ஞாயிறு, 14 ஜூன், 2020

விர்ச்சுவரல் போராளிகள்

இந்தப் பதிவு குறிப்பிட்ட ஒருவரைப் பற்றியது போல இருக்கலாம். ஆனால், பொதுவாக இந்த மாதிரி இன்டர்நெட்டில் (மட்டும்) கம்பு சுத்தும் சிலரைப் பற்றி நெடுநாளாக மனதில் ஓடும் ஒரு விஷயத்தைத்தான் சொல்ல வருகிறேன்.


அந்தம்மா பற்றி எனக்கு ஒன்றும் பெரிதாக விபரங்கள் தெரியாது. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கண்ணில் படும். பார்க்கவே எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட - எனக்கு அவர்களைப் பற்றி எந்த அபிப்ராயமும் இருந்த தில்லை. ஆனால் அவரின் கொள்கைகள், நடவடிக்கைகள், அவரின் அடையாளங்கள், பேச்சுக்கள், தன்னை எப்பேர்ப்பட்ட பெண்ணென்று நிரூபணம் செய்யும் விதம்... எல்லாமே ஆரம்பம் முதலே தவறாகவே எனக்கு தோன்றியது...


எனக்கு பேஸிக் கா ஒரு விஷயம் இடிக்குது. ரூல்ஸ், கலாச்சாரம் போன்றவை நாடு, இடம், காலம் சம்பந்தப் பட்டவை. இங்க இந்தியாவுல வாழ்ந்துகிட்டு நான் அமெரிக்க கலாச்சாரம் தப்புன்னு சொல்லக்கூடாது. 2020 ல இருந்து கிட்டு 1920 ல வாழ்ந்த ஒரு குழுவோட கலாச்சாரத்தை "இப்படி இருந்திருக்கணும், அப்படி இருந்திருக்கணும்" னு சொல்லக்கூடாது. மகா தப்பு.


அதே போல "பெண் சுதந்திரம்" பேசும் பலர் இந்தியாவில், இங்கே, இப்போ பல போராட்டங்களுக்கு இடையில் வாழ்ந்து ஒரு போராட்டத்தை முன்னெடுத்தால் வாழ்த்தலாம். பேசலாம். விவாதிக்கலாம்.


ஆனால், மிகச் சுதந்திரமான வெளிநாட்டில் மற்றொரு கலாச்சாரத்துக்கு நடுவில் வாழ்ந்துகொண்டு, வசதியான டாலர் கொட்டும் வேலைகளில் இருந்து கொண்டு இன்டர்நெட் தரும் கட்டற்ற போலி சுதந்திர மனப்பான்மைக்குள் (தன் ரூம்ல தான் தானே ராஜா?) சிக்கிக் கொண்டு அடிக்கடி எதையாவது (வீடியோவில் மட்டும்) உளறுவதெல்லாம் மகா அபத்தம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.


உண்மையா தைரியம் இருந்தா நீ இங்க வா, 8000 - 10000 சம்பளத்துக்கு நம்ம ஊர் சாதாரண பெண்கள் போற மாதிரி பஸ்ல, ட்ரெயின்ல ட்ராவல் பண்ணி, ஒரு சாதாரண வேலைக்குப் போ (உதா- டீச்சர் வேலை, ஆபீஸ் வேலை). இங்க இருக்குற பிரச்சினைகளைச் சமாளி. அப்போ அவுத்துப் போட்டு வீடியோ போடு. EMA பத்திப் பேசு. உன் தைரியம் என்னன்னு பாப்போம்.


இதைச் சொன்ன போது "பொருளாதார சிக்கல் இருந்தா இந்த மனப்போக்கே வராதே.. ஒரு லீவுக்கு லட்சக்கணக்கான ரூபாயை செலவழிக்குறவங்களுக்கு இது சாதாரணம்தானே" என்று நண்பரொருவர் சொன்னார். ஆக, பிரச்சினை அதுதான். மிதமிஞ்சிய பணம், "நான் செய்வது சரி" என்று எண்ணவைக்கிறது. அவ்ளவ் தான்.


இவர்களைப் போன்றோர் ஒரு குரூப் ஆரம்பித்து எதையாவது சொல்லி மற்றவர்களைத் தூண்டி விட்டு, (நாசமாக்கி விட்டு) இவர்கள் வழக்கம் போல, தன் வேலை (i mean job) யைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள். சம்பளம், வருமானம் தாராளமாக வரும் இவர்களுக்கு இது பிரச்சினை இல்லை. இதை நம்பி பின்னால் செல்பவர்களுக்குத் தான் பிரச்சினை. இப்ப அதுதான் நடந்துட்டு இருக்கு..


ஒட்டு மொத்தமாக இவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்த்தால் - விர்சுவல் வெளியில் - அட்டைக் கத்தி சுற்றுகிறார்கள். ரோட்டில் இறங்க மாட்டார்கள். எந்த உண்மையான போராட்டத்தையும் முன்னெடுக்க மாட்டார்கள். EMA வை விடுங்கள், மேல் சாவனிசத்தில் அடிமைப்பட்டு கஷ்டப்படும் பெண்களின் உண்மையான, மிக பேஸிக் சுதந்திரத்தைக் கூட வாங்கித்தர இவர்கள் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க மாட்டார்கள்.


இன்னும் சிம்பிளா சொன்னா, நல்லா வேலைக்குப் போய், சம்பாதிச்சு, ஜாலி பண்ணி, தண்ணியடிக்கிற, கருத்து சொல்ற பழக்கம் பல ஆண்களுக்கே இருக்கு. அதை ஒரு பெண் (வீடியோவுடன்) செய்கிறார். அவ்ளவ் தான் மேட்டர். தண்ணியடித்துப் புலம்பி விட்டு, காலை எழுந்து மூஞ்சைக் கழுவி விட்டு வேலைக்குப் போய்விடுவார். இதனால் யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை.


இதுக்கு இவ்ளோ பெரிய பதிவை எழுதி நம்ம நேரத்தைத் தான் நாம வீணடிச்சிருக்கோம். இந்நேரத்துக்கு நாம, நம்ம துறை சார்ந்த ஒரு விஷயத்தைப் பத்தி ப்ரவுஸ் பண்ணியிருந்தா, நம் வாழ்க்கைக்கு நல்ல விதமா ஒரு செங்கல் எடுத்து வச்ச மாதிரி இருக்கும்.


ஆனா செய்ய மாட்டோம். ஆனா அது ஹ்யூமன் நேச்சர். கன்ட்ரோல் பண்றது கஷ்டம். என்னான்றீங்க?

யாருக்கு? யாருக்கோ.

யாரைப்பத்தி? யாரைப்பத்தியோ.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக