திங்கள், 26 அக்டோபர், 2020

அநியாயத்துக்கு பாஸிடிவ்

வாழ்க்கையை சில பேர் அநியாயத்துக்கு பாஸிடிவ்-ஆ எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். நமக்கு எதைப் பாத்தாலும் டென்சனாவுது. தெய்வம்யா நீங்கள்லாம்.

நண்பர் ஒருவர்.
பெரிய திறமைசாலி ஒன்றும் கிடையாது. நீங்கள் ரோட்டில் இறங்கி நடந்தால் எதிர்ப்படும் நூறு சாதாரண ஆசாமிகளில் ஒருவர்.
ஆனால் நல்லவர்.

எட்டாவது வயதில் அவரது தாய் மரணிக்கிறார்.
பத்தாவது வயதில் தந்தை.
உறவினர் வீட்டில் தங்கி பார்ட் டைம் வேலைகளும் செய்து அவர்கள் ஆதரவில் (நல்லது, கெட்டது, ஏச்சு பேச்சுகளும் இருந்திருக்கலாம்) வளர்கிறார்.
இது போக நம்மைப்போல் படிப்பு, புவ்வா, பணம், வேலை, பாலிடிக்ஸ், எல்லா பிரச்சினையும் உண்டு.
24 வயதில் திருமணம்.

மனைவிக்கு ஏதோ தீராத வியாதி. மூன்று வருடங்கள் ஆஸ்பத்திரி அலைச்சல். 28வது வயதில் அவரும் மரணிக்கிறார்.
மீண்டும் நண்பர் தனியன்.
மூன்று வருடம் மீண்டும் தீராத தனிமை.
இரு வருடம் முன்பு 31 வயதில் இரண்டாவது திருமணம்.

ஆண்டவன் (அல்லது வேறேதோ ஒன்று) புண்ணியத்தில் தற்போது அமைதியான வாழ்க்கை. கையில் சின்னஞ்சிறு "தங்க மீன்" ஒன்று.
நண்பரே, உங்கள் நல்ல மனதிற்காகவாவது அந்த ஆண்டவன் அமைதியை மட்டும் இனி வழங்க பிரார்த்திக்கிறேன்.
.
27 அக்டோபர் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக