ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

விநாயகரும் நானும் - 1

வரவிருக்கும் "விநாயகர் சதுர்த்தி"யை முன்னிட்டு தினசரி ஒரு விநாயகர் படத்தை அப்லோடலாம் என்றிருக்கிறேன். இன்று முதலில் சிம்பிளாக ஆரம்பிக்கலாம். படம் 1.

முன் கதை - ஆக்சுவலி படத்தின் பின்(னால் உள்ள) கதை - பள்ளியிறுதியிலும், கல்லூரிக் காலத்திலும் பார்ட் டைமாக ஒரு போட்டோ பிரேம் கடையில் நான்காண்டுகள் வேலை பார்த்தேன். அப்போது ஒருமுறை ஒரு A4 முழுக்க குட்டிக்குட்டியாக, விதவிதமான விநாயகர் படங்களை பிரேம் போடக் கொண்டு வந்தார் ஒருவர். அவர் அனுமதியுடன் ஜெராக்ஸ் போட்டு வைத்துக்கொண்டு ஒன்னொன்றாக மூன்று மாதங்களில் கலரில் 20 படங்கள் வரை, வரைந்து கொண்டிருந்தேன். ப்ளஸ் டூ படிக்கையிலா, கல்லூரிக் காலமா என்று நினைவில்லை. குமுதத்திற்கு அனுப்பும் முன் ஒரு செட் ஆக ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டேன், மெமரீஸ்-க்காக.
"நல்லாருக்கு, இதையெல்லாம் பத்திரிகைக்கு அனுப்புடா" என்று யாரோ சொன்னதைக் கேட்டு பல்க் ஆக அவற்றை அப்படியே குமுதத்திற்குக் கொரியர் போட்டேன். ஆனால் இரண்டு பிரச்சினைகள். 1. ஒரு பத்திரிகையில் இல்லாத பகுதிக்கு நாம் எதையாவது அனுப்பினால் அது எப்படி பப்ளிஷ் ஆகும் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 2. மூன்றாண்டுகள் கழித்து தினமலரில் வேலைக்குச் சேர்ந்த போதுதான், கம்ப்யூட்டர் ஃபான்ட்-களிலேயே இப்படி விதவிதமான விநாயகர்கள் உண்டு என்று தெரிந்தது. அதை எப்படி குமுதத்தில் பப்ளிஷ் செய்வார்கள் என்று அப்போது தான் என் மரமண்டைக்கு உறைத்தது.
சில ஸ்கெட்ச் பென்களிலும், சில வாட்டர் கலரிலும் வரைந்தது. சில அவுட்லைன் மட்டும், சில அவுட்லைன் வெள்ளை விட்டுவிட்டு பிறபகுதிகள் முழுக்க கலரும் (அடுத்தடுத்த படங்களில் வரும்). பிள்ளையார் - விநாயகர் என் இஷ்ட தெய்வம், வரைவதில். டப்பென்று ஒரு வளைவைப் போட்டு வரைந்து விடலாம். எளிமையாக சில கோடுகளிலும் வரையலாம், காம்ப்ளிகேட்டட் ஆக நுணுக்கி நுணுக்கி அலங்காரங்கள் செய்தும் வரையலாம். கோபித்துக் கொள்ள மாட்டார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக