ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

புதுக் கேள்வி

2014 ஆகஸ்ட் 9 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

டி.வி பார்க்கும் போது, சேனல் மாற்றும் போது, சினிமா பார்க்கையில் நாம கெத்தா "சினி மினி", "கிசு கிசு" மேட்டர்களையெல்லாம் அப்பப்போ எடுத்து விட்டா நம்ம பேமிலி மெம்பர்ஸ் பெருமையா "அப்படியா" என்று கேட்டுக்கொள்வார்கள். எதிர் கேள்வி கேட்க மாட்டார்கள். 

உதா 1 - "முன்பே வா, என் அன்பே வா" பாடல் முதலில் "அன்பே வா, என் முன்பே வா" என்று தான் எழுதப்பட்டிருந்தது. ஆனால் வார்த்தையை மாற்றிப்போட்டால் கொஞ்சம் பெட்டர் ஃபீலிங் கிடைக்கும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னதால் வாலி ஓ.கே சொல்லி மாற்றிவிட்டார் (நன்றி - "நினைவு நாடாக்கள்" - வாலி) 

உதா 2 - "லகான்" படத்தில் கிரவுண்டில் மேட்ச் நடக்கையில் அவர்கள் ஓடுவது, மண் தரையில் குதிப்பது, பேட் சத்தம் போன்றவை ஒரு க்ளோஸ்டு ஸ்டுடியோவுக்குள் மண் தரை உருவாக்கப்பட்டு அஸிஸ்டெண்டுகள் எல்லாவற்றையும் செய்ய சவுண்ட் என்ஜினியரால் ரெக்கார்டு செய்யப்பட்ட சத்தங்கள் (நன்றி - "சினிமா" - செல்லா) அவற்றை உருவாக்குவதற்கு மட்டும் 45 நாட்கள் ஆனதாம். 

ஆனா, அந்த கெத்தெல்லாம் ஒரு காலம். எனக்கு கவுன்டர் கொடுப்பதில் தங்கமணி கில்லாடி. எதிர்பார்க்காத (அதாவது எனக்கு பதில் தெரியாத) ஒரு கேள்வியை கேட்டு விட்டு போய்விடுவார். மீ "ங்ஙே".. 

"மின்சார கனவு" படத்தில் பிரபு தேவாவுக்கு பின்னணி குரல், அப்போது டப்பிங் ஆர்டிஸ்டாகவும் சின்னச் சின்ன வேடத்திலும் நடித்துக்கொண்டிருந்த நம்ம நடிகர் "விக்ரம்" என்று சொன்னேன். காதலன்-ல கூட அப்படித்தான் என்றும் சொன்னேன். 

அவுக கேட்டாக... "ஏன் பிரபுதேவாவுக்கு விக்ரம் டப்பிங் பேசணும்? பிரபுதேவா தான் பல படங்கள்-ல சொந்தக் குரல்-ல பேசியிருக்காருல்ல. அப்புறம் ஏன்?" 

தெரியலையேம்மா... தெரியலையே.... 

ஏதோ ஒரு விளம்பரத்தில் கஜோலிடம் ஒரு குட்டிப்பையன் கேட்ட கேள்விக்கு கஷ்டப் பட்டு மறுநாள் அவர் ப்ரிப்பேர் செய்து கெத்தாக போய் உட்கார்ந்தால் அந்தப் பையன் புதுக்கேள்வி கேட்பான். நினைவிருக்கிறதா?

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக