ஞாயிறு, 18 அக்டோபர், 2020

புது சகவாசம்

இரண்டு நாட்களாக அதர்வன் பள்ளிக்குப் போக ஒரே அழுகை. நடுவில் சில வாரங்கள் வெறும் சிணுங்கலோடு நிறுத்தியிருந்தவன், மீண்டும் அழுதுகொண்டே போகத் துவங்கியிருக்கிறான். சிலமுறை நெடும் விடுமுறைகள் எடுத்ததாலோ, அமைந்ததாலோ இருக்கும் என்று நினைத்துக் கொண்டோம். 

ஆனால், இன்று கவனித்ததில் விஜயதஸமிக்குப் பிறகு (பல) பள்ளிகளில் குழந்தைகள் கூட்டம் அதிகமாகியுள்ளது. முக்கியமாக ப்ரீ கே.ஜி, எல்.கே.ஜி க்களில். (அவ்வளவு ஏன்? எங்கள் வீட்டிற்குப் பின்னால் புதிய பள்ளியே ஒன்று முளைத்துள்ளது) முன்பு இவன் தான் இருப்பதிலேயே குட்டியாய், சிவில் டிரஸ் அணிந்தபடி சென்று கொண்டு இருந்தான். மற்றவர்கள் எல்லாம் யூனிஃபார்ம். இப்போது இவன் வகுப்பில் இவனை விடக் குட்டி குட்டியாய் மூன்று பேர் புதிதாய். விடாமல் அழுதபடியே.. 

சரிதான். புது சகவாசம்..

18 அக் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக