ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

என்கவுண்டர் மனித உரிமை மீறல் எனும் கருத்து கந்தசாமிகள்

 28 பிப் 2012 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

கொள்ளையர்களும், பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் என்கவுண்டர் செய்யப்படும் போது மனித உரிமை மீறல் என்று கொடிபிடித்துக்கொண்டு வரும் மனித உரிமைவாதிகள் எனும் கருத்து கந்தசாமிகள்............ 

கொள்ளையர்களாலும், பயங்கரவாதிகளாலும், தீவிரவாதிகளாலும் ஒற்றையாய், இரட்டையாய், நூற்றுக்கணக்கில் காமன் மேன்கள் கொல்லப்படும்போது எங்கே அய்யா போயிருந்தீர்கள்...?

கசாபுக்கு மனித உரிமை என்று கருணை காண்பித்து இன்னமும் சோறு போட்டு கேஸ் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் அவனால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி குடும்பத்தலைவர்கள் விட்டுப்போன கடமைகளைத் தொடர நாம் என்ன உதவி செய்தோம்...? 

சம்பவம் நடந்த இரண்டாவது நாள் கழுவி விடப்பட்ட ரயில்வே பிளாட்ஃபார்மின் போட்டோக்களை பேப்பரில் பார்த்து "இயல்பு வாழ்க்கை திரும்பியது" என்ற பிரிண்டட் அபத்தத்தை நம்பும் அப்பாவிகளில் ஒருவரில் நீங்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக