வெள்ளி, 24 ஜூலை, 2020

நம்ம கடே........... ஹோட்டல்கள் - பெங்களூருடா

இங்கே பல (குறிப்பாக அசைவ) ஹோட்டல்களில் நம்மூரில் இல்லாத ஒரு வித்தியாசமான முறையைக் கையாள்கிறார்கள். கேஷியர் போல கிச்சன் வாசலில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். சர்வர் ஒவ்வொரு அயிட்டத்தை வெளியே எடுத்து வரும்போதும் தட்டோடு நின்று அவரிடம் இரு விநாடிகளில் என்னென்னவென்று கடகடவென சொல்லி விட்டுக் கடக்கிறார். உடனே தன்னிடமிருக்கும் பெரியதொரு லெட்ஜர் போன்ற நோட்புக் ஒன்றில் அந்த சர்வருக்கென ஒதுக்கப் பட்ட பிரிவில் குறித்து விடுகிறார் அந்த நபர்.
.
கஸ்டமர் சாப்பிட்டு முடித்ததும் பில் வாங்குவது சர்வரே தான். கேஷியர் இல்லை. (ஆனால் 90 ரூபாய் அ 180 ரூபாய்க்குத் தின்றால் மீதியை டிப்ஸாகத் தானே எடுத்துக் கொள்வது மட்டும் லேசாகக் கடுப்படிக்கிறது)
.
அன்றைய நாள் முடிந்ததும் சர்வர் தன் பெயரில் குறிப்பிடப் பட்டுள்ள மொத்த உணவுப் பண்டங்களுக்குக் கணக்கான, சரியான தொகையை ஹோட்டலில் ஒப்படைத்து விட வேண்டும்.
.
இதில் பல அனுகூலங்கள் (முதலாளிக்கு)
1. தனக்குத் தெரிந்தவர், உறவினர் என சர்வர் யாருக்கும் அன்பளிப்புக் கொடுத்து முதலாளியை ஏமாற்ற இயலாது.
2. கஸ்டமரைக் கண்டுக்காமல் டிப்ஸை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட சர்வர்கள் உஷாராக கஸ்டமர்களைக் கண்காணிப்பர்.
3. அமேஸான் போல "இது நம்ம கடே" ஃபீல் (வேறு வழியின்றி) வந்து விடுகிறது சர்வருக்கு.
4. தெரிந்த நண்பர்களுக்கு எக்ஸ்ட்ரா உணவளித்து, கம்மி பில் போட்டு ஏமாற்ற முடியாது.
5. மற்றும் பல
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக