செவ்வாய், 4 ஜனவரி, 2022

ஏன் இந்த சப்பைக் கட்டு?

4 ஜனவரி 2021 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

தியேட்டரை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தியேட்டர் கள் திறக்கப்படும் 100 சதம் இருக்கைகள் நிரப்பிக் கொள்ளலாம், என்று அறிவித்த அரசு அதேபோல் 

பள்ளிகளை நம்பி உள்ள பல இலட்சம் பேரை ஏன் கருத்தில் கொள்வதில்லை? மாணவர்களின் கற்றல் இழப்பு ஒரு பக்கம். அதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் "ஸ்கில் கேப்" ஒருபக்கம் போக, 

பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள்,

மற்ற அலுவலக ஊழியர்கள், 

பள்ளிகளுக்கு வேன் சர்வீஸ் விடுபவர்கள், 

பள்ளிகளுக்கு புத்தகம் சப்ளை செய்பவர்கள், 

பள்ளிகளுக்கு தண்ணீர் போன்றவை சப்ளை செய்பவர்கள், 

டாய்லெட் சுத்தம் செய்யும் வேலை செய்பவர்கள், 

வெளியில் இருந்து கான்ட்ராக்ட் மூலம் வேலை செய்யும் யோகா, செஸ், மெடிடேஷன், கையெழுத்து வகுப்பு எடுப்பவர்கள், 

கம்ப்யூட்டர், லேப் போன்றவை சர்வீஸ் செய்பவர்கள், 

பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தரும் என்னைப் போன்றவர்கள், 

புரொஜெக்டர் போன்ற ஸ்மார்ட் க்ளாஸ் கருவிகளை சப்ளை செய்பவர்கள், சர்வீஸ் செய்பவர்கள், 

பள்ளிகளில் லைசென்சிங் வேலை செய்பவர்கள், 

க்ளீனிங் கான்ட்ராக்ட் எடுத்தவர்கள், 

கேன்டீன் நடத்துபவர்கள், 

பள்ளிகளின் அக்கவுண்டன்டுகள், 

தோட்டம் சுத்தம் செய்பவர்கள், 

உபரிக் கட்டிட வேலை செய்பவர்கள், 

இது போக எத்தனையோ உபரிப் பொருட்களை விற்கும் மார்க்கெட்டிங் தொழிலாளர்கள், சிறு நிறுவனங்கள், 

நோட்டுப் புத்தகங்கள் விற்பவர்கள், 

பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் சிறு பொருட்கள் விற்கும் ஸ்டேஷனரி கடைகள், 

பள்ளி மாணவர்களுக்கு தீனி விற்கும் பஜ்ஜி போண்டாக் கடைகள், 

இன்னும், இன்னும், இன்னும், இன்னும், இன்னும், இன்னும், 

என கோடிக்கணக்கானோர் புழங்கும் இது ஒரு மிகப்பெரிய இன்டஸ்ட்டிரி. இவர்களில் பாதிப்பேருக்கு இன்று  வேலை இல்லை. மீதிப்பேர் கால் சம்பளம், அரைச் சம்பளம் வாங்குகின்றனர். பெரும்பாலானோர் கடைகளை மூடிவிட்டார்கள். 

இது ஏன் அரசின் கண்களில் படவில்லை? மால்கள் திறந்தாயிற்று, மார்க்கெட் திறந்தாயிற்று, கோவில்கள் திறந்தாயிற்று, டாஸ்மாக் திறந்தாயிற்று, பஸ்கள் ஓடுகின்றன, டிரெயின்கள் ஓடுகின்றன, ரேஷன் கடை நடக்கிறது, விமானங்கள் ஓடுகின்றன, பேக்டரிகள் திறந்தாயிற்று, கடைகள் திறந்தாயிற்று, தியேட்டர்கள் 100 சதம் நிரப்பிக்கொள்ளலாம், கிரவுண்டுகள் திறந்துள்ளன, ஜிம்கள் திறந்துள்ளன, வங்கிகளில் கூட்டம் அம்முகிறது, நகைக்கடை, துணிக்கடைகள் திறந்து வியாபாரம் நடக்கிறது. இங்கே எல்லாம் எல்லா வயதுக்குழந்தைகளும், சிறுவர், சிறுமிகளும், கல்லூரி மாணவர்களும் புழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

ஏன் பள்ளித் துறை மட்டும் என்ன பாவம் செய்தது? அதற்கு மட்டும் ஏன் "பெற்றோர்களிடம் கருத்துக் கேட்போம்" என்ற சப்பைக் கட்டு? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக