வியாழன், 17 செப்டம்பர், 2009

வாலிப, வயோதிக (எஸ்.எம்.எஸ் அனுப்பும்) அன்பர்களே!

மொபைல் போனுன்னு ஒண்ணு வந்தாலும் வந்துது... எவன் கைல பாத்தாலும் போனு. அதுலயும் கால்ஸ விட வர வர இந்த எஸ்.எம்.எஸ்ஸூங்கிற இம்சை ரொம்ப ரொம்ப அதிகமாகிப்போச்சு. எதுக்கும் போன் பண்ணிப்பேசற வேலையே இல்ல. எல்லாமே மெஸேஜ் தான். விடியற்காலைல ஆரம்பிச்சு நைட்டு தூங்குற வரைக்கும் (அதையும் தாண்டி நடுராத்திரிவரைக்கும்) சளைக்காம மெஸேஜ் அனுப்பித்தள்ளிகிட்டு இருக்கானுங்க.

அதுவும் நார்மல் மெஸேஜ விட ஃபார்வேர்டு மெஸேஜூதான் அதிகம். எது வந்தாலும் ஃபார்வேர்ட் பண்றதுன்னு ஒரு கொள்கைப்பிடிப்போட செயல்படுறாங்க. இதுல வயசு வித்தியாசம் கிடையாது. பத்து வயசுப்பய புள்ளைல இருந்து அறுபது வயசு ரிட்டையர்டு ஜெண்டில்மேன் வரைக்கும் பாசக்கார பயகளா தான் இருக்காங்க. மெஸேஜக்குன்னு கார்டு வாங்கிப்போட்டுட வேண்டியது. சிறீலங்கா குண்டு வீச்சு மாதிரி படபடபடன்னு போட்டுத்தள்ளிகிட்டே இருக்க வேண்டியது...

ஆனா அந்தக் கருமத்தையாவது ஒழுங்கா செய்யுறாங்களான்னா, அதான் கிடையாது. நைட்ல அனுப்ப வேண்டியத காலைல அனுப்பறது, காலைல அனுப்பறத மத்யானம் அனுப்பறது. பசங்களுக்கு அனுப்பவேண்டியத பொண்ணுங்களுக்கு அனுப்பறது. பொண்ணுங்களுக்கு அனுப்பவேண்டியத ஆன்ட்டிங்களுக்கு அனுப்பறது. ஏன்யா இப்படி பண்றீங்க.. குழப்பத்திலகங்களா? அனுப்புற மெஸேஜூக்கும் ரிஸீவ் பண்ற ஆளுக்கும் சம்பந்தமே இருக்கறதில்ல.

இந்து பண்டிகைக்கு மத்த மதத்துக்காரங்களுக்கு வாழ்த்து சொல்றது. மத்த பண்டிகைக்கு இவுங்களுக்கு பிக்சர் மெஸேஜ் அனுப்பறதுன்னு சாவடிக்கிறாங்க. இப்போ வர்ற மொபைல்லல்லாம் பல்க் மெஸேஜ் (send to all) வசதி வேறயா. ஒரு 50, 100 பேர செலக்ட் பண்ணி பல்க்கா அடிச்சு விட்டுற வேண்டியது. அதுங்க தபதபன்னு வந்து நம்ம மொபைல்ல எறங்கிடுது.

தீபாவளி, பொங்கல், பக்ரீத்து, மொகரம், கிறிஸ்துமஸ்ஸூ, குட் ஃப்ரைடே, வேலன்டைன்ஸ் டே, மதர்ஸ் டே, உமன்ஸ் டே, நியூ இயர், ஸ்டிரைக்கு, எலக்ஷ்னு எதையும் உட்றதில்லை. எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள் சொல்லிடணும்னு பாரபட்சம் பாக்காம மெஸேஜா அனுப்பறது. கிரிக்கெட் ஸ்கோரு, அப்டேட் நியூஸூ, டுடே ஸ்பெஷல்னு எதையெல்லாமோ அனுப்பறது... என்னமோ ஃப்ரீ நியூஸ் ஏஜன்ஸி நடத்துறதா நெனப்பு.

இப்பிடித்தான் ஒரு ரெண்டு வாரம் முன்னாடி மதர்ஸ் டே அன்னிக்கும். காலைல இருந்து ஒரே மெஸேஜா வந்துகிட்டிருக்கு. அம்மாவ பாத்துக்கோ, அம்மாக்கு மரியாத குடு, அம்மாதான் தெய்வம், அம்மாதான் எல்லாம், அன்புன்னா அம்மா, மத்ததெல்லாம் சும்மான்னு ஒரே டார்ச்சர். ஆளாளுக்கு அட்வைஸ் மெஸேஜ். நாம ஒரு வேளை நம்ம அம்மாவ ரொம்ப கொடும கிடுமப்படுத்துறோமோன்னு யோசிக்க வச்சுட்டாய்ங்க. இல்ல எலக்ஷ்ன் டைமாச்சே, நம்மள ஏதும் நமக்கே தெரியாம ஏ.டி.எம்.கே-ல அட்மிஷன் போட்டு விட்டுட்டாங்களோன்னு வேற எனக்கு ஒரு டவுட்டு.

(ஒரு நிமிஷம் சீரியஸா பேசுவோமா? மேட்டர் என்னன்னா, எங்க அம்மா இறந்து போய் ஒன்றரை வருஷமாச்சு. இந்த நெலமைல எனக்கு இப்படி 20க்கும் மேல மெஸேஜ் மேல மெஸேஜா வந்தா எவ்வளோ கடுப்பாகும். கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க? - எல்லாமே நம்ம மேல உள்ள பாசத்தாலதான் அனுப்புறாய்ங்க. ஓ.கே... ஆனா என்னோட நிலைமை?)

இதுல ஏற்கனவே போன் கம்பெனிக்காரன், விளம்பரக்கம்பெனிக்காரன், லோன் குடுக்குறவன், (குண்டூசி விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவன்லாம் தொழிபராம்பா) னு எவன் எவனோ நம்ம நம்பர கண்டு பிடிச்சி மெஸேஜ் அனுப்புறானுங்க. இப்ப எலக்ஷ்னுக்கு கூட கேன்வாஸ் பண்றாங்கப்பா.. அமெரிக்கா எலக்ஷ்னப்ப ஒபாமா கூட அப்டிப் பண்ணாராமே? (ட்விட்டர்...?)

நாம போன் பில்லக்கொஞ்சம் கம்மி பண்ணலாமேன்னு நம்ம நெருங்கின சர்க்கிள்ல மெஸேஜ் மூலமா கம்யூனிகேட் பண்ணிட்டு இருப்போம்... அதுவும் எங்க ஆபீஸூல ஒரு நல்ல பழக்கம், டாப் லெவல் ஆளுங்களுக்கெல்லாம் ஏதாவது மெஸேஜ் அனுப்புனா கர்ம சிரத்தையா உடனே ரிப்ளை பண்ணுவாங்க. அப்போ நாமளும் அந்த மாதிரி இருக்கணுமா? வேணாமா?

டெக்னாலஜி வேற அட்வான்ஸ்டா இருக்கா? நம்ம மொபைல்ல போன் பேங்கிங், ECS மெஸேஜ், கிரெடிட் கார்டு ரிமைண்டர், பர்த்டே ரிமைண்டர், மியூச்சுவல் பண்டு, ஆன்லைன் பில்லிங் வசதில்லாம் போட்டு வச்சிருப்போம்.... அப்பிடி ஏதும் போட்டு இருந்தது... போச்சு.

இந்த வெட்டி ஆபீஸர்ஸ் அனுப்புற குப்பையில அதுங்க கதி அதோ கதிதான். நமக்கு வரவேண்டிய முக்கியமான மெசேஜ் வந்து தொலையாது. இன்பாக்ஸ் ஃபுல், இன்பாக்ஸ் ஃபுல்லுன்னு மட்டும் காமிச்சுட்டு இருக்கும். அப்புறம் உக்காந்து ஒவ்வொண்ணா டெலிட் பண்ணிட்டு இருக்கணும். நெட்வொர்க் பிஸியில அந்த முக்கியமான மெஸேஜூ ஊரையெல்லாம் சுத்திட்டு மூணு நாள் கழிச்சு தான் நம்ம கிட்ட வந்து சேரும், அதுக்குள்ள டைம் லிமிட் கிராஸாகியிருக்கும்.

இந்த தொந்திரவெல்லாம் வேணாம்னு மெஸேஜ் ஃபெஸிலிட்டிய ப்ளாக் பண்ணி வச்சா வர வேண்டிய முக்கியமான மெஸேஜூம் வந்து தொலையாது. டோட்டலா ப்ளாக் ஆயிடும். அதுக்கு பயந்துகிட்டே அமைதியா இருக்க வேண்டியிருக்கு. அதுவும் இந்த புதுசா மொபைல் வாங்குற பயபுள்ளைக இருக்கானுங்களே. ஆறு மாசத்துக்கு அடங்க மாட்டானுங்க. ஆர்ட்டின் போட்டு அதுல அம்ப உட்டுத்தான் குட்மார்னிங் சொல்லுவானுங்க. அது இல்லாட்டி ஒரு குட்டிப்பையன் குஞ்சாமணிய ஆட்டிட்டு வந்து நிப்பான், அதுவும் இல்லைன்னா அருவா படம்லாம் சொந்தமா வரைஞ்சு அனுப்புவானுங்க.. முடியலப்பா, முடியல..

ஆகவே வாலிப, வயோதிக (எஸ்.எம்.எஸ் அனுப்பும்) அன்பர்களே! யாருக்காவது மெஸேஜ் அனுப்புறதுக்கு முன்னாடி தயவு செஞ்சு கொஞ்சம் யோசிங்க. இது தேவையா? அவசியம் இவனுக்கு குட்மார்னிங் சொல்லித்தான் தொலையணுமா? நாம சொல்லலைன்னா இவன் எந்திரிச்சு வேலையப்பாக்க மாட்டானா? இல்ல அட்லீஸ்ட் ஒரு நாளைக்கு ரெண்டு ஃபார்வேர்ட் பண்ணாப் போதாதா? இல்ல நமக்கு வேற ஏதாவது வேலை இருக்கான்னாவது யோசிங்க

இதையும் மீறி மறுபடி மறுபடி தொந்திரவு பண்ணிட்டே இருந்தீங்க... பீ கேர்ஃபு்ல்.. அப்புறம் நானும் மெஸேஜ் கார்டு வாங்கிப்போட வேண்டியிருக்கும்... ஜாக்கிரதை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக