திங்கள், 27 ஏப்ரல், 2020

அமேஸானைக் கிழித்த மலையாளிகள்

27.04.2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது 

எந்த விஷயத்தைச் செய்யும் போதும் நிதானித்து, யோசித்துச் செய்ய வேண்டும் என்பது பெரியோர் வாக்கு. அது பெரு நிறுவனங்களுக்கு நன்று பொருந்தும். உதாரணமாக ஒரு விளம்பரம் எடுக்கும் போது, அதன் கான்செப்ட் பல மாநிலங்களுக்கும் செட் ஆகுமா, யாரையேனும் புண்படுத்துகிறதா? ஒரு மொழியின் வார்த்தைகள் வேறு மொழியில் மொழிபெயர்க்கையில் செட் ஆகுமா (க்யா சல் ரஹா ஹை - தமிழில் வார்த்தைகள் கிடைக்காமல் Whats happening? என்றே) போன்றவற்றைக் கவனிப்பது அவசியம்.
.
சமீபத்தில் இவ்விஷயத்தில் ஒரு தவறு செய்து பல்பு வாங்கியிருக்கிறது "அமேஸான்" நிறுவனம். அது "We indians love helping" என்ற கான்செப்டில் பலரும் மற்றவருக்கு உதவுவது போல, ஒரு விளம்பரத்தை எடுத்து ஒளிபரப்பியது
.
"ஹைவேஸில் வழி கேட்பவருக்கு லிப்ட் கொடுக்கும் டூ வீலர்காரர்", "சேற்றில் மாட்டிய வேனை அதன் டிரைவர் தள்ள, சைக்கிளில் வந்து இறங்கித் தள்ளி விடும் மூவர்", "ஓடாத டூ வீலருக்கு முட்டுக் கொடுத்து பெட்ரோல் பங்க் வரை தள்ளி விடும் மற்றொரு டூ வீலர் காரர்", "எக்ஸாம் ஹாலில் இங்க் தீர்ந்து போக, கேட்காமலேயே பேனா தரும் பக்கத்து பென்ச் பையன்" என்று ஓடுகிறது விளம்பரம். அதாவது, அமேஸான் சொல்ல வருவது, தன் கஸ்டமர் சர்வீஸ் அத்தனை ஃப்ரெண்ட்லியாம். இருக்கட்டும்.
.
இதில் "நின்று போன பஸ்ஸை பலரும் இறங்கித் தள்ளுவது" என்ற கான்செப்ட் ஒன்றும் வருகிறது. அங்கே தான் அடி வாங்கியது அமேஸான். அப்படித் தள்ளப்பட்ட பஸ் கேரள அரசின் KSRTC பஸ். இதை ஒரு பெரிய ஹோர்டிங் ஆக வேறு செய்து, பெங்களூருவில் ஒரு முக்கியச் சந்திப்பில் வைத்திருக்கிறார்கள். இதைப் பார்த்த, பெங்களூருவில் வேலை பார்க்கும் பலரும், முக்கியமாக மலையாளிகள் கொதித்தெழுந்து அமேஸானை ட்விட்டரில் டேக் செய்து கிழி கிழி என்று கிழித்தெடுத்திருக்கிறார்கள். அதெப்படி எங்க ஊரு பஸ்ஸூ ஓடலைன்னு சொல்லலாம்? அதுவும் "நீ" எப்படி சொல்லலாம்? சொல்றதா இருந்தா லோக்கல் ஆளுக நாங்க சொல்லிக்குவோம், வெளியூர்க்காரன் (அமேஸான்) நீ என்ன சொல்றது?
.
அதிர்ந்து போன அமேஸான், அவர்களிடம் மன்னிப்பும் கேட்டு, அந்த ஹோர்டிங்கையும் நீக்கியிருக்கிறது. டி.வி யில் வந்த விளம்பரத்தை விட, அமேஸான் வைத்த ஹோர்டிங் தான் இவர்கள் கோபத்தைக் கிளப்பியிருக்கிறது.
.
என் டவுட்டு - நின்று போன பஸ்ஸை இறங்கித் தள்ளுவதில் "உதவி" கான்செப்ட் எங்கே வருகிறது? தள்ளும் ஒவ்வொருவரும் தன் வேலை நின்று போன கோவத்தில் காண்டாகி அல்லவா பஸ்ஸைத் தள்ளுவார்கள்? வேறு வழியில்லாமல் செய்வதாயிற்றே அது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக