வியாழன், 16 ஜூலை, 2020

சத்திய சோதனை

தட்டில் வெள்ளையாக ஏதோ கிடந்தது. உற்றுப்பார்த்தேன். மங்கலாக ஏதோ தெரிந்தது. ரவை உப்புமாவாக இருக்கக் கூடும். கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. ஓரமாய் சிவப்பாய் கொஞ்சம். ஊறுகாய். அது ஓர் ஆறுதல்.

திடீரென ஒரு மசாலா வாசனை. ஆனால் அது பக்கத்தில் வந்தமர்ந்தவரின் தட்டில் இருந்து. வண்ணக்கலவையாய் நீள நீளமாய் ஏதோ நிரம்பியிருந்தது அங்கே. அது சீனர்களின் விருப்ப உணவாய் இருக்கக்கூடும் என என் ஏழாம் அறிவு என் வாசனைச் சுரப்பியிடம் பகர்ந்தது.

என் தட்டைப் பார்த்தேன். பின் அவர் தட்டைப் பார்த்தேன். மீண்டும் என் தட்டை. பிறகு அத்தட்டை. ஒரு முறை நன்றாய் மூச்சை இழுத்து வாசனை பிடித்தேன். அது ரோமன்களின் பெயர் தரித்த நூடுல்ஸாய் இருக்கக்கூடும் போலத்தெரிந்தது. ஏக்கமாய் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தேன்.

டாஸ்க்கின் போது குறுக்கே பேசிய தர்சனை முறைத்துப் பார்த்த வனிதா போல ஒரு பார்வை "என்ன?" என்ற ஒரு கேள்வியுடன். லோஸ்லியாவைப் பார்த்து வழியும் கவின் போல அவர் தட்டைப் பார்த்தேன். இப்போது அதே பார்வை சாக் ஷி ஸ்டைலுக்கு மாறியது. "சாயங்காலம் மிச்சமிருந்த ஆலு சப்பாத்தியை நான்தான் சாப்பிட்டேன், அப்போ வந்தியா" என்றொரு உபரிக்கேள்வி முளைத்தது இப்போது.

சடாரென நிமிர்ந்து உட்கார்ந்தது என் மனக்குரங்கு. அப்போ "நூடுல்ஸ் மட்டுமின்றி, ஆலு சப்பாத்தியும் சேந்து போச்சா?" என லோஸ்லியா மட்டுமின்றி அபியையும் சேர்த்து மிஸ் செய்த கவின் போல சைலண்டாக உப்மாவுடன் செட்டில் ஆனேன்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக