20 பிப் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
"சேட்டா, ஃபாத்திமா ஸ்கூல் பூவாமோ?"
"எவிட?"
"இவிட, ஃபாத்திமா ஸ்கூல்..."
"ஹாங்.. பூவாம்... இருக்கி... நாயள்கமதந்கமளனக்நதசாளனக்ளநமகு" (அவரு சொன்னது எனக்கு இப்படித்தான் புரிஞ்சுது)
"எத்தன ரூவா?"
"அம்பது கொடு"
"நாப்பது கொடுக்காம்"
"செரி, ஏறு"
"ஓகே"
"டுர்ர்ர்ர்ர்ர், பாம்... பீப்பீ... பாம்... பாம்... டுர்ர்ர்ர்ர்ர், சொய்ய்ய்ய்ய்ங்க்., ஜொய்ங்க்க்., டுர்ர்ர்ர்ர்ர், டுஸ்ஸ்ஸ்ஸ்"...
"ஸ்கூல் வந்நு"
"தேங்க்ஸ் சேட்டா, இந்தா நூறு"
"பேலன்ஸ் புடிச்சோ.... பேந்யளகனம்தநசுபம்ாளனகம்பஒளுனள்நுதஔ (என்னமோ சொன்னாரு, எனக்குத் தான் புரியலை) முப்பது எடுத்து" (இது நல்லா புரிஞ்சு)
"நாப்பது பறஞ்சில்லே?"
"கொற்கதளன்கதசடமுநசமுக்னளுகள (புரியல) முப்பது மதி (நல்லா புரிஞ்சுது)"
.
பக்கமா தானே இருக்கு, ஒன்றரை கிலோ மீட்டர்தான் இருக்கும், இதுக்கு நாப்பது வேணாம். முப்பதே போதும்னு சொல்லியிருப்பார் போல.
.
சேட்டா, நீ வாழ்க, நின் கொடை (நான் நாப்பது ஓகே சொன்னப்புறம் பத்து திருப்பித்தந்தா அது அவர் தந்த கொடை தன்னே?, மனசிலாயோ?) வாழ்க, நின் சுற்றம் வாழ்க.. நின்ட ஸ்டேட் வாழ்க... வாழ்க.. வாழ்க..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக