சனி, 8 ஆகஸ்ட், 2020

மிருதன் பார்ட் டூ

2016 ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஃபேஸ்புக்கில் எழுதியது. 

ஸோம்பி வைரஸால் தாக்குதலுக்குள்ளான ஜெயம் ரவி ஸோம்பி சென்னை செல்கிறது. சென்னையில் (அடையாளமாக ஆம்பா ஸ்கைவாக், ஜெமினி பிரிட்ஜ், சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற) பல இடங்களில் பல பேரைக் கடித்து வைக்கிறது. ஆயிரக்கணக்கான (பட்ஜெட்டைப் பொறுத்து இலட்சக் கணக்கான) மக்கள் பாதிக்கப் படுகிறார்கள். அவர்களும் பல பேரைக் கடிக்கிறார்கள், தரை டிக்கெட் எடுத்து ஸ்கிரீன் அருகில் உட்கார வேண்டாம். அதே நேரம் கோயமுத்தூரில் அவரது தங்கை உடம்பில் இருந்து ஆன்டி பயாடிக் கை கண்டுபிடிக்கிறார் அப்துல் கலாமுக்கு அடுத்த படியான இடத்தில் இருக்கும் ஒரே கிரேட் சயண்டிஸ்ட் அலையாஸ் டாக்டர் லக்ஷ்மி மேனன். அதை எடுத்துக் கொண்டு கூடவே ஒரு வேனில் ஒரு மஸில் பாடி போலீஸ் உதவியுடன் சென்னை செல்கிறார். ஹீரோ ஜெயம் ரவி ஸோம்பி ஆகி விட்டதால் படத்தில் வேறு வில்லன் கிடையாது. ஆகவே இந்த கேரக்டர் கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோ போல என்பதால், கோணைத்தமிழ் கணேஷ் வெங்கட்ராம், அட்வைஸ் சமுத்திரக்கனி போன்றவர்களில் ஒருத்தர் (கூடவே மைண்ட் வாய்ஸ் தம்பி ராமய்யா, வேன் டிரைவர் நமோ நாராயணன்) உடன் லக்ஷ்மி மேனன் ஊசி கொண்டு போக, ஆன் தி வே வில் அந்த போலீஸையும் ஆஜானுபாகுவாக ஒரு ஸோம்பி (பெசன்ட் நகர் ரவி?) கடித்து வைக்க, அங்கே ஒரு பைட் முடித்து, அவருக்கு ஆன்டி பயாடிக் ஊசி போட்டு அது சக்சஸ் ஆக "ரவியைக் காப்பாத்திடலாம்" என்ற மைண்ட் வாய்ஸூடன் சென்னை போகும் லக்ஷ்மி மேனனைப் பார்த்து எல்லாேரையும் கடித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி ஸ்லோ ஃப்ரீஸ் டெக்னாலஜியில் ஒரு ஸாங் பாடுகிறார். ஆனாலும் வைரஸ் பாதிப்பில் முக்கால் மைண்ட் அப்செட்டாகி இருக்கும் ஜெயம் ரவி, கட்டிப்பிடித்து ஊசி போடப் போகும் லக்ஷ்மி மேனனையும் கடித்து வைக்க.... ஜெயம் ரவி குணமாக.... லக்ஷ்மி மேனன் ஸோம்பி ஆக....

மிருதி பார்ட் 3 தொடரும்......
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக