புதன், 20 ஜனவரி, 2021

தங்கமணி வந்தாச்

20 ஜனவரி 2013 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

முகநூல், டுவிட்டர், ப்ளாக் என்று எந்த இடத்திலும் சரளமாகப்புழங்கும் வார்த்தைகளில் ஒன்று "தங்கமணி", ஆன்லைனில் தினசரி சரளமாகப்புழங்கும் பத்தில் ஏழு பேருக்கு "தங்கமணி" என்ற வார்த்தைக்கு சட்-டென்று அர்த்தம் புரிந்து விடுகிறது. ஆனால் "தங்கமணி" என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாதவர்களும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள், இன்னும் கல்யாணம் ஆகாத கட்டிளம் காளைகளாகவோ, அல்லது ஆங்கில மீடியத்தில் படித்து அவ்வப்போது ஒன்றிரண்டு தமிழ்ப்படங்களை மட்டும் பார்க்கும் என்.ஆர்.ஐ - களாகவோ, அல்லது தமிழ்ப்படங்களை ரெகுலராகப் பார்க்காதவர்களாகவோ, அல்லது பழைய படங்களை சீன் பை சீன் பார்த்திராத புதிய தலைமுறையாகவோ, முக்கியமாக ஜனகராஜைத்தெரியாதவர்களாகவோ இருக்கலாம்.

அவர்களுக்காகவே இந்த விளக்கம்.
மணிரத்னத்தின் "அக்னிநட்சத்திரம்" படம் நினைவிருக்கிறதா? மனைவிகளுக்கு தங்கமணி என்னும் அடைமொழியை வலையுலகுக்கு தந்த படம் அது.
படத்தில் தன் மனைவி தங்கமணி ஊருக்கு கிளம்பும்போது அவரது கையை பிடித்துக்கொண்டு தங்கமணி, தங்கமணி, என்று அழுவோ அழு அழுவதும் பஸ்கிளம்பிய பின் “எம்பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா” என்று பஸ் ஸ்டாண்டையே சுற்றிச் சுற்றி வந்து உற்சாக குரல் எழுப்புவதும், (ட்விஸ்ட் - பஸ் ஸ்டாண்டை முழுமையாகச் சுற்றி விட்டு தங்கமணியை பஸ் ஏற்றி விட்ட இடத்துக்கு வந்தால் கிளம்பிப் போன பஸ் நின்று கொண்டிருக்கும். தங்கமணி முறைத்தபடி நின்றிருப்பார், ஏன்னா, அவரது ஒரு பை தலைவர் கையில் மாட்டி தொங்கிக் கொண்டிருக்கும்) "நீ இன்னும் ஊருக்குப்போகல?" என்று முழிப்பதும், பின்னால் வரும் இன்னும் இரண்டு சீன்களில் "நோ தங்கமணி எஞ்சாய்" என்று ஆனந்தப் படுவதும் அட்டகாசமான ஜனகராஜ் ஸ்டைல்.
"தங்கச்சிய நாய் கடிச்சிட்சிப்பா.." என்று ரஜினியிடம் ஒரு படத்தில் புலம்புவாரே... அந்த கிளாஸிக் காமெடியை ஒத்த அடுத்த கிளாஸிக் இந்த தங்கமணி புலம்பல்ஸ்..
"தங்கமணி வந்தாச்" என்றால் எனக்குக்கல்யாணம் ஆகி அம்மணி வீட்டுக்கு வந்தாச்சு என்று அர்த்தம், புரிகிறதா டவுட்டு கேட்ட அன்பர்களே?
((((((((((((((((((( "அக்னிநட்சத்திரம்" - மனைவிகளுக்கு தங்கமணி என்னும் அடைமொழியை வலையுலகுக்கு தந்த படம். மனைவி ஊருக்கு கிளம்பும்போது அழுவதும் பின் “என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா” என்று உற்சாக குரல் எழுப்புவதும் ” நோ தங்கமணி எஞ்சாய்” என்று ஆனந்தப் படுவதும் ஜனகராஜுக்கே அளவெடுத்த சட்டை.
இது நண்பன் "சேலம் தேவா" - வின் குறிப்பு..)))))))))))))))))))))))

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக