புதன், 7 அக்டோபர், 2020

உடனடி ரியாக்ஷன் வேண்டாமே.

 தெரிந்த ஆசிரியை ஒருவர், கொஞ்சம் வயதில் மூத்தவர். இரு நாட்கள் முன் அவரை சந்திக்கவிருந்த ப்ளான் சற்றுப் பிசகியது. காரணம் இதுதான். அன்று காலை நடந்த சம்பவம் இது. அவரது தம்பி (கசின்முறை) யின் மனைவி ஒரு சாலை விபத்தில் திடீரென ஆன் தி ஸ்பாட் இறந்துவிட்டார். செய்தியைக் கேள்விப்பட்ட அந்த கணவரும் உடனடியாக மாரடைப்பால் மரணம். ஒரே நாளில் ஒரு குடும்பத்தில் இரு மரணங்கள்.

அவர்கள் இருவரும் பரஸ்பரம் எவ்வளவு காதல் கொண்டிருந்திருப்பார்கள், அவர்களுக்குள் எவ்வளவு அந்நியோன்யம் இருந்திருக்க வேண்டும் என்று ஒருபுறம் பலர் சொன்னாலும், மற்றொருபுறம் இது நிகழாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. கொஞ்சம் emotional control இருந்திருக்கலாமோ என்றும் எண்ணினேன்.

சுகம் துக்கம் எதுவாயிருந்தாலும் சடாரென உடனடியாக ரியாக்ட் செய்யாமல் கொஞ்சம் நிதானித்திருந்தால் ஒரு உயிரேனும் மிஞ்சியிருக்கும். அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவருக்குத் திருமணம் ஆகிவிட்டாலும், இன்னொரு பையன் கல்லூரியில் படிக்கிறான். பாவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக