வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

குடுத்த காசை திருப்பி கேக்குறது ஒரு குத்தமாய்யா?

11 பிப் 2015 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

30 ஓவா சம்பளம் வாங்கும்போது ஏமாந்த 10 ஓவால இருந்து ரெண்டாயிரம் ஓவா சம்பளம் வாங்கும்போது ஏமாந்த 240, இருபது வாங்கும்போது ஏமாந்த ஆறாயிரம் - னு அது ஒரு பெரிய லிஸ்ட்டு. இன்னும் எத்தனை நாளைக்குடா ஏமாத்திகிட்டே இருப்பீங்க. திங்கிற சோறு செமிக்குமா? உருப்படுவியா நீ (என்றுதான் சாபம் விட்டு தான் மனசைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. என்னதான் வாய் கிழிய பேசினாலும், கீ போர்ட் தேய பதிவு போட்டாலும் நானும் நிஜ வாழ்வில் ஒரு சாமான்யன் தானே?)

என்னை நம்ப வைத்து ஏமாற்றியவர்கள் என்று 15 க்கும் மேற்பட்டோர். உயிர் நண்பர்களாக நினைத்தவர்களும் அதில் அடக்கம்.
உன் தங்கச்சி கல்யாணத்துக்கு (பவுன் 7500 விற்ற போது) ரூ.25,000 ஏற்பாடு செஞ்சு தரேன் என்று சொல்லிச் சொல்லியே (நான் 2007 ம் ஆண்டு 6000 சம்பளம் வாங்கும் போது) என்னிடம் ரூ.4500 வாங்கின துரோகி ஒருத்தன் இன்னமும் (அப்போ விலைவாசி என்ன? இப்போ விலைவாசி என்ன?) தராமல் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறான். கடைசியில் அந்த ரூ.25,000 கடனையும் ஏற்பாடு செய்து தரவில்லை.
இன்றைக்கு தான் அந்த நாயை வாட்ஸ் அப்பில் ஒரு குரூப்பில் வைத்து அவமானப் படுத்தினேன். இந்த மாதக் கடைசியில் தருகிறேன் (அசலை மட்டும்) என்று சொல்லியிருக்கிறது. பார்க்கலாம்.

----------------------------------------------------------------------
குடுத்த காசை திருப்பி கேக்குறது ஒரு குத்தமாய்யா? - தொடர்ச்சி....
சென்ற மாதம் அழாத குறையாக ஒருத்தன் மனைவிக்கு உடம்பு சரியில்லை, குழந்தைக்கு பேதி என்றெல்லாம் சொ ல்லி 3000 ரூபாய் வாங்கிக் கொண்டு போனான். பிப்ரவரி சம்பளம் வாங்கிய அடுத்த நிமிடம் உனக்கு ஃபண்ட் டிரான்ஸ்பர் செய்து விடுகிறேன் என்று சத்தியம் செய்யாத குறையாக அழுது வாங்கினான். அவனுக்கு 8-ம் தேதி சம்பளம் போட்டு விட்டார்கள். அன்றைக்கு மட்டும் ஆறு முறை கால் செய்து விட்டேன்.
நாய் இன்னும் தராமல் மூன்று நாட்களாக "பேங்க் டைம் முடிந்து விட்டது, ஏ.டி.எம் அவுட் ஆஃப் ஆர்டர், பின் நம்பர் மறந்து விட்டேன், இன்னொரு ஏடிஎம்மில் பணம் இல்லை என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
என்னிடம் ஐசிஐசிஐ அக்கவுண்ட் உண்டு அவனிடமும் ஐசிஐசிஐ அக்கவுண்ட் உண்டு. இருவரிடமும் ஹெ.ச்.டி.எஃப்.சி அக்கவுண்டும் உண்டு. இரண்டிலும் நாய் ஆன்லைன் லாக்இன் வைத்திருக்கிறது. எதில் வேண்டுமானாலும் ஃபண்ட் டிரான்ஸ்பர் செய்யலாம். ஆன்டிராய்டு மொபைல் அப்ளிகேஷனும் ஆக்டிவேட் செய்து வைத்திருக்கிறது. அதில் கூட செய்யலாம். இதுபோக கோவையில் தெருவுக்குத் தெரு ஊருக்கு ஊர் ஐசிஐசிஐ மற்றும் ஹெ.ச்.டி.எஃப்.சி ஏடிஎம்கள் உள்ளன. அதுவும் போக ஐசிஐசிஐ கேஷ் டெபாஸிட் செய்யும் மிஷின்கள் இரண்டு இடத்தில் இருக்கின்றன. அதில் பணத்தை டெபாஸிட் செய்யலாம். எனக்கு ஒரு நிமிடத்தில் கிரெடிட் ஆகி விடும். அல்லது ஐசிஐசிஐ ஏடிஎம்மில் அக்கவுண்ட் டு அக்கவுண்ட் பண்ட் டிரான்ஸ்பர் செய்யலாம். இதே வசதி ஹெ.ச்.டி.எஃப்.சி ஏடிஎம்மிலும் உண்டு.
இவ்வளவு டெக்னாலஜி வளர்ந்த பிறகும் இப்படி காரணம் சொல்லி பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றும் பன்னிகளை என்ன செய்யலாம்?
--------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக