வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

காதல் கவிதைகள் - தேஜூ உஜ்ஜைன்

யூத்ஃபுல் விகடனில் 2009 நவம்பர் மாதம் வெளியான கவிதைகள் இவை.

--------------------------


எல்லோருக்கும் புத்தாண்டு
ஜனவரி 1ல் வருகிறது
உனக்கு மட்டும் ஏன்
பிப்ரவரி 14ல்
என்று கேட்கிறார்கள்

சொல்லிவிடவா அவர்களிடம்?
உன்னுடனான என் காதல்
பூத்த தினம்தான்
என் புத்தாண்டு என்று?

--------------------------



கல்யாண வீட்டின்
வாசலிலேயே
தயங்கி அமர்ந்துவிட்ட
என்னை
உள்ளே அழைக்கும்
அம்மாவிடம்
எப்படிச்சொல்வது?

உன்னை
நினைவுபடுத்திவிட்ட
ரோஜாக்களை
விட்டுவிட்டு
எப்படி வர
என்று...

--------------------------


என்னை வெறுப்பேற்ற
குழந்தையின் கன்னத்தில்
முத்தங்கள்
கொடுத்தாய் நீ...

ஆனால்
உனக்குத் தெரியாமல்
தன்
கன்னங்களை என்னிடம்
கொடுத்துப்போனது
குழந்தை...

--------------------------


உன்னுடனான
என் முதல் சந்திப்பில்
நான் சேர்த்து வைத்திருக்கும்
சின்னஞ்சிறு
வால் நட்சத்திரங்களை
உனக்குப் பிரத்யேகமாயப்
பரிசளிப்பேன்
ஒவ்வொரு முறையும்
எனைப்பார்க்க வருகையில்
எடுத்து வந்து
என் கனவில் நீ
விட்டுச்சென்றவை அவை.

--------------------------


விளையாடும் போது
அவ்வப்போது
திரும்பி எனைப்பாரேன்
அந்த கணப்பொழுதில்
எனைச் சுற்றியோர்
ஒளிவட்டம் தோன்றுவதாய்ப்
பிரமையேற்படுகிறது எனக்கு

----------------------------------------------------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கவிதை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------

1 கருத்து:

  1. கவிதைகள் நல்லா இருக்கு . இன்னும் மெருகேற்றுங்கள் . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன் .

    பதிலளிநீக்கு