ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

புதைப்பதா? எரிப்பதா? எது சரி?

 ஒரு அன்பர் குரூப் ஒன்றில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதன் சாராம்சம் - "குடும்பத்தில் இறந்தவர்களை இஸ்லாத்தில், நீர் உற்றி கழுவி சுத்தம் செய்து, துணியில் சுற்றி 4 அடிக் குழியில் புதைப்பார்கள். இதுபோல் கிறிஸ்த்துவர்கள் இறந்த சடலத்தை கண்ணியத்தோடு சர்ச் பாதர் தலைமையில் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்கிறார்கள். ஆனால் இந்துக்கள் ஒரு நபர் இறப்பின் அவரை குடும்ப நபரே எரியூட்டுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை" என்று எழுதியிருந்தார்.

அவர் அந்த இரண்டில் ஒரு மதத்தைச் சேர்ந்தவர். அவர் எவ்வளவுதான் ஸாஃப்டாக எழுதியிருந்தாலும், "புதைப்பது தான் சரி" என்பது போல அவரது போஸ்ட்டின் சப்டெக்ஸ்ட் சொல்கிறது. அது சப்கான்ஷியஸ்லி அவர் வளர்ந்த விதம், அவரது மனதுக்குள் புதைக்கப்பட்ட எண்ணம். எப்படி "செளத் இந்தியான்னா பெண்கள் சேலை தான் கட்டுவாங்க" ன்னு நார்த் இன்டியன்ஸ் புரிஞ்சு வச்சிருக்கிற மாதிரி. இந்துக்களுக்கு இறந்தவர் உடலை எரிப்பதில் எந்தக் குற்ற உணர்வும் வருவதில்லை. மனவலி, அழுகை எல்லாம் "இறந்துட்டாரே" என்பதில் தான்.
எனக்குத் தெரிந்த ஒரு முஸ்லிம் நண்பரை புதைத்த இடத்தை க்ராஸ் செய்யும் போதெல்லாம் அந்த மனிதர் இங்கே தான் அடியில் இருக்கிறார் என்பது எனக்கு ஒரு மாதிரி சிலிர்ப்பையும், நடுக்கத்தையும் தான் தருகிறது. அதுவே என் தந்தையை எரித்த இடத்தை கிராஸ் செய்யும் போது அந்தப் பயம் வருவதில்லை. இது நான் வளர்ந்த விதம். அதுக்காக "எரிப்பது தான் சரி" என்று கிறிஸ்தவர்களிடமும், முஸ்லிம்களிடமும் நான் போய்ச் சொன்னால் என்னை அடிக்க வருவார்கள்.
அமெரிக்காவில் ஒரு நிறுவனம் இறந்தவர்களின் உடலை ஃபார்மலின் போன்றவற்றில் ஊற வைத்து ஒருவித கண்ணாடிக் கெமிக்கல் பெட்டிக்குள் நீங்கள் பார்ப்பது போல பேக்கிங் செய்து கொடுப்பார்கள். அப்படி வாங்கிச் சென்றவர்கள் சில மாதங்களுக்குப் பிறகு வீட்டில் அதை வைத்துக்கொள்ளப் பிடிக்காமல் புதைக்கக் (அல்லது அவர்கள் வழக்கப்படி டிஸ்போஸ் செய்யக்) கொடுத்து விட்டார்களாம். ஒரு பிரபல எழுத்தாளரின் பாடியும் இப்படி ஒரு மியூசியத்தில் உள்ளதாம். முதலில் சில மாதங்கள் தினமும் வந்து பார்த்த அவர் மனைவி "அவர் போயிட்டார், இது வெறும் பாடி" என்று மனம் உணர்ந்த பிறகு அங்கே செல்வதை நிறுத்தி விட்டாராம்.
இன்னும் சில ஆண்டுகளில் புதைப்பதற்கு இடம் இல்லாமல் எல்லா மதங்களும் "எரிப்பதை"த் தான் வலியுறுத்தும் என்று ஒரு கட்டுரையும் படித்தேன்.
செளத் ஆப்ரிக்காவில் சில பழங்குடியினர், யாரேனும் இறந்தால் அவர்கள் உடலை பூஜை, மரியாதையெல்லாம் செய்து காட்டுக்குள் சென்று போட்டு விட்டு வந்து விடுவார்களாம். காட்டு நாய், நரிகள், கழுதைப்புலிகள் அந்த உடலைக்கிழித்து உண்ணுமாம். அல்லது அந்த உடல் அழுகி, புழு வைத்து, செடி முளைத்து, மண்ணோடு மண்ணாக டீகம்போஸ் ஆகி விடுமாம். அதற்காக அவர்கள் வருத்தப்படுவதில்லை. அறிவியலில் கூட "life cycle of a man" படி, பூமியில் இருந்து கிடைத்தவற்றைத் தின்று வளர்ந்த உடம்பு பூமியுடன் டீகம்போஸ் ஆகிக் கலப்பது தான் சரி. அதன் படி அந்தப் பழங்குடியினர் செய்வது சரி தானே.
அதற்காக, அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தர் இதே போல வந்து போஸ்ட்டில் சொன்னால், நாம நம்ம சொந்தக்காரரின் உடலை கழுதைப் புலி கிழித்துத் தின்பதை ஒத்துக் கொள்வோமா?
அவரவர்க்கு அவரவர் வழக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக