செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

கவுண்டரின் மகிழ்ச்சி

10 ஆகஸ்ட் 2015 அன்று எழுதியது. 

உறவில் சர்வேஷ், அர்விந்த் என்று இரண்டு பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள். யு.கே.ஜி போன்ற பெரிய படிப்பு படிப்பவர்கள் அவர்கள். 

அதர்வன் (மகனார்) அவர்களில் எவரையேனும் பார்த்தால் "ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்" என்று கதைகளில் படித்திருப்பீர்களே, அதை முகத்தில் காண்பிப்பான். பரவசம், பரவசம் என்பார்களே அது உடலில் தெறிக்கும், மற்ற எல்லா வித சிரிப்புகளிலும் அப்போது வரும் சிரிப்பு அவ்வளவு வித்தியாசமாக இருக்கும். அவர்களிடம் போய் உரசியவாறு நின்று கொள்வான். கட்டிப்பிடிக்கவும் தெரியாது. அடுத்து என்ன செய்வது என்றும் தெரியாது. எட்டு வயதுப் பையனிடம் திடீரென் ஆயிரம் ரூபாய் கொடுத்து "என்ன வேணா வாங்கிக்கோ, பண்ணிக்கோ, கேக்க மாட்டேன்" என்றால் அவன் நிலை எப்படி இருக்கும்? 

"இப்போ எதாவது செய்யணும், ஆனா என்ன செய்யறதுன்னு தெரியலையே" என்ற அவனது நிலை பதினைந்து இலட்சம் லாட்டரி விழுந்தவுடன் "அய்யோ நான் இப்போ எதையாவது வாங்கியாகணுமே" என்ற கவுண்டரின் மகிழ்ச்சி நிலைக்கு ஈடானது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக