சனி, 8 ஆகஸ்ட், 2020

"ஆடாதடா, ஆடாதடா, மனிதா"

2016 ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஃபேஸ்புக்கில் எழுதியது. 

2018 ஆகஸ்ட் 8 ஆம் தேதி - யின் அப்டேட் - அவன் இறந்து விட்டான்

--------------------------------------------------------------

கார் வாங்குவதோ, வீடு வாங்குவதோ முக்கியம் அல்ல. அடுத்தவன் வயித்துல அடிக்காம இருக்கணும். அதான் முக்கியம். நிம்மதி முக்கியம். கடந்த 15 ஆண்டுகளில் நான் அப்ஸர்வ் செய்த வகையில் நாம் செய்ததற்கான பலன் கிடைத்தே தீர்கிறது என்பது என் அவதானிப்பு. நல்லதோ, கெட்டதோ. நான் கடந்து வந்த பலரும், தன் இயல்புகளுக்கேற்ற பலன்களைப் பெற்று வருவதைப் பார்க்கையில் பல பாடங்களைப் படிக்க முடிகிறது.

.
"தெய்வம் நின்று கொல்லும்" என்றெல்லாம் பழமொழி பேசவில்லை. படைத்தவனை விட்டு விட்டு, படைப்புகளைத் தெய்வமாக்கி இருக்கிறோம் என்ற வகையில், "தெய்வம் இருக்கிறது - இல்லை" என்ற இடைப்பட்ட நிலையில் நின்றுகொண்டிருப்பவன் நான். நமக்கென ஏதோ ஒரு பற்றுக் கோலாக நம்பிக்கை வைக்க தெய்வத்தை விட்டால் "வேறொரு அழுத்தமான ஒரு பொருள் (அல்லது கான்செப்ட்)" இல்லாமையே பலரும் கடவுளை விட்டு நாத்திகனாக மாறாமல் ஆத்திலொரு கால், சேத்தில் ஒரு கால் என்று தடுமாறக் காரணம் என்பது என் கணிப்பு. சரி இதை இந்த அளவில் விடுவோம்.
.
நேற்று மற்றுமொரு உதாரணம். பழைய நண்பனொருவன் குடி மற்றும் சில போதைகளுக்கு கடும் அடிமையாகி வெகுவாகப் பாதிக்கப் பட்டு மீண்டு வர முடியாமல் துடித்துக் கொண்டிருப்பதாகத் தகவல். "அய்யோ, பாவம்" என்று சொல்ல அவன் அவ்ளோ யோக்கியன் இல்லை. செஞ்ச அட்டகாசமும் கொஞ்ச நஞ்சமும் இல்லை. "செஞ்சியில்ல, படு" என்று சொல்ல மனம் வரவும் இல்லை. சாலையில் அடிபட்ட பிராணியொன்றை "த்சொ, த்சொ" என்றபடி கடந்து போகும் சாமானியனாகக் கடந்து போகிறேன்.
.
"ஆடாதடா, ஆடாதடா, மனிதா"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக