திங்கள், 26 ஜூலை, 2021

வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டணம்

 26 ஜூலை 2020 அன்று ஃபேஸ்புக் கில் எழுதியது. 


வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டணம் கட்டணும்னு ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருப்பதாகச் செய்தி. என்னைக் கேட்டால் அது வரவேற்கத்தக்கது. காரணம் 


1, ஃப்ரீயாக கிடைப்பதால்தான் எல்லா லோலாயித்தனங்களும் நடக்குது. 

2, Nothing comes for free என்பதை மக்கள் உணர வேண்டும். 

2 a, உருவாக்கியவனுக்கு அவன் உழைப்பின் பலன் தரப்பட வேண்டும். 

2 b, நாம் இலவசமாக எதிர்பார்த்தால் அவன் நமக்கே தெரியாமல் நம்மிடமிருந்து சம்பாதிக்கத்தான் பார்ப்பான். 

3, வதந்தி பரவும் வேகம் மட்டுப்படும். 

4, இதை வாட்ஸ் அப்புக்கு மட்டும் செய்யாமல், ஃபேஸ்புக், ஷேர் சேட், இதர சோஷியல் நெட்வொர்க்குகளுக்கும் விரிவு படுத்த வேண்டும். 

5, கட்டணத்தை அமல்படுத்துகிறீர்களோ இல்லையோ, கட்டுப்பாடுகளை அமல்படுத்துங்கள். 


இந்திய தகவல்தொழில்நுட்பத்துறை இது போன்ற விஷயங்களில் சில ஸ்டிராங்கான நிலைப்பாடுகளை எடுத்தே ஆக வேண்டும். மேலும் அவ்வப்போது அந்நிலைப்பாடுகளை தேவைக்கேற்ப புதுப்பிக்க வேண்டும்.

அட்லீ படத்துல லாஜிக் இல்லையாம்.

26 ஜூலை 2020 அன்று ஃபேஸ்புக் கில் எழுதியது.

அட்லீ படத்துல லாஜிக் இல்லையாம். அந்தத்தாத்தா மேட்டர்ல. மீம் ல சொல்றாங்க. நான் சொல்றேன் லாஜிக்லாம் இல்லாம இல்ல.


அந்தத் தாத்தாவோட பொண்ணை மினிஸ்டர் வானமாமலை பையன் கொன்னுட்டான். அதை விஜய்குமார் ஐ.பி.எஸ் கிட்ட சொல்லி அவர் அந்தப் பையனை கொன்னுடுறார். அதுக்கு அவர் விஜய்குமார் ஃபேமிலியைக் கொன்னது உங்களுக்கே தெரியும். கடைசியில விஜய்குமார் வானமாமலையையும் கொன்னுடுறார். ஆனா சீக்ரெட்டா வானமாமலைக்கு இன்னோரு பையன் இருக்கான் அப்பாவோட சாவுக்குப் பழிவாங்க வர்ற அவனை அந்தத் தாத்தாவே கொன்னுடுறார் (இதெல்லாம் தெறி ஸ்கொயர்ல வருது). ஏன்னா அவருக்கு உதவி பண்ண வேண்டிய விஜய்குமார், தன் சுப்பீரியர் பிரபு உத்தரவுப் படி கோஸ்ட் ஆபீஸரா லடாக் போயிடுறார்.

அதனால அந்தத் தாத்தாவை ஜெயில்ல போட்டுடுறாங்க. அங்க தான் பக்கத்து செல்லுல சிவாஜி இருக்கார். இதைத்தான் "ராஜா ராணி" ஃப்ளாஷ்பேக்ல ஆர்யாவும் சந்தானமும் பாக்குறாங்க. சிவாஜி ரிலீஸ் ஆகி நிறைய ஸ்கூல், காலேஜ் தொறந்ததால, அதுல தன் பையன் இலவசமா படிச்ச நன்றிக் கடனுக்காக (சிவாஜியை லத்தியால அடிக்க மாட்டேன்னு சொல்வாரே அந்த போலீஸ் கான்ஸ்டபிள் அவரு, ப்ரமோஷன்ல ஜெயிலர் ஆகிடுறாரு). சிவாஜி கூட ஜெயில்ல இருந்த எல்லாரையும் ரிலீஸ் பண்றாரு. அதுல அந்தத் தாத்தாவும் ரிலீஸ் ஆயிடுறாரு.
ரிலீஸ் ஆனப்புறம் சிவாஜி ஆபீஸ் ரூம் போட்டு ஹவாலா மணியை இந்தியாவுக்குக் கொணாந்து நிறைய பேரை கன்ட்ரோல் பண்றார், கிங் மேக்கர் ஆதிசேஷனை கொன்னது உங்களுக்குத் தெரியும். மினிஸ்டர் குழந்தை வேலை கத்தியால குத்துனதுல ஆறு மாசம் கழிச்சு செப்டிக் ஆகி அவர் செத்துடறார். இப்போ சிவாஜி தான் கிங் மேக்கர், கிங்கு எல்லாமே. சிவாஜி அமைச்சர் ஆனதும் நெறைய பேப்பர்ல சரக் சுருக்னு ரெண்டு கையால கையெழுத்துப் போடுவார். அதுக்கு வசதியா இடது கை பிரிண்ட் அவுட்டை ரிவர்ஸ் ல எடுத்ததால அதைப் படிக்காமயே கையெழுத்துப் போட்டு 70 வயசானவங்களுக்கும் அரசு வேலை உண்டுன்னு உத்தரவு ஆகிடுது.
அந்த உத்தரவு மூலமா தான் நம்ம தாத்தா ரெஜிஸ்த்ரார் ஆபீஸ் ல கவர்மண்டு வேலைக்கு சேருறார். அங்கதான் ரெஜினா - சூர்யா (ஜெய்) வை கல்யாணம் பண்ணிக்க வேண்டி வர்றாங்க. தாத்தாவும் ஒரு பொண்ணைப் பெத்து பிறகு இழந்தவர்ங்கறதால ரெஜினாவுக்கு அட்வைஸ் பண்ணி வீட்டுக்குப் போம்மா ன்னு சொல்றார். இப்போ புரியுதா லாஜிக்?
பின் குறிப்பு - தெறி, ராஜாராணி டைம்லைன் மேட்ச் ஆகலையேன்னு கேக்காதீங்க. ஆக்சுவலி ராஜா ராணியோட ப்ரீக்வல் மெளன ராகம்லயே ரெஜினா - திவ்யான்ற பேருல ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் போய் வெயிட் பண்றாங்க. ஒரு வேள கன்பீசன் இருந்தா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. முருகதாஸ் கதை எழுதி, மணி ரட்னம் ப்ரொடக்ஷன்ஸ்ல அட்லீ எடுக்கப்போற ராஜா ராணி சீக்வெல் 2 (அதாவது மெளன ராகம் 3) வரும்போது இதையெல்லாம் உடைக்கிறோம்.
மணி எப்டி ஏமாறுவாருன்னு கேக்குறீங்களா? அட என்னங்க நீங்க? அவரோட அக்னி நட்சத்திரத்தையே - அவரு ப்ரொடக்ஷன்லயே வஸந்த் - நேருக்கு நேர்னு எடுக்கல? (இங்க தான் நாம சூர்யா-வை உள்ள கொண்டு வர்றோம். வரும்போது "ப்ராஜக்ட் 24" வாட்ச்சை எடுத்துட்டு வாய்யா மெக்கானிக்னு சொல்லி, அதை வச்சு மின்னாடி பின்னாடி டிராவல் பண்ணி எல்லாப் படத்தோட டைம்லைனையெல்லாம் அஜ்ஜஸ் பண்றோம்). எப்பூடி?
- எஸ்கா
--------------------------------------------------------------
பிற்சேர்க்கை - Viswa Nathan போன்ற இன்டலக்சுவல்களுக்காக.
ரட்னம் - குறியீடு.
எந்த ஒரு படைப்பையும் மூன்று விதமாக அணுகலாம்.
வழக்கமான ஒரு பார்வை (பெரும்பாலான ஜெகுஜனங்களின் பார்வையும் இதுவே).
ரசிகனாக ஒரு பார்வை (அந்தப் படைப்பைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு, அவரது முந்தைய படைப்புகள் / படைப்பாளிகளுடன் படைப்பைத் தொடர்பு படுத்திக் கொண்டாடுவது - மெளன ராகம், சத்ரியன் இதுபோல)
ஒரு கன்னோசர் ஆக (Connoisseur) படைப்பை அணுகுவது.
நம்மில் எல்லோருமே வழக்கமான ஒரு பார்வையாளனாகவே நமது பயணத்தைத் துவக்குகிறோம். சிலர் அங்கேயே தேங்கி விடுகிறார்கள். கே டீவியில் படம் பார்ப்பார்கள். தினமும் குரூப்பில் ஜெயா டி.வி படத்தின் லிஸ்ட் கேட்பார்கள். அதில் தவறில்லை.
தொடர்ந்த ஆர்வத்தின் காரணமாக சிலர் அட்லீ ரசிகனாக மாறுவதுண்டு.
இங்கேதான் ஒரு படைப்பில் இருக்கும் Reading between the lines, sub text, metaphor, Political Context, Hidden agenda, vijay's inner expectations என்று அனைத்தையும் உணர ஆரம்பிக்கிறோம். ஆனால், இந்த நிலையை அடைய சரியான புரிதலும், ஆழமான தேடலும் தேவை.
இதைப் புரிந்த தனது ரசிகனுடன் படைப்பாளி ரகசியமாக ஒரு விதமான ஆட்டம் ஆடுவார்.
இதெல்லாம் ஹருகி முரகாமி, ஜப்பானிய கைஜூ படங்கள், ஹாலிவுட் ட்வென்டி டாரண்டினோ, மைக்ரோவேவ் ஓவன் வில்சன் படங்களைப் பார்த்தவர்களுக்குத் தான் புரியும்.
ஏதாவது புரிஞ்சிச்சின்னா சொல்லுங்க. நானும் புரிஞ்சிக்கிறேன்.
.