரண்டு முறை நிற்கலாமே?" 

"பேங்க் அக்கவுண்ட் இல்லாம நெறைய பேர் கஷ்டப்படுறாங்களே" 

"கடந்த இரு வருடங்களாகவே அரசு, வீட்டில் இருந்த பெருசுங்களைக்கூட அள்ளிக் கொண்டு போய் வங்கியில் கணக்கு துவக்கிக் கொடுத்தார்கள், என் தந்தையும் அதில் ஒருவர். பேங்க் அக்கவுண்ட் இல்லையென்றால் அது உடான்ஸூ" 

"இல்லையே, எனக்குத் தெரிஞ்சு இன்னும் நிறைய பேர் அக்கவுண்ட் இல்லாம இருக்காங்களே, அவங்க பாவம் இல்லையா?"

"நேற்று வரை அவனைப் பற்றிக் கவலைப்படாத நீ, இப்போ அவர்களைப் பற்றிப் பேச ரைட்ஸ் இல்லை" 

"அம்பானியையும், அதானியையும் விட்டு விட்டு ஏழைகளைக் கஷ்டப் படுத்துறார் மோடி"

முதல் பதில் - அம்பானியையும், ஏழைகளையும் ஏன் கம்பேர் செய்ய வேண்டும்? 

பதில் 2 - வேறொருவரின் பதிவில் படித்தது. "டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், அதானி, போன்ற பெரு நிறுவனங்களை மூடினா, அதுலயே நேரடியாகவும், அவற்றைச் சார்ந்தும் 80 சதவீதம் பேருக்கு வேலை போகும். அதிலே இன்னும் பெரிய கலவரம் வரும். பரவல்லயா?

பதில் 3 - கம்பெனிகள் என்பவை வரையறுக்கப் பட்ட சட்டதிட்டங்களின் மூலம் இயங்குபவை. அவர்கள் எல்லாவற்றையும் அக்கவுண்டில் கொண்டு வருபவர்கள். (சட்டத்தில் உள்ள சந்து பொந்துகளை உபயோகித்து சம்பாதிப்பது உண்டு தான். ஆனால் அதை இங்கே கம்பேர் செய்யக் கூடாது) 

தொடரும்.

"நான்" ஐ நிலைநிறுத்த வேண்டி

வெகுநீண்ட காலத்திற்கு முன் ஒரு சிறுகதை படித்திருக்கிறேன். "சமீரான் பரூவா" என்றொரு மனிதனைப் பற்றிய கதை. வெகுகாலம் மக்களுக்காகப் போராடிய ஒருவன், தன்னை மையப்படுத்தி இயங்கிய உலகத்தில் வாழ்ந்த ஒருவன், அன்று தான் இல்லாமல் உலகம் தன்போக்கில் இயங்குவதைப் பார்க்கிறான். தான் இல்லாமலும் தன் தேவை இல்லாமலும் உலகம் தன் இயல்பில், தன் இயக்கத்தில் இருப்பதை அவனால் முதலில் நம்ப முடியவில்லை. ஆனால் அதுதானே நிஜம்? மெள்ள மெள்ள அந்த நிஜத்தை ஏற்றுக்கொள்ளும் அவன் பிறகு தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டு மெள்ள அகல்கிறான். 

அது போலவே தானே நிஜ உலகும்? நாம் இருந்தாலும் இல்லையெனினும் அது தன் பாட்டுக்கு இயங்கவே செய்கிறது. பலருக்கு இது புரிவதில்லை. நாம் இருக்கும் உலகிலேயே நம் சுவடே படாத பல "பேரரல்" உலகங்களும் இயங்குவதுண்டு. டிஜிட்டல் என்றால் என்னவென்றே தெரியாத ஓர் உலகமும் உண்டு. தமிழில் இரண்டெழுத்தைக் கூட சேர்த்துப் படிக்கத் தெரியாத ஓர் உலகமும் உண்டு. சாலையில் இடது புறம் தான் போக வேண்டும் என்று ரூல்ஸ் தெரியாத ஓர் உலகமும் உண்டு. "அவங்க கிட்ட இருக்கு, நான் எடுத்துக்குறேன்" என்று சர்வசாதாரணமாகக் கொள்ளை அடித்து விட்டு (தீரன் திரைப்படத்தில்) ஆரவல்லி மலைத்தொடர்களில் பதுங்கும் ஆட்கள் கொண்ட ஓர் உலகமும் உண்டு. 

நிஜம் இது தான். நம் உலகத்தின் மைய அச்சு நாமாக இருக்கலாம். ஆனால் நிஜ உலகம் தனக்கென்று ஒரு அச்சை வைத்துக்கொண்டு இயங்கியபடியே இருக்கின்றது. ஏன்? நாளையே ஒரு பெரும் விண்கல் வந்து விழுந்து இந்தப் பூமி வெடித்தழிந்தாலும், பிரபஞ்சம் தொடர்ந்து இயங்கியபடியே தான் இருக்கப்போகின்றது.

பிறகெதற்கு இந்த "நான்" ஐ நிலைநிறுத்த வேண்டி இவ்வளவு போராட்டம்?

------------------ 

14 நவம்பர் 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியதன் லேசான திருத்தப்பட்ட வடிவம் 

புதன், 11 நவம்பர், 2020

எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்...?

12 நவம்பர் 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

ஏழே நாளில் நீங்கள் ரெண்டு கிலோ எடை குறையலாம் என்றோ, பதினைந்தே நாட்களில் நாலரை கிலோ எடை குறையலாம் என்றோ போன மாதம் யாரேனும் சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டேன். அப்படி வரும் விளம்பர ஃபோட்டோக்களைக்கூட "அடப்போங்கடா என் ஃபோட்டோஷாப்பு" என்று ஊதித்தள்ளி விட்டு போகிறவன் நான்.

ஆனால், போக வர விமானப் பயணநாட்கள் உட்பட வெறும் ஏழே நாட்களில் நான் இழந்த எடை ரெண்டு கிலோ. உடல் ஒட்டாத உணவுகள், பின்பக்கம் சிவப்புக் கொடி காட்டினாலும் நிற்காத வெளியேற்றம், ஓய்வு குறைந்த நாட்கள், இடைவிடாத முன் பின் பயணங்கள் என நொய்டா என்னைக் கடைந்து விட்டது.
என் வாழ்வில் முதன் முறை எடை குறைப்பு என்ற விஷயம் நடந்திருக்கிறது. நானெல்லாம் ரொம்ப காலமா 50 கிலோ தாண்டாத அண்டர் வெயிட்டு கேஸ் பாஸ். அதனாலேயே இரண்டு முறை இரத்த தானம் கொடுக்கப் போய் வாசலோட திரும்பி வந்திருக்கிறேன். ஏதோ கல்யாணம் லாம் செஞ்சு, கண்டபடி வெளியே அசைவம் தின்னுமேய்ஞ்சு ஏதோ என் ஹைட்டுக்கு ஏற்ற மேட்ச்சா 65 - 66 கிலோ வைத்திருந்தேன். நொய்டா வால 2 கிலோ போச்சு.
மீண்டும் வினாசகாலே வந்தது தீபாவளி ரூபத்தில். அதாவது பட்டாசு ரூபத்தில். எங்க நாலு வாண்டுகளையும் குஷிப்படுத்துகிறேன் என்ற பேரில் தினமும் கொஞ்சம் என மூன்று நாளாக வரிசையாக மத்தாப்பு வெடித்துக் காட்டிக் கொண்டிருந்தேன். தீபாவளியன்று மச்சான், "உங்களை நம்பி இன்னோரு 1500 ஓவாவுக்கு வாங்கி வைத்திருக்கேன், வந்து வெடிச்சுட்டுப் போங்க" என்று பாசமாக அழைத்ததில் வந்தது வினை இருமல் ரூபத்தில்..
தீபாவளிப் பட்டாசுப் புகையும், குளிர் கிளைமேட்டும் சேராமல் தொடர் இருமல், சளி, நெஞ்செரிச்சல், என உடம்புக்குள் டிரெயின் ஓட ஆரம்பித்து ஜூரம், குளிர் ஜூரம், கடும் உடல்வலி, முதுகு வலி, மீண்டும் வெளியேற்றம், கபம், தலைவலி என ஒவ்வொரு ஸ்டாப்பிங்காக நின்று நின்று 4 நாட்கள் தொடர்ந்து ஓடியது.
விளைவு. இன்றைய எடை 61.5 மட்டுமே. என்னை வாழ்த்துங்க ப்ரண்ட்ச்.
.

பள்ளிகளைத் திறக்கலாமா? வேண்டாமா?

 கடை கண்ணி தொறந்து கூட்டம் அள்ளுது.

குழந்தைகளை ஃபுட்பால், பேஸ்கட் பால்னு எல்லா கிரவுண்டுக்கும் கொண்டு போய் விட்டு, டீம், டீமா சேர்ந்து விளையாடுறாங்க.
யோகா க்ளாஸ், ஜிம்முன்னு காலேஜ் பசங்க சுத்திட்டு இருக்கானுக.
எல்லா ரெஸ்ட்டாரெண்டுலயும் பிள்ளைகளோட போய் குடும்பமா உக்காந்து தின்னு, கூடி கும்மியடிக்கிறாங்க.
தீபாவளி பர்ச்சேசுக்கு மார்க்கெட்ல சின்னச் சின்ன பசங்களை கூட்டிட்டுப் போய் கடைவீதி நிரம்பி வழியுது.
துணிக்கடைல ஃப்ளோர் வாரியா வயசு வாரியா பசங்களை கூட்டிட்டுப்போய் துணி எடுக்குறாங்க, பலகாரக்கடை, பட்டாசுக்கடைல எவ்வளவு கூட்டம்...
டவுன் பஸ்ஸூல நிக்க இடமில்லாம பிள்ளைங்களோட ட்ராவல் பண்றாங்க.
"போகலைன்னா ஒறமொறை கோச்சுக்கும்"னு கல்யாணத்துக் கும்பலா போறாங்க.
எழவு வீட்டுக்கு "பாட்டி மூஞ்சிய ஒரு தடவை பிள்ளைங்களுக்குக் காட்டிடுவோம்" னு பிள்ளைங்களோட போய் கூட்டத்துல கறி சோறு திங்கிறாங்க.
காலேஜ் கவுன்சிலிங் அட்மிஷன் ஆரம்பிச்சாச்சு, பசங்களோட கேம்பஸ் கேம்பஸா ஏறி இறங்குறாங்க. ஆனா, பள்ளிக்கூடம் திறக்கலாமா-ன்னு (அதுவும் 9 ஆம் வகுப்புக்கு மேல) கேட்டா "வேணாம், கொரோனா வந்துட்டா?"ன்னு கேக்குறாங்க இந்தப் புத்திசாலி பெற்றோர்கள். ஏன்னா மேல சொன்ன இடத்துலல்லாம் வராத கொரோனா ஸ்கூல்ல போய் ஒளிஞ்சிகிட்டு "பிள்ளைங்க வரட்டும், புடிச்சிக்குறேன்" னு வெயிட் பண்ணுதாம்.
உண்மையிலேயே கொரோனாவைப் பற்றி எந்த ஒரு பேஸிக் அறிவும் இவர்களுக்குக் கிடையாது. தாடைக்கு மாஸ்க் போடும் புத்திசாலிகள், சாக்கடை நாற்றத்தின் போது மூக்கைப் பொத்துவதைப்போல சேலைத் தலைப்பை பொத்துபவர்கள் (கொரோனா வராதாம்),
நாலு பேர் சானிடைசர் போட க்யூவில் நின்றால் சைடில் புகுந்து கடைக்குள் செல்பவர்கள், மாஸ்க் போட்டோ இருந்தாலும் பக்கத்தில் வந்து மாஸ்க்கை இறக்கிப் பேசுபவர்கள். நான் லான் செக்கப்பே போகல, ஸ்டீல் பாடி என்று வீம்பு பேசுபவர்கள் (உனக்கு ஸ்டேஜ் 5 வந்திருக்கும் மூதேவி, அது கொரோனா உனக்குப் போட்ட பிச்சை) என்று நம்மைச்சுற்றி ஒரு பெரும் அறிவாளிக் கூட்டமே இருக்கிறது. இதில் நீங்களும், நானும் கூட இருக்கலாம். .
இதுல இன்னும் சில பேர் "அதுக்கும் மேல" போய், என் புள்ளைக்கு கொரோனாவுல செத்துப் போச்சுன்னா அரசாங்கம் இழப்பீடு தரணும்னு கேட்டிருக்கானுங்க (செய்தி பார்க்க). 135 கோடியைத் தாண்டிய நாட்டில் பிள்ளைகள் என்பவை நம்மாட்களுக்கு வருமானம் தரக்கூடிய சோர்ஸ், அவ்வளவுதான். நாலு பெத்து நாலையும் வேலைக்கு அனுப்பிச்சா எவ்ளோ வரும்னு பேசுறவன்களை என் கண்ணால பாத்துருக்கேன். அதுல ஒன்னு செத்தா எவ்ளோ காசு வரும்னு போதைல புலம்பினவர்களையும் பாத்திருக்கேன்.
போர்வெல் குழியில விழுந்து இறந்த சுர்ஜித் அமெரிக்கக் குழந்தையா இருந்திருந்தா அவங்கப்பனை அரெஸ்ட் பண்ணி உள்ளே போட்டு காலம் பூரா நல்ல வேலைக்குப் போக விடாம ரெக்கார்ட்ல ஏத்தியிருப்பாங்க (ஒரு விபரம் தெரிந்த அமெரிக்க நண்பர் சொன்னது). ஆனா அது இந்தியக் குழந்தை என்பதால் போர்வெல்லை மூடாத பொறுப்பற்ற அப்பனுக்கு, 40 இலட்சம் வரை கொட்டிக் கொடுத்தார்கள் எதையோ தின்னும் ஓட்டு வங்கி அரசியல் வாதிகள்.
இந்த ஒரு வருட கல்வி இழப்பு இன்னும் சில ஆண்டுகளில் ஆண்டுகளில் வேலைக்கு வரப்போகும் "வொர்க் ஃபோர்ஸ்" களில் கண்ணுக்குத் தெரியாத பெரிய இழப்பை ஏற்படுத்தப் போகுது. இந்த வருட அறிவியல் பாட பேஸிக்ஸை படிக்காமல் விட்டவன் எத்தனை பேர் ஆராய்ச்சியாளர் ஆகுற வாய்ப்பை இழக்கப்போகிறார்கள்? இந்த ஒரு வருடம் உடல் பருமன் ஏறிய குழந்தைகள் எத்தனை பேர் 20 வருடம் கழித்து அதீத உடல் உபாதைகளால் கஷ்டப்படப்போகிறார்கள்? அதில் எவ்வளவு பேர் ஸ்போர்ட்ஸ்மேன் ஆகும் கனவை இழக்கப் போகிறார்கள்?
இந்த வருடத்தை "ஜீரோ அகாடமிக் இயர்" ஆக அறிவித்தால் விட்டுப்போன சிலபஸை கல்வித்துறை எப்படி வரும் ஆண்டுகளில் மிக்ஸ் செய்ய முடியும்? செய்தாலும் அதற்கு எத்தனை கமிட்டி போட வேண்டும்? எத்தனை மீட்டிங், ஸ்கூல் சிலபஸ், காலேஜ் சிலபஸ், யுனிவர்சிடி சிலபஸ் என எந்தெந்த சிலபஸை மாற்றுவது? எத்தனை கோடி புத்தகங்களை மீண்டும் அச்சடிப்பது? அச்சடித்த கோடிக் கணக்கான புத்தகங்களை என்ன செய்வது? ஆனா அதைப்பத்தி நமக்குக் கவலையில்லை.
அதே போலத் தான் டாஸ்மாக்கும். குடி ஏற்படுத்தும் எதிர்கால ஸ்கில் இழப்புகள், அது ஏற்படுத்தும் விபத்துக்களால் ஆகும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பொருளிழப்பு, இன்ஷூரன்ஸ் மூலம் வீணாகும் தொகையெல்லாம் நம் கண்ணுக்குத்தெரியாதே. "குடி ஒரு பேரானந்தம்" னு போதையைக் கொண்டாடுவோம்.
ஆனா நாம, கண்ணுக்குத் தெரிவதை மட்டும் தானே நம்புவோம்? கண்ணுக்குத் தெரியாத கெட்டதையோ, கண்ணுக்குத் தெரியாத நல்லதையோ நம்ப ஒத்துக்க மாட்டோமே. 600 கோடி செலவு பண்ணி ராக்கெட் விட்டா எதிர்காலத்துல என்ன நன்மைன்னு யோசிக்காம அந்த 600 கோடிக்கு சோறு வாங்கி ஏழைகளுக்குப் போட்டா நல்லது ன்னு நினைக்கிற "சிவகுமார்கள்" இருக்கும் வரை இந்த நாடு உருப்படாது.
என்ன சொல்ல வருகிறேன் என்று சரியாகப் புரிந்து கொள்ளாத சிலருக்காக மறுபடி அழுத்தமாக ஒரே கேள்வி கேட்கிறேன் "மார்க்கெட்ல வராத கொரோனா, பஸ்ஸூல போனா வராத கொரோனா, துணிக்கடை கூட்டத்துல வராத கொரோனா, கிரவுண்டுல கிரிக்கெட் விளையாடும்போது வராத கொரோனா, கறிக்கடையில வராத கொரோனா, மீன் மார்க்கெட்ல வராத கொரோனா, காய்கறிச் சந்தையில வராத கொரோனா, ஸ்கூல்ல தான் வருமா?"
நன்றிகள்.
- எஸ்கா