திங்கள், 24 ஜனவரி, 2022

அரசு ஆசிரியர்கள், விரிவுரையாளர்களின் அட்ராசிடீஸ் - 3

 நல்ல ஆசிரியர்கள், நல்ல கேரக்டர் உள்ளவர்கள், நல்ல திறமை உள்ள ஆசிரியர்கள், நியாயமாக வேலை வாங்கியவர்கள், நியாயமான சம்பளம் வாங்குபவர்கள், சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்யும் ஆசிரியர்கள் ஓரமாகப் போகவும். நீங்கள் வாழ்க. இது உங்களுக்கானதல்ல. இந்தப்பதிவைப் படிக்க வேண்டாம்.

8. பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்ட ஒரு மீட்டிங் போயிருந்தேன். நான் ஏற்கனவே டிகிரி வாங்கிட்டேனே. என்னை ஏன் மீண்டும் மீண்டும் எக்ஸாம் எழுதச் சொல்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அரசு அங்கீகரித்த கல்லூரிகளில் தானே அந்த டிகிரி வாங்கினோம், அப்போ அது செல்லாதா என்று குதர்க்கமாகக் கேள்வி வேறு. நாளுக்கு நாள் வேகமாக முன்னேறும் உலகில் 1990 ல் வாங்கிய டிகிரியை மட்டும் வைத்துக்கொண்டு 2018 வரை திரும்பத் திரும்பத் திரும்ப எடுத்ததையே எடுத்துக் கொண்டிருப்பார்களாம். அப்டுடேட் ஆக இருக்க மாட்டார்களாம். ஐந்தாண்டுகளுக்கு, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கூட புது எக்ஸாம் எழுதி தன் தகுதியை நிரூபிக்க மாட்டார்களாம். ஆனால் சாகும் வரை பழைய பென்ஷன் திட்டத்தின் படி பென்ஷன் மட்டும் வேண்டுமாம். (அவர்கள் கட்டிய பணத்தை அவர்களுக்கு அரசு தருவது தான் முறை. நான் சொல்வது அதையல்ல. பழைய பென்ஷன் திட்டத்தை)
டிஸ்கி - இது யார் மனதையும் புண்படுத்த அல்ல. இன்னும் நிறைய வருது. ஆனால் நண்பர்களை இழக்க நேரிடுமே என்று இத்துடன் "வணக்கம்" வைக்கிறேன்.

25 ஜனவரி 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. பார்ட் 1 படிக்க இங்கே க்ளிக் செய்யவும். பார்ட் 2 படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக