சனி, 25 ஏப்ரல், 2020

ஸாரி விகடன்...........

24.ஏப்ரல்.2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 


இந்த வார "வருகிறான் வந்தியத்தேவன்" கவர் ஸ்டோரியில் //படத்தின் வியாபாரம் குறித்த நம்பிக்கையைப் ‘பாகுபலி’ உருவாக்கியது என்றால், ‘பல நட்சத்திரங்களை வைத்துப் படத்தை உருவாக்க முடியும்’ என்ற நம்பிக்கையை மணிரத்னத்துக்கு அளித்தது ‘செக்கச்சிவந்த வானம்.’ // - என்று எழுதியிருக்கிறது விகடன்.

அருமை. அப்போ இதற்கு முன்னால் மணிரத்னம் மல்டி ஸ்டார் காஸ்டிங் வைத்துப் படங்கள் செய்ததே இல்லையா? 

அக்னி நட்சத்திரம் மல்டி ஸ்டாரர் இல்லையா? தளபதி கூட - அரவிந்த் சுவாமி புது ஹீரோவாக இருந்தாலும், ஜெய்சங்கர் பெரிய ஹீரோ தானே? அப்புறம் ஹீரோ ரஜினி (ஸ்ரீவித்யா, ஷோபனா வெல்லாம் கூட சேர்க்காமல்), ஆய்த எழுத்து? ஹீரோக்கள் மட்டுமே மூன்று பேர், ப்ளஸ் இயக்குனர் இமயம் பாரதிராஜா...... கடல்? அரவிந்த் சுவாமி, அர்ஜூன், அது போக புது ஹீரோ கெளதம் கார்த்திக்.

இது போக திருடா, திருடா முழுக்க டபுள் ஹீரோ சப்ஜெக்ட், குரு? மாதவன் பாதி படம் வருவார். கிட்டத்தட்ட டபுள் ஹீரோ, ராவணன்? விக்ரம், ப்ரத்வி, கார்த்திக், ஐஸ்........... அவரது முதல் தமிழ்ப்படமான "பகல் நிலவு" கூட அப்போதே மல்டி ஸ்டாரர் தானே? முரளி, சரத் பாபு, சத்யராஜ் - னு. என்னமோ அவர் இப்போ தான் முதன் முறையா மல்டி ஸ்டாரர் படம் எடுப்பது போல இப்படி ஒரு பாயிண்ட் எழுதியிருக்கிறார்கள். கட்டுரையை எழுதியவர் இளைஞரா இருக்கலாம். அவர் மணிரத்னத்தின் சமீபத்திய சில படங்களை மட்டும் பார்த்திருக்கலாம் என்று குன்ஸாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

//பல நட்சத்திரங்களை வைத்துப் படத்தை உருவாக்க முடியும்’ என்ற நம்பிக்கையை மணிரத்னத்துக்கு அளித்தது ‘// இதையும் பக்கத்தில் இருந்து பார்த்தது போலவே சொல்லியிருக்கிறார்கள்.. (யப்பா சாமி, முடியலப்பா உங்க டேபிள் ஜர்னலிசம். உக்காந்த மேனிக்கி இவங்களே முடிவு பண்ணிக்குவாங்க போல).

ஆனால் ஒரு கவர் ஸ்டோரியிலேயே இப்படி இருக்கலாமா? நானாவது ஒரு பாயிண்ட் தான் எடுத்தேன். பொன்னியின் செல்வன் கதை எனக்கு முழுதாகத் தெரியாது. அதனால் அதை விட்டு விட்டேன். கதை தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னார் "பொன்னியின் செல்வனுக்கு அவங்க கொடுத்திருந்த கதை சுருக்கத்தை படிச்சிங்களா? அவங்க சொன்னது மட்டும் கதையில்லை " ன்னு. மேலும் அருமை.

எல்லாருக்கும் தெரிந்த ஒரு பிரபல கதையை, எல்லாருக்கும் தெரிந்த ஒரு பிரபல இயக்குனர் எடுக்கும் போது அது பற்றிய கட்டுரையில் எவ்வளவு உள் விவரங்கள் தர வேண்டும்? இன்றைக்கு பேஸ்புக்கில் மைக்ரோ ப்ளாக்கிங் எழுதுகிறவர்கள் கூட எத்தனை சிறந்த உள்விபரங்களுடன் கட்டுரைகள் எழுதுகிறார்கள்?

அக் கட்டுரையில் தயாரிப்பு "லைகா" மற்றும் "சில நடிகர்கள் முடிவான" விபரங்கள் தவிர......

//களமிறங்கியிருக்கிறார் மணிரத்னம்.
கமல்ஹாசனும் ‘பொன்னியின் செல்வ’னைத் திரைப்படமாக்க விரும்பினார்.
எம்.ஜி.ஆர் ‘பொன்னியின் செல்வன்’ திரைக்கதையை இயக்குநர் மகேந்திரனிடம். எழுதச் சொன்னது
நடிக்கவைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடந்துவருகின்றன.
ஒரு பாகம் வெளிவர, குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம்
உதவி இயக்குநர்களை வரலாற்றுத் தரவுகளைத் திரட்டச் சொல்லியிருக்கிறார்
பட்ஜெட், 400 முதல் 500 கோடி ரூபாய் வரை ஆகும் என்று தெரிவிக்கிறார்கள்//

போன்றவையெல்லாம் சினிமா பார்க்கும் எல்லாருக்கும் தெரிந்த டெம்ப்ளேட் வரிகள். இவற்றை படத்தின் போஸ்டரை வைத்தே சினிமா ரசிகனான யார் வேண்டுமானாலும் கெஸ் செய்ய முடியும். விகடனில் இப்படிப் பட்ட மேலோட்டமான, அழுத்தமற்ற கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவது விகடனின் வாசகன், (ஒரு காலத்தில்) விகடனின் ரசிகன், விகடனில் துணுக்குகள் எழுதுபவன் என்ற முறையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

டிஜிட்டலுக்கு மாறி வரும் உலகத்தில், ஏற்கனவே விற்பனை சரிவு, இளம் வாசகர்களை ஈர்க்க முடியாதது என பல பத்திரிகைகள் தடுமாறும் நேரத்தில் விகடன் கன்டென்ட் விடயத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

வருத்தத்துடன்
....

- எஸ்கா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக