ஞாயிறு, 11 அக்டோபர், 2020

நமக்கு ஏன் பொல்லாப்பு.

என் வங்கியினர், தங்கள் நிறுவன மொபைல் ஆப் - ஐ பிரமோட் செய்யும் பொருட்டு, வங்கிக் கிளைக்கு பணம் கட்டச் செல்பவர்களை மொபைல் ஆப் மூலம் பணம் கட்டுவதைப் பதிவு செய்யச் சொல்கிறார்கள். அதாவது, பேனா மூலம் சலான் எழுதாமல், நம் பெயர், அக்கவுண்ட் எண், மொபைல் எண், பண டினாமினேஷன் விபரம், எச்சச்ச கச்சச்ச விபரங்களை அவ் வங்கியின் மொபைல் ஆப் (யார் மொபைலில் இருந்து வேண்டுமானாலும்) இல் பதிந்து ஓக்கே கொடுத்தால் அது ஆன்லைனில் வங்கியைச் சேரும். உடனடியாக சலானை அவர்கள் பிரிண்ட் அவுட் எடுத்து நம் கையில் தருவார்கள். அதனை வழக்கம் போல கவுண்டரில் கொடுத்து பணத்தைக் கட்டிக் கொள்ளலாமாம். நல்ல ஐடியாதான். மொபைல் ஆப் - பில் ஒரு என்ட்ரியும் ஆச்சு, கொஞ்சூண்டு நேர மிச்சமும் ஆச்சு.

.
அந்தப் பிரிண்ட் அவுட் டிசைன் ஒரிஜினல் சலான் போலவே, அதன் சைஸிலேயே இருக்கிறது. ஏ4 பேப்பரை நெடுக்காக இரண்டாகக் கிழித்தால் என்ன சைஸ் வரும். அஃதே. அதனை ஒரு ஏ4 பேப்பரில் இரண்டு எடுக்கலாம், ஆனால் பிரிண்டை ஏ 4 ன் நட்ட நடுவில் எடுத்து முழு பேப்பரையும் வேஸ்டாக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு வாரமாக எத்தனை பண்டல்களை இப்படி எடுத்தார்களோ?
.
நான் என் பிரிண்ட் அவுட்டைப் பார்த்து விட்டு அஜிஸ்டெண்ட் டேமேஜரிடம் போய் "ஏங்க, இதை ஏன் நடுவுல எடுத்து வேஸ்ட் பண்றீங்க? ஏ4 ஐ இரண்டாக் கிழிச்சு, பிரிண்டருக்குள் பேப்பர் வைக்கும் ட்ரேவில் நடுவில் வைத்து ட்ரேவின் ஓரங்களை உள் நோக்கித் தள்ளினீங்கன்னா நடுவுல டைட்டா உக்காரும். இப்போ பிரிண்ட் போட்டா, கரெக்டா செலான் சைஸ்ல வரும்" என்றேன். "அதெப்டிங்க வரும்?" என்று அவர் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. கொஞ்சம் வற்புறுத்தி "ஒண்ணே ஒண்ணு எடுங்க. வேஸ்டானா நான் பொறுப்பு" என்றேன். எனக்கடுத்து பணம் கட்ட வந்த ஒருவனின் செலானை அது போல எடுத்துப் பார்த்தோம். சரியாக வந்தது. எல்லோருக்கும் ஒரே குஷி. "சார், சரியா வருது சார்" என்றார்கள். அட ஆபீஸருகளா... சிம்பிள் ஐடியா தான். ஆனால் என் பெருமை பேச இங்கே இதைப் பதியவில்லை.
.
"அடேய் மல மாடு, இந்த சாதாரண ஈன வெங்காய ஐடியா கூட உனக்கும் உன் டீமுல இருக்குற 4 பேருக்கும் தோணலை. கேஷ் கவுண்டர்ல ஸ்லிப் கிழிச்சு சேர்த்து வைக்கிற புள்ளைக்கும் தோணலை. உள்ள உக்காந்து பல்லு குத்துற உன் டேமேஜருக்கும் தோணலை. நான் மேனேஜராவும், நீ மட்டும் மவனே என் டீமுல கண்டி இருந்திருந்தியானா, ரிவ்யூ-ல உன்னை கிழிச்சு எடுத்திருப்பேன்" என்று நாக்கு வரை வந்து விட்டது. ஆனால் சொல்லவில்லை.
.
ஏன்னா
.
ஏன்னா
.
ஏன்னா
.
இந்த உலகத்தைப் பொறுத்தவரை... இதைச் சொன்னா நான் கெட்டவன். சொல்லாம அமைதியாப் போனா நல்லவன். நல்லவனாவே இருந்துட்டுப் போவோமே...
.
(12 அக்டோபர் 2015 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக