ஞாயிறு, 18 அக்டோபர், 2020

ஃபாரின்ல இருந்துகிட்டு

நம்ம (கல்லூரி) நட்பு ஒருத்தர் ஃபாரின்ல இருந்துகிட்டு இங்கே நமக்கு அட்வைஸூரார். அமேசான்ல வாங்காதே, ப்ளிப்கார்ட்ல வாங்காதே, நம்ம ஊரு வியாபாரி பாதிக்கப்படுறான்னு. (அமேசான்லயும், ஃப்ளிப்கார்ட்லயும் வியாபாரம் செய்யறவன் எல்லாம் இந்தியாக்காரன், நம்ம ஊருக்காரன் தான், பக்கத்து வீட்டுக்காரர் கூட அமேசான் ல seller. அது தனி விவாதம். அப்பாலிக்கா பேசுவோம்)

நான் "உனக்காக இந்தியா எவ்வளவோ மறைமுகமா செலவு பண்ணியிருக்கு, நீ மட்டும் ஏன் ஃபாரின் போனே? உன் அறிவு இந்தியாவுக்கு கிடைச்சிருந்தா இந்தியா வல்லரசாகியிருக்குமே" அப்படின்னும்
வெளிநாட்ல வேலை பார்த்துகிட்டு, வெளிநாட்ல சம்பளம் வாங்கிகிட்டு, வெளிநாட்ல செலவு பண்ணிகிட்டு, வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்ல பொருள் வாங்கி கிட்டு, எங்களை "வெளிநாட்டு வெப்சைட்ல" வாங்காதேன்னு நீ சொல்லாதே நண்பா, அப்படின்னும்
திருப்பிக் கேள்வி கேட்டா "உனுக்கு எகானமி தெரியுமா? அறிவை வளத்துக்கோ, நான் நாலு விஷயம் தெரிஞ்சதுனால தான் பேசுறேன்" ன்னு திட்றார்.
ஒண்ணும் தெரியலைன்னாலும் இந்தியாவுல இருந்துகிட்டு, இந்தியாவுக்குத் தான் டேக்ஸ் கட்றோம் நண்பா. "அங்க" இருந்துகிட்டு "இங்க" நாங்க என்ன பண்ணனும்னு நீ சொல்லாத.
.
17 அக் 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக