ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

என்கவுண்டர் மனித உரிமை மீறல் எனும் கருத்து கந்தசாமிகள்

 28 பிப் 2012 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

கொள்ளையர்களும், பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் என்கவுண்டர் செய்யப்படும் போது மனித உரிமை மீறல் என்று கொடிபிடித்துக்கொண்டு வரும் மனித உரிமைவாதிகள் எனும் கருத்து கந்தசாமிகள்............ 

கொள்ளையர்களாலும், பயங்கரவாதிகளாலும், தீவிரவாதிகளாலும் ஒற்றையாய், இரட்டையாய், நூற்றுக்கணக்கில் காமன் மேன்கள் கொல்லப்படும்போது எங்கே அய்யா போயிருந்தீர்கள்...?

கசாபுக்கு மனித உரிமை என்று கருணை காண்பித்து இன்னமும் சோறு போட்டு கேஸ் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் அவனால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி குடும்பத்தலைவர்கள் விட்டுப்போன கடமைகளைத் தொடர நாம் என்ன உதவி செய்தோம்...? 

சம்பவம் நடந்த இரண்டாவது நாள் கழுவி விடப்பட்ட ரயில்வே பிளாட்ஃபார்மின் போட்டோக்களை பேப்பரில் பார்த்து "இயல்பு வாழ்க்கை திரும்பியது" என்ற பிரிண்டட் அபத்தத்தை நம்பும் அப்பாவிகளில் ஒருவரில் நீங்கள்?

திங்கள், 21 பிப்ரவரி, 2022

கேரள ஆட்டோ சேட்டன்களின் கனிவுகள்..

20 பிப் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

"சேட்டா, ஃபாத்திமா ஸ்கூல் பூவாமோ?"

"எவிட?"

"இவிட, ஃபாத்திமா ஸ்கூல்..." 

"ஹாங்.. பூவாம்... இருக்கி... நாயள்கமதந்கமளனக்நதசாளனக்ளநமகு" (அவரு சொன்னது எனக்கு இப்படித்தான் புரிஞ்சுது) 

"எத்தன ரூவா?"

"அம்பது கொடு"

"நாப்பது கொடுக்காம்"

"செரி, ஏறு"

"ஓகே"

"டுர்ர்ர்ர்ர்ர், பாம்... பீப்பீ... பாம்... பாம்... டுர்ர்ர்ர்ர்ர், சொய்ய்ய்ய்ய்ங்க்., ஜொய்ங்க்க்., டுர்ர்ர்ர்ர்ர், டுஸ்ஸ்ஸ்ஸ்"...

"ஸ்கூல் வந்நு" 

"தேங்க்ஸ் சேட்டா, இந்தா நூறு"

"பேலன்ஸ் புடிச்சோ.... பேந்யளகனம்தநசுபம்ாளனகம்பஒளுனள்நுதஔ (என்னமோ சொன்னாரு, எனக்குத் தான் புரியலை) முப்பது எடுத்து" (இது நல்லா புரிஞ்சு) 

"நாப்பது பறஞ்சில்லே?" 

"கொற்கதளன்கதசடமுநசமுக்னளுகள (புரியல) முப்பது மதி (நல்லா புரிஞ்சுது)" 

.

பக்கமா தானே இருக்கு, ஒன்றரை கிலோ மீட்டர்தான் இருக்கும், இதுக்கு நாப்பது வேணாம். முப்பதே போதும்னு சொல்லியிருப்பார் போல. 

.

சேட்டா, நீ வாழ்க, நின் கொடை (நான் நாப்பது ஓகே சொன்னப்புறம் பத்து திருப்பித்தந்தா அது அவர் தந்த கொடை தன்னே?, மனசிலாயோ?) வாழ்க, நின் சுற்றம் வாழ்க.. நின்ட ஸ்டேட் வாழ்க... வாழ்க.. வாழ்க..


ரஜினியை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்?

22 பிப்ரவரி 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

ரஜினியை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? 

புரிதல் Option 1 - தன்னை கிண்டல் செய்தவனை காத்திருந்து பிஜேபியை (பிஜேபியா? ஆமாம் - அதிமுக அரசு - பிஜேபி ஆதரவு - ரஜினியும் இணக்கம், ப்ளா, ப்ளா) வைத்துப் பழிவாங்கினார் ரஜினி
புரிதல் option 2 - அவனே ஒரு திருட்டுப் பயல். அவன் சொன்னதை வைத்து ரஜினியின் நல்ல இமேஜுக்கு களங்கம் விளைவிக்கப் பட்டுவிட்டது.
புரிதல் option 3 - எதையாவது வச்சு meme மட்டும் தான் போடுவோம். புரியிற மாதிரி சொல்ல மாட்டோம். நீங்களே எதையாவது கண்டபடி புரிஞ்சுக்கோங்க.




வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

குடுத்த காசை திருப்பி கேக்குறது ஒரு குத்தமாய்யா?

11 பிப் 2015 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

30 ஓவா சம்பளம் வாங்கும்போது ஏமாந்த 10 ஓவால இருந்து ரெண்டாயிரம் ஓவா சம்பளம் வாங்கும்போது ஏமாந்த 240, இருபது வாங்கும்போது ஏமாந்த ஆறாயிரம் - னு அது ஒரு பெரிய லிஸ்ட்டு. இன்னும் எத்தனை நாளைக்குடா ஏமாத்திகிட்டே இருப்பீங்க. திங்கிற சோறு செமிக்குமா? உருப்படுவியா நீ (என்றுதான் சாபம் விட்டு தான் மனசைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. என்னதான் வாய் கிழிய பேசினாலும், கீ போர்ட் தேய பதிவு போட்டாலும் நானும் நிஜ வாழ்வில் ஒரு சாமான்யன் தானே?)

என்னை நம்ப வைத்து ஏமாற்றியவர்கள் என்று 15 க்கும் மேற்பட்டோர். உயிர் நண்பர்களாக நினைத்தவர்களும் அதில் அடக்கம்.
உன் தங்கச்சி கல்யாணத்துக்கு (பவுன் 7500 விற்ற போது) ரூ.25,000 ஏற்பாடு செஞ்சு தரேன் என்று சொல்லிச் சொல்லியே (நான் 2007 ம் ஆண்டு 6000 சம்பளம் வாங்கும் போது) என்னிடம் ரூ.4500 வாங்கின துரோகி ஒருத்தன் இன்னமும் (அப்போ விலைவாசி என்ன? இப்போ விலைவாசி என்ன?) தராமல் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறான். கடைசியில் அந்த ரூ.25,000 கடனையும் ஏற்பாடு செய்து தரவில்லை.
இன்றைக்கு தான் அந்த நாயை வாட்ஸ் அப்பில் ஒரு குரூப்பில் வைத்து அவமானப் படுத்தினேன். இந்த மாதக் கடைசியில் தருகிறேன் (அசலை மட்டும்) என்று சொல்லியிருக்கிறது. பார்க்கலாம்.

----------------------------------------------------------------------
குடுத்த காசை திருப்பி கேக்குறது ஒரு குத்தமாய்யா? - தொடர்ச்சி....
சென்ற மாதம் அழாத குறையாக ஒருத்தன் மனைவிக்கு உடம்பு சரியில்லை, குழந்தைக்கு பேதி என்றெல்லாம் சொ ல்லி 3000 ரூபாய் வாங்கிக் கொண்டு போனான். பிப்ரவரி சம்பளம் வாங்கிய அடுத்த நிமிடம் உனக்கு ஃபண்ட் டிரான்ஸ்பர் செய்து விடுகிறேன் என்று சத்தியம் செய்யாத குறையாக அழுது வாங்கினான். அவனுக்கு 8-ம் தேதி சம்பளம் போட்டு விட்டார்கள். அன்றைக்கு மட்டும் ஆறு முறை கால் செய்து விட்டேன்.
நாய் இன்னும் தராமல் மூன்று நாட்களாக "பேங்க் டைம் முடிந்து விட்டது, ஏ.டி.எம் அவுட் ஆஃப் ஆர்டர், பின் நம்பர் மறந்து விட்டேன், இன்னொரு ஏடிஎம்மில் பணம் இல்லை என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
என்னிடம் ஐசிஐசிஐ அக்கவுண்ட் உண்டு அவனிடமும் ஐசிஐசிஐ அக்கவுண்ட் உண்டு. இருவரிடமும் ஹெ.ச்.டி.எஃப்.சி அக்கவுண்டும் உண்டு. இரண்டிலும் நாய் ஆன்லைன் லாக்இன் வைத்திருக்கிறது. எதில் வேண்டுமானாலும் ஃபண்ட் டிரான்ஸ்பர் செய்யலாம். ஆன்டிராய்டு மொபைல் அப்ளிகேஷனும் ஆக்டிவேட் செய்து வைத்திருக்கிறது. அதில் கூட செய்யலாம். இதுபோக கோவையில் தெருவுக்குத் தெரு ஊருக்கு ஊர் ஐசிஐசிஐ மற்றும் ஹெ.ச்.டி.எஃப்.சி ஏடிஎம்கள் உள்ளன. அதுவும் போக ஐசிஐசிஐ கேஷ் டெபாஸிட் செய்யும் மிஷின்கள் இரண்டு இடத்தில் இருக்கின்றன. அதில் பணத்தை டெபாஸிட் செய்யலாம். எனக்கு ஒரு நிமிடத்தில் கிரெடிட் ஆகி விடும். அல்லது ஐசிஐசிஐ ஏடிஎம்மில் அக்கவுண்ட் டு அக்கவுண்ட் பண்ட் டிரான்ஸ்பர் செய்யலாம். இதே வசதி ஹெ.ச்.டி.எஃப்.சி ஏடிஎம்மிலும் உண்டு.
இவ்வளவு டெக்னாலஜி வளர்ந்த பிறகும் இப்படி காரணம் சொல்லி பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றும் பன்னிகளை என்ன செய்யலாம்?
--------------------------------------------------------------------------

வியாழன், 10 பிப்ரவரி, 2022

ஒரு கவுண்டமணியின் புலம்பல்


Me to my portfolio


உங்களுக்கு நான் என்னடா கொறை வச்சேன். என்னிக்காவது முழுசா ஒரு பச்சையைப் பாக்க விடுறீங்களா? பத்து பேர் க்ரீன்ல இருந்தா பத்து பேர் ரெட்ல போய் உக்காந்துக்கிறீங்க? பத்து பேர் செவம் மாதிரி வாங்குன வெலையிலயே கெடக்கீங்க.

நான் என்ன சரியா அலகேஷன் பண்ணலயா? நல்ல ஷேரான்னு பார்த்து வாங்கலியா? இல்ல நீங்க பிசினஸ் பண்றதுக்கு நான் எடஞ்சலா இருந்தனா? இல்ல நெறைய டிவிடெண்ட் கொடுங்கன்னு நச்சு பண்ணினேனா? என் 16 வருச சர்வீஸூல இப்படி ஒரு காரியம் நடந்ததே இல்ல. அப்பயாவது 50, 100 ன்னு இன்ட்ரா டேல காசு வரும் பஸ் காசுக்கு ஆவும். ஆனா இப்ப?

லாக் டவுனால கன்ஸ்ட்ரக்ஷன், சிமெண்டு ஷேரெல்லாம் இறங்கி வச்சிருக்கீங்க சரி. ஐடி, கெமிக்கலாம் ஏன்டா இறங்கி வச்சிருக்கீங்க? சரி அதுக்காவது எதாவது காரணஞ்சாெல்லலாம். குடி (Alcoholic Beverages) ஷேரெல்லாம் ஏன்டா இறங்கியிருக்கீங்க? உங்களுக்கு வெக்கமா இல்ல?

புதுசா மார்க்கெட்டுக்கு வந்தவங்கல்லாம் அவ்ளோ சம்பாரிச்சேன், இவ்ளோ சம்பாரிச்சேன்னு ஸ்கிரீன்ஷாட் போடுறாங்க. வெங்கி பாபா மாதிரி பழையா ஆளுங்களும், டெக்னிகல் பார்த்து பண்ற இன்னும் சில பேரும் கூட 70% Growth 80% CAGR ன்னு ஸ்கிரீன்ஷாட் போடுறாங்க. ஆனா நான் மட்டும் என்னடா பாவம் பண்ணேன். அவங்களுக்கு நான் என்னடா பதில் சொல்வேன்? நீங்களே வாயத்தொறந்து பதில் சொல்லுங்க.