புதன், 19 ஆகஸ்ட், 2020

இது அரசு ஆதரவுப் பதிவல்ல. நெட் போராளிகள் எதிர்ப்புப் பதிவு.

 1. ஆவின் பால் விலையேறியதற்குப் பொங்கும் ஃபேஸ்புக் போராளிகளே, வீட்டில் உண்மையாகவே ஆவின் பால் தான் வாங்குகிறீர்களா?

2. ஆவினின் நேரடி விலையேற்றம் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னும் இந்த "கூலிங் காசு" என்று உபரித் தொகை வைத்து விற்கும் வியாபாரிகளை எப்போது தட்டிக்கேட்கப் போகிறீர்கள் அதிகாரிகளே? அதிலும் ஆவின் விலை ரவுண்டாக இல்லாமல் 20.50 என்று இருப்பதால் விலை ஏற்றி வாகாக 22 ரூபாய் என்றார்கள். இப்போது 23.50 ஆனதும் 25 ரூபாய் என்கிறார்கள்.
3. ஏற்றப்பட்ட விற்பனை விலையை மட்டும் காட்டிக்குமுறும் போராளிகளே. அரசு கொள்முதல் விலையையும் தானே ஏற்றியிருக்கிறது? பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் விளைவாகத்தானே ஏற்றப்பட்டிருக்கிறது?
4. இதே "கரும்பு கொள்முதல் விலையை ஏற்றவில்லை, உப்பு கொள்முதல் விலையை ஏற்றவில்லை, ஏழை உற்பத்தியாளர்களின் வயிற்றில் அடிக்கிறது அரசு" என்று தனியாக வேறு பக்கம் கூவிக்கொண்டிருக்கிறார்கள். அதுவே பால் கொள்முதல் விலையை ஏற்றி பால் உற்பத்தியாளர்களுக்கு நன்மை நடந்தால் "அய்யய்யோ, பால் விலையை ஏற்றி விட்டார்களே, இனிமேல் குடும்பஸ்தன் என்ன செய்வான்? ஏழைகள் பாலுக்கு என்ன செய்வார்கள்?" என்று வேறு விதமாக கூக்குரல்.
5. விலையேறுனா எனக்கும் கஷ்டம் தான். நானும் விலைவாசி உயர்வை எதிர்க்கிறேன். ஆனால் என் சிற்றறிவில் தோன்றும் இன்னோர் மாற்றுக்கருத்து என்னன்னா, "வருடங்கள் கூடக்கூட விலைவாசி ஏறத்தானே செய்யும்? அநியாயமா ஏறுனா தான் தப்பு. 2001 ல இருந்த பால் விலையே இப்பவும் இருக்குமா என்ன?"
உங்களுக்கு என்ன தான்யா வேணும் போராளிகளே?
டிஸ்கி - இது அரசு ஆதரவுப் பதிவல்ல. நெட் போராளிகள் எதிர்ப்புப் பதிவு.
- எஸ்கா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக