திங்கள், 24 ஜனவரி, 2022

அரசு ஆசிரியர்கள், விரிவுரையாளர்களின் அட்ராசிடீஸ் - 2

 நல்ல ஆசிரியர்கள், நல்ல கேரக்டர் உள்ளவர்கள், நல்ல திறமை உள்ள ஆசிரியர்கள், வேலையை நியாயமாக வாங்கியவர்கள், நியாயமான சம்பளம் வாங்குபவர்கள், சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்யும் ஆசிரியர்கள் ஓரமாகப் போகவும். நீங்கள் வாழ்க. இது உங்களுக்கானதல்ல. இந்தப்பதிவைப் படிக்க வேண்டாம்.

4. தகுதி இருக்குல்ல, தகுதியோட தானே வேலைக்கு வந்தோம் என்று சிலர் பொங்குவது கண்ணில் பட்டது. ஆனால் தெருவில் இறங்கி நெருக்கமான இத்துறை விபரம் தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பாருங்கள். இலஞ்சம் கொடுக்காமல் "எந்த அரசு வேலையும்" கிடைக்காது. கிடைத்திருந்த சிலருக்கு, ஒரு ஊரில் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை வைத்து "தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறது" என்று வழக்குப் போட வைத்து அந்தத் தேர்வையே செல்லாததாக்கிய கதையை உறவினர் ஒருவர் சொன்னார்.
5. இலஞ்சம் என்ற ஒன்று வந்து விட்டால் அங்கே தகுதிக்கு என்ன வேலை? வேலையின் கிரேடு, டிபார்ட்மெண்ட், கிடைத்த ஊர், உங்க கம்யூனிட்டி, சிபாரிசு இதையெல்லாம் பொறுத்து குறைந்த பட்சம் 5 இலட்சத்தில் இருந்து 45 இலட்சம் வரை இலஞ்சம் இல்லாமல் அந்த வேலை கிடைக்காது. தனியார் கல்லூரியில் MBA வகுப்பெடுக்கும் அண்ணன் ஒருவர் வாத்தியார் வேலை கிடைத்து பல ரவுண்டுகளைத் தாண்டி ஃபைனல் இன்டர்வியூவுல 45 இலட்சம் கேட்டாங்க கார்த்தி. அதைப் புரட்ட முடியாம தனியார்லயே இருக்கேன் என்றார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தெரிந்தவர்கள் அவருக்குத் தெரிந்தவர்கள் மட்டும் 15 பேர் இப்படிப் பணம் கொடுத்து வேலையில் சேர்ந்திருப்பதாகச் சொன்னார்.
அது போல லஞ்சம் கொடுத்து வந்தவர்கள் எத்தனை சதவீதம் பேர் இந்தப் போராட்டத்தில் சத்தம் காட்டாமல் உட்கார்ந்திருக்கிறார்கள்?
6. "மாணவர்களின் எதிர்காலத்திற்காகத்தானே போராடுகிறோம், ஆச்சா, போச்சா என்று சிலர் குதிக்கிறார்கள்" ஆனால் நண்பர் மகாதேவன் சியெம் பகிர்ந்திருந்த ஜாக்டோ - ஜியோ நோட்டீஸைப் பார்த்தேன். அனைத்து கோரிக்கைகளும் "சம்பளத்தை ஏத்து" என்றே இருந்தன. போனால் போகட்டும் என்று கட்ட கடேசி பாயிண்ட் ஆக 3500 பள்ளிகளை மூடக் கூடாது என்ற பாயிண்டை சேர்த்திருந்தார்கள்.
7. ஊர்ல, 76 வயசாவுற எங்க மாமா ஒர்த்தரிடம் "ஏய்" படத்துல "இந்த ஸ்டாம்புல இருக்கறது யாரு?" என்பது போல "மாமா, இந்த வாத்தியாருங்க...." என்று எடுத்துக் கொடுத்தால் போதும். "இந்த வாத்திப் பயலுக இருக்கானுங்களே" என்று ஆரம்பித்தால் "இவ்ளோ சம்பளத்தை வாங்கிகிட்டு" என்று வண்டை வண்டையாகக் கேட்கத் துவங்கி விடுவார். அவர் இன்னும் உடலுழைப்பு தேவைப்படும், லிட்ரலி, மூட்டைகளைத் தூக்கி இறக்கும் வேலையெல்லாம் செய்து கொண்டு ஒரு கடையில் தினக்கூலி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் போய் உங்கள் கோரிக்கைகளை விளக்கி கன்வின்ஸ் செய்யுங்கள் பார்ப்போம்.
டிஸ்கி - இது யார் மனதையும் புண்படுத்த அல்ல.

25 ஜனவரி 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. பார்ட் 1 படிக்க இங்கே க்ளிக் செய்யவும். பார்ட் 3 படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக