வெள்ளி, 24 ஜூலை, 2020

காசிருந்தா....

-------------- என்ற ஊரில் ஒரு பள்ளிக்கு இரண்டு நாட்கள் டீச்சர்ஸ் டிரெயினிங் எடுக்கப் போயிருந்தேன். முதல் நாள் டிரெயினிங் முடிந்தததும் ஃபீட்பேக் கரஸ்பாண்டன்ட் - டுக்குப் போயிருக்கிறது. மறுநாள் காலை என்னைப்பார்க்க வேண்டும் என்று வரச் சொன்னார். போனேன். "டிரெயினிங் ஃபீட்பேக் நல்லா இருந்தது அதான் பாராட்டலாம்னு கூப்பிட்டேன்" என்றவர் உபரியாக "உங்களை எங்கியோ பார்த்த மாதிரி இருக்கே?" என்றார் புருவத்தை உயர்த்தியபடியே.

"ஆமாம் மேடம், ஏழு வருஷம் முன்னாடி ----------------- கம்பெனி சார்பா, இதே ஸ்கூலுக்கு டீச்சர்ஸூக்கு டிஜிட்டல் கிளாஸ் ரூம் டிரெயினிங் எடுக்க வந்திருக்கேன்" என்றேன். உடனே பார்வையை மாற்றி "ஓ, அங்கயும் இங்கயும் இப்படியே உருண்டுகிட்டு இருப்பீங்க? கம்பெனீஸ்ல, இத விட்டா அது, அதை விட்டா இதுன்னு..... இல்ல" என்றார் நக்கலாக.
நான் உடனே " உங்களுக்கு என்ன மேடம், நீங்க வீட்ல சும்மாவே இருக்கீங்கன்னு உங்க அப்பாவும், ஹஸ்பெண்டும் சேர்ந்து நாலு கோடி போட்டு ஸ்கூல் ஆரம்பிச்சு கரஸ்பாண்டன்ட் ஆக்கி விட்டுட்டாங்க. நீங்களும் எல்லாத்துக்கும் ஆள் போட்டுட்டு டைம் பாஸ் மாதிரி தோணுறப்போ ஸ்கூலுக்கு வருவீங்க. எங்களையெல்லாம் நக்கலா கேள்வி கேட்டுகிட்டு இருப்பீங்க. ஆனா என்னை மாதிரி இலட்சக்கணக்கான பேருக்கு அப்படியா? எங்கப்பாருக சேத்து வைக்கலியே. இந்த மாசம் வேலை செஞ்சா தான் அடுத்த மாசம் புவ்வா-----------" என்றெல்லாம் சொல்லாமல்.....

"ஆமாம் மேடம்" என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
.
இரண்டாண்டுகளுக்கு முன்பு (23.07.18) அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக