ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

அபத்தமான ஸ்ட்ராடஜி

தமிழன், இந்தியன், சேட்டு, சிறு வியாபாரி, கார்ப்பரேட் வெங்காயம் என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டுப்பார்த்தால் லாஜிக் மிகவும் சிம்பிள் - உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே ஒரு கன்ஸ்யூமர் தனக்கு எது இலாபமோ, விலை குறைவோ அதை நோக்கியே நகர்வான். ஏனென்றால் அவன் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அவனுடைய வியர்வையும், இரத்தமும்.
------------------------------------------------------
ஒரு பதிவில் கீழை அ.கதிர்வேல் கதிர்வேல் சார் எழுதி இருந்தது.
//கேளம்பாக்கம் கடைத்தெருவில் மகள் சாமிக்கு பூ வாங்கி வரச் சொன்னார் ரோட்டோர கடையில் ஒரு பெண்மணி கதம்பம் முழம் 30 ரூபாய் என்று சொன்னார் எனக்கு அது அதிகமாக தெரிந்தது ஒரு பூ மொத்த விற்பனை கடையில் 20 ரூபாய்க்கு உதிரிப்பூ வாங்கிவிட்டு அருகிலேயே ஒரு பெண்மணி மாடிப்படி அருகில் பூ தொடுத்துக் கொண்டிருந்தார் ஒருவேளை அவரிடம் கம்மியாக இருக்குமோ என்று எண்ணி முழம் எவ்வளவு என்றேன் அவரும் 30 ரூபாய் என்று சொன்னதால் இங்கே எல்லா இடத்திலும் இதே விலைதான் என்று நினைத்துவிட்டு ஒரு முழம் வாங்கிட்டு முப்பது ரூபாய் கொடுத்தேன் இன்னும் இருபது ரூபாய் கொடுங்கள் என்றார் எதற்கு என்று கேட்டேன் முழம் 50 ரூபாய் நீங்கள் தான் சரியாக காதில் வாங்கவில்லை என்று பழியை என் மீது போட்டார் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை 30 ரூபாய் பேசிவிட்டு நீங்கள் வெட்டியவுடன் 100 ரூபாய் கூட சொல்வீர்கள் போல என்றேன் சரி சரி 10 ரூபாய் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டார்//
அதே போல எனக்கு நடந்த ஒரு அனுபவம்.
இப்படி மாத்தி சொல்லி வியாபாரம் செய்வது ஒரு புத்திசாலித்தனமான ஸ்ட்ராடஜி என்று அபத்தமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் சில வியாபாரிகள். நீங்கள் 25 ரூபாய்க்குக் கேட்க வாய்ப்பிருக்கிறது என்று நினைத்து "நான் 30 சொல்லலை 50 தான் சொன்னேன்" என்பது. பிறகு "நீ 30 தானம்மா சொன்னே" என்றால், மறுத்து விட்டு "சரி போ, 30 ரூபாய் கொடு" என்று வாங்கிக் கொள்வது. இதில் அவர்களுக்கு நீங்கள் குறைத்துக் கேட்க வாய்ப்பிருந்த அந்த 5 ரூபாய் லாபம் என்று அவர்களே நினைத்துக் கொள்கிறார்கள்.
அச்சு மாறாமல் இதே அனுபவம் எனக்குப் போன வாரம். இதே ஸ்ட்ராடஜியை சைக்கிள் கடை சேட் ஒருத்தன் என்னிடம் முயற்சி செய்தான். கடையில் அவன் 3500 ரூபாய் சொன்ன சைக்கிளை நாங்கள் ஆராய்ந்து பார்த்து விட்டு பேரம் பேசினோம். 3200 கேட்ட போது, "நான் 3800 சொன்னேன்" என்றான். "இல்லப்பா 3500 தான் சொன்னே, ஒரே நேரத்துல எனக்கும் என் பொண்டாட்டிக்கும் காது கேட்காமப் போகாது" என்றதுக்கு, "இல்லை 3800 தான் சொன்னேன். சரி, 3500 க்கு வேணா பண்ணித் தரேன்" என்றான்.
போய்யா என்று சொல்லிவிட்டு எதிரிலேயே வேறு கடைக்குப் போய் கிட்டத்தட்ட அடுத்த மாடல் 2500 க்கு வாங்கிவிட்டோம். அவனுக்குத் தான் நஷ்டம்.
நிறைய கடைகள் இருக்கிற பஜார் போறது நமக்கு நல்லது. இன்னோரு கடையில் ஆல்வின் மாடல் 16 இன்ச் 3800 சொல்லி பேரம் பேசின பிறகு லாஸ்ட் ப்ரைஸ் 3100 க்கு தரேன்னு சொன்னாங்க. ஆனா நம்ம பட்ஜெட் கம்மின்னு வேற கடை வந்துட்டோம்.

சில ஆண்டுகள் முன்பு Scooter type ஒன்னு வாங்கினப்போ பஜார் ரேட் 1100+. ஆனா அப்போ இருந்த பக்கத்து வீட்டுக்காரர் அமேசான்ல செல்லர். எனவே அவரு ஹோல்சேல் வாங்குவார். அவர் எனக்கு 750 க்கு வாங்கித் தந்தார்.

.

அக்கவுண்ட்ல கோடிக்கணக்குல காசு இருந்தா எவ்ளோ கெத்தா சுத்தலாம்?

 நான்லாம் "இனிமே ஷேர் மார்க்கெட்ல சம்பாரிச்சு நாம செலவு பண்ண முடியாது. எதுல போட்டாலும் லாங் டெர்ம் தான் - அது என் ரிட்டையர்மெண்டுக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ தான்" என்று மாறி ரெண்டு வருஷம் ஆச்சு. இனிமே எந்த ஷேர்ல போட்டாலும் 20 வருசம் தான். (அதுவரை மனசு அலைபாயாம இருக்கணும் ஆண்டவா).

வேலைல சேர்ந்த புதுசுல, சின்ன வயசுல ஷேர்ல போட்டதெல்லாம் "கேட்டது, பாத்தது" வச்சித்தான். சுஸ்லான், எஜூகாம்ப், தம்பிப்பய ரிலையன்ஸ், சத்யம்னு நெறைய்ய பல்பு வாங்கியிருக்கேன். இன்ஃபோஸிஸ், அண்ணங்காரன் ரிலையன்ஸ், L&T (மனைவியார் பர்ச்சேஸ்) மாதிரி நல்ல ஷேர்ஸ் கூட என்ட்ரி டைம், எக்ஸிட் டைம் தெரியாம எப்பயாவது நுழைஞ்சு, எப்பயாவது வெளிய வர்றதுதான். ஆனா எல்லாமே 5 ஷேர், 10 ஷேர், 20 ஷேர் ரேஞ்சுன்றதால அடி கம்மியா இருந்தது. பின்னாளில் யெஸ் பேங்க் (மனைவியோட பர்ச்சேஸ்) ல கூட எப்படியோ ஆவரேஜ் பண்ணி 3000 ரூவா நட்டத்தோட தப்பிச்சேன்.
ஆனா 2008 மார்க்கெட் க்ராஷ் ல என் இன்வெஸ்ட்மெண்ட் 40% க்கு மேல நக்கிட்டுப்போச்சு. ஆனா தங்கை கல்யாணத்துக்காக அப்போ என் பணத்தை எடுத்தே ஆக வேண்டிய நிலைமை. நட்டத்துல எடுத்தேன். அதுக்கப்புறம் அவளோட கல்யாணக் கடன் கட்றது, என்னோட கல்யாணக் கடன் கட்றது, டூ வீலர் லோன், ஜூவல் அடமான லோன்கள் கட்றது, அதுகளுக்கு வட்டி கட்றது, அப்டி இப்டின்னு வாழ்க்கை ஓடிடுச்சு. ஒன்றரை வருடம் வேலையில்லாம ஃப்ரீலான்சரா "கிடைச்சதை செஞ்சு, கொடுத்ததை வாங்கி" வாழ்க்கை நடத்தினேன். கையில இருந்த FD லாம் காலி.
தங்கை கல்யாணத்தப்போ "பர்சனல் லோன்"னு ஒன்னு இருக்கு யாரும் எனக்குச் சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்கும். (இந்த குரூப் ஆரம்பிச்சது கூட அது போல எண்ணத்தில் தான். பல பேருக்கு "ஓ, இப்படி ஒன்னு இருக்கா" ன்னு அவங்களுக்குத் தெரியாததை சொல்லிக்குடுக்கலாமே. ஒரு கூட்டு முயற்சி மூலம்).
அதுக்கப்புறம் "இந்த வம்பே வேணாம்டா சாமி" ன்னு மார்க்கெட்டுக்கே பெரிய்ய கேப் விட்டேன். கடந்த 2006 ல இருந்து இருக்கேன். ஆனா 15 வருஷத்துல ஷேர்ல சம்பாரிச்சதே இல்லை. 2008 க்கு முன், ஆரம்பத்துல கூட வெறும் இன்ட்ரா டே செஞ்சு 100, 200 ன்னு தான் பார்த்தேன். பிறகு தான் இந்த 2008 க்ராஷூம், பெரிய்ய கேப்பும். மனைவியும் "அவங்க சொன்னாங்க, டிப்ஸ் வந்துச்சு"ன்னு சில ஷேர்ஸ் வச்சிருந்தாங்க. அதிலும் பெரிய லாபம் இல்லை. ஆவரேஜ் பார்த்தா ஆறேழு வருஷத்துல போட்ட காசு மட்டும் தான் திரும்ப வந்துச்சு.
நான் மார்க்கெட்ல இலாபம் பார்த்ததுன்னா போன வருஷம் தான். "வாங்கி, வச்சு, வித்து"ன்னு சுமார் 10% எடுத்தேன். மார்க்கெட் பத்தி கொஞ்சம் படிச்சேன். டீட்டெயில்ட் டெக்னிகல் அனாலிஸிஸ் லாம் எனக்குப் புரியாது. நான் ஸ்டேட் போர்டு - தமிழ் மீடியம் வேற. எனவே எனக்குப் புரியும் அளவுக்குக் "கொஞ்சம்" படிச்சேன்.
இப்போ ஒரே முடிவுதான். மாசாமாசம் "கொஞ்சமா" என்னால முடிஞ்சதை மட்டும் ஷேர்ல போடுறது. அதுவும் ஏற்கனவே தன்னை ப்ரூவ் செஞ்ச மார்க்கெட் லீடர்ஸ்ல மட்டும். அப்புறம், ரிட்டையர் மெண்ட் வரை வெயிட் பண்றது. (தேவைப்பட்டா பசங்க வளர்ந்ததும், அவங்க தேவைக்கு அவங்களுக்கு கொஞ்சம் பர்சன்டேஜ் எடுத்துக் கொடுக்கலாம்).
ஒரு 60 - 65 வயசுல அக்கவுண்ட்ல கோடிக்கணக்குல காசு இருந்தா எவ்ளோ கெத்தா சுத்தலாம்?

புதைப்பதா? எரிப்பதா? எது சரி?

 ஒரு அன்பர் குரூப் ஒன்றில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதன் சாராம்சம் - "குடும்பத்தில் இறந்தவர்களை இஸ்லாத்தில், நீர் உற்றி கழுவி சுத்தம் செய்து, துணியில் சுற்றி 4 அடிக் குழியில் புதைப்பார்கள். இதுபோல் கிறிஸ்த்துவர்கள் இறந்த சடலத்தை கண்ணியத்தோடு சர்ச் பாதர் தலைமையில் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்கிறார்கள். ஆனால் இந்துக்கள் ஒரு நபர் இறப்பின் அவரை குடும்ப நபரே எரியூட்டுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை" என்று எழுதியிருந்தார்.

அவர் அந்த இரண்டில் ஒரு மதத்தைச் சேர்ந்தவர். அவர் எவ்வளவுதான் ஸாஃப்டாக எழுதியிருந்தாலும், "புதைப்பது தான் சரி" என்பது போல அவரது போஸ்ட்டின் சப்டெக்ஸ்ட் சொல்கிறது. அது சப்கான்ஷியஸ்லி அவர் வளர்ந்த விதம், அவரது மனதுக்குள் புதைக்கப்பட்ட எண்ணம். எப்படி "செளத் இந்தியான்னா பெண்கள் சேலை தான் கட்டுவாங்க" ன்னு நார்த் இன்டியன்ஸ் புரிஞ்சு வச்சிருக்கிற மாதிரி. இந்துக்களுக்கு இறந்தவர் உடலை எரிப்பதில் எந்தக் குற்ற உணர்வும் வருவதில்லை. மனவலி, அழுகை எல்லாம் "இறந்துட்டாரே" என்பதில் தான்.
எனக்குத் தெரிந்த ஒரு முஸ்லிம் நண்பரை புதைத்த இடத்தை க்ராஸ் செய்யும் போதெல்லாம் அந்த மனிதர் இங்கே தான் அடியில் இருக்கிறார் என்பது எனக்கு ஒரு மாதிரி சிலிர்ப்பையும், நடுக்கத்தையும் தான் தருகிறது. அதுவே என் தந்தையை எரித்த இடத்தை கிராஸ் செய்யும் போது அந்தப் பயம் வருவதில்லை. இது நான் வளர்ந்த விதம். அதுக்காக "எரிப்பது தான் சரி" என்று கிறிஸ்தவர்களிடமும், முஸ்லிம்களிடமும் நான் போய்ச் சொன்னால் என்னை அடிக்க வருவார்கள்.
அமெரிக்காவில் ஒரு நிறுவனம் இறந்தவர்களின் உடலை ஃபார்மலின் போன்றவற்றில் ஊற வைத்து ஒருவித கண்ணாடிக் கெமிக்கல் பெட்டிக்குள் நீங்கள் பார்ப்பது போல பேக்கிங் செய்து கொடுப்பார்கள். அப்படி வாங்கிச் சென்றவர்கள் சில மாதங்களுக்குப் பிறகு வீட்டில் அதை வைத்துக்கொள்ளப் பிடிக்காமல் புதைக்கக் (அல்லது அவர்கள் வழக்கப்படி டிஸ்போஸ் செய்யக்) கொடுத்து விட்டார்களாம். ஒரு பிரபல எழுத்தாளரின் பாடியும் இப்படி ஒரு மியூசியத்தில் உள்ளதாம். முதலில் சில மாதங்கள் தினமும் வந்து பார்த்த அவர் மனைவி "அவர் போயிட்டார், இது வெறும் பாடி" என்று மனம் உணர்ந்த பிறகு அங்கே செல்வதை நிறுத்தி விட்டாராம்.
இன்னும் சில ஆண்டுகளில் புதைப்பதற்கு இடம் இல்லாமல் எல்லா மதங்களும் "எரிப்பதை"த் தான் வலியுறுத்தும் என்று ஒரு கட்டுரையும் படித்தேன்.
செளத் ஆப்ரிக்காவில் சில பழங்குடியினர், யாரேனும் இறந்தால் அவர்கள் உடலை பூஜை, மரியாதையெல்லாம் செய்து காட்டுக்குள் சென்று போட்டு விட்டு வந்து விடுவார்களாம். காட்டு நாய், நரிகள், கழுதைப்புலிகள் அந்த உடலைக்கிழித்து உண்ணுமாம். அல்லது அந்த உடல் அழுகி, புழு வைத்து, செடி முளைத்து, மண்ணோடு மண்ணாக டீகம்போஸ் ஆகி விடுமாம். அதற்காக அவர்கள் வருத்தப்படுவதில்லை. அறிவியலில் கூட "life cycle of a man" படி, பூமியில் இருந்து கிடைத்தவற்றைத் தின்று வளர்ந்த உடம்பு பூமியுடன் டீகம்போஸ் ஆகிக் கலப்பது தான் சரி. அதன் படி அந்தப் பழங்குடியினர் செய்வது சரி தானே.
அதற்காக, அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தர் இதே போல வந்து போஸ்ட்டில் சொன்னால், நாம நம்ம சொந்தக்காரரின் உடலை கழுதைப் புலி கிழித்துத் தின்பதை ஒத்துக் கொள்வோமா?
அவரவர்க்கு அவரவர் வழக்கம்.

வியாழன், 9 செப்டம்பர், 2021

ஆன்லைன் வகுப்பில் இப்படியெல்லாமா நடக்குது?

#Activity_Based_learning  

#Real_Life_Examples 

3rd Std EVS - Online Classroom Observation செய்து கொண்டிருந்தேன். 



டீச்சர் போனை எடுத்துக் கொண்டு நேராக தோட்டத்திற்குச் சென்றார். ஒரு இலையைப் பறித்து அதைக் கேமராவில் காட்டி ஒவ்வொரு பாகமாகத் தொட்டுக் காட்டி "இது என்ன?" என்று கேட்கிறார். பிள்ளைகள் ஒவ்வொன்றாக பதில் சொல்கிறார்கள். அதிலிருந்து அப்படியே Photosynthesis - ஒளிச்சேர்க்கை டாபிக்கைத் தொட்டு நடத்தத் துவங்குகிறார். ஆர்வமாக கவனிக்கிறார்கள் குழந்தைகள் 

(ஒரு பையனின் தந்தை பின்னால் துண்டுடன் க்ராஸ் செய்கிறார். கேமரா ஆஃப் பண்ணு என்று சொல்லியிருப்பார் போல. ஓக்கே என்று தலையாட்டியபடி கேமராவை ஆஃப் செய்கிறான் அவன்)

Photosynthesis க்காக ஒரு வீடியோ போட்டுக்காண்பித்தார். அதைப்பார்த்து முடித்ததும் ஒரு பயல் நேயர் விருப்பம் போல "வேற வீடியோ போடுங்க மிஸ்" என்கிறான். 

Sunlight, Chrolophyl, Carbon Dioxide, Water என்று சொல்லும் போது குழந்தைகள் திரும்பச் சொல்கிறார்கள். ஒரு குழந்தை Chrolophyl ஐ "கோலோபில்" என்றது. அழகாக இருந்தது. 

இதுபோலக் குழந்தைகளுடன் கிடைக்கும் நேரத்திற்காகவே இந்தத்துறையை விட்டு இன்னும் விலகாமல் இருக்கிறேன். 

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

ஒண்ணரை வருசம் சுலோவாவே

கும்பகோணம் திருமஞ்சன வீதி நடுநிலைப்பள்ளின்னு ஒரு இஸ்கோலு.. (ஆரம்பப் பள்ளியோ?)

அங்கதான் எங்கம்மாவும் சின்ன மாம்ஸூம் படிச்சாங்களாம்... சரீரீ.... படிப்பை ஆரம்பிச்சாகளாம்.. எப்போவா? அது இருக்கும் ஒரு 56 - 58 வருசம்...
அங்கன பெரிய வாத்தியார்னு ஒருத்தர் இருந்தாரு. அவுங்களுக்கும் அவர்தான் பெரிய வாத்தியாரு. எனக்கும் தான். அவரு தெருவுல நடந்து வந்தா சைக்கிள் ஓட்டுறவங்க கே.எஸ்.ரவிக்குமார் ஆக்சன் சொன்னவுடனே ரோட்டோரமா நின்னு வணக்கம் வச்சுட்டு வாத்தியார் போனப்பறம் தான் சைக்கிள எடுப்பாங்களாம்...
அந்தப் பெருமையை சொல்லிப்போட்டு என்னையையும் கொண்டு போயி அந்த ஸ்கூலுலயே, ஸாரி பள்ளிக் கோடத்துலயே சேத்தாக.. ஸாரி... சேக்க முயற்சி பண்ணுனாக... 5 வயசுல..
(நடுவால ரெண்டு வருசம் முன்னால கான்வென்டுல எல்லுகேஜி சேக்குறேன்னு எங்க நைனா அடிச்ச கூத்து அங்கன பீஸ் கட்டாததால ஈ-ன்னு பல்ல இளிச்சு நாந்திரும்பி வீட்டுக்கே வந்த கதை இதுல சேராது)
அவரு தான் அந்தக் காலத்து ஆளாச்சே.. அந்தக் காலம் னா கொஞ்ச நஞ்சமில்ல. 58 வருசம் முன்னாலயே "அந்தக்காலம்"னா என்னா வயசிருக்கும் அவருக்கு. அவரு க்ரைடீரியா என்னன்னா "டேய், பயலே வலது கைய தூக்கு. அதை உன் தலை மேல சுத்தி வச்சு இடது காதை தொடு" தொட்டேன். ஸாரி, தொட முயற்சி பண்ணேன். மிடில... நாம தான் முத பெஞ்சிலயே எப்பயும் உக்கார்ற அளவு பொடுசாச்சே. குட்டிக் கை. எப்புடி எட்டும்?
அவ்ளோதான். மேகி சூடாகி இறக்கி வைக்கிற நேரம் கூட இல்ல... இன்டர்வியூ ஓவர். "பய ரொம்ப சிறுசா இருக்கான். போயிட்டு அடுத்த வருசம் வாடா நாராயணா". பேக் டு தி பெவிலியன். நம்ம கேரியர்-ல ஒரு ஒண்ணரை வருசம் போச்சு. அரோகரா... மத்தவன் லாம் 5 வயசுல ஒண்ணாப்பு படிச்சா, நான் மட்டும் ஆறரையில சேந்தேன்.
அப்போ ஆரம்பிச்சது. வாழ்க்க இன்னிய வரை ஒரு ஒண்ணரை வருசம் சுலோவாவே போவுது. சரி உடு. ஒரு வருசம் முன்னாடியே படிச்சிருந்தா மட்டும்? அடுத்த மாசம் நம்மூருக்கு வாராறே ஆர்னால்டு.. அவருக்குப் போட்டியா கலிபோர்னியாவுக்கு கவர்னராவா ஆயிருக்கப் போறேன்?
லூஸ்ல விட்டுட்டு வாத்திக்கு ஒரு வணக்கம் வையி... பெரிய வாத்தியார் வாழ்க... ஸாரி... அவரு போயிட்டாரு. அவரு புகழ் வாழ்க...
ஹேப்பி (பிலேட்டட்) டீச்சர்ஸ் டே
--------------------
7 செப்டம்பர் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.