செவ்வாய், 28 ஏப்ரல், 2020

என்னமோ? சொல்லணும்னு தோணுச்சு.

29 ஏப்ரல் 2017 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

ஒரு கிரியேட்டராக, ரைட்டராக நான் ஒரு முழுச் சோம்பேறி. மேலும் குடும்பம், பணம் என்று வரும்போது எனக்கு "பெயர்" முக்கியமில்லை. நிறைய எழுதுங்கள் என்று சொல்லும் நண்பர்களிடம் நான் சொல்ல நினைக்கும பதில் "இறந்த பிறகு வரும் புகழில் எனக்கு நம்பிக்கையில்லை" எழுத்தை விட குடும்பம் முக்கியம் என்று குடும்பத்திற்காக ஓடும் குதிரை நான்.

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், வெறும் ஜோக்ஸ், ஒரு பக்க, பத்து செகண்ட் கதைகள், சில கட்டுரைகள் என்ற அளவைத் தாண்டி நல்ல இடத்தைப் பிடித்திருக்க முடியும் தோன்றுவது உண்டு. (கிரியேட்டரா? நீயா? ரைட்டரா? நீயா? என்பவர்கள் மன்னிக்க)

அப்படிப்பட்ட எனக்கு, கடந்த மூன்றாண்டுகளாக ஒவ்வொரு முறை பாகுபலி (கிரியேட்டிவ் சைடு) பற்றிய செய்திகள் படிக்கும் போதும், அதன் மேக்கிங் வீடியோக்கள் பார்க்கும் போதும் கைகளில் நாக்குப்பூச்சி முளைக்கும், வெறி ஏறும். அதன் ஹேங் ஓவர் இரண்டு நாள் இருக்கும். அப்புறம் புஸ்ஸ்...

ஐ லவ் ராஜமௌலி அண்ட் ஹிஸ் ஸ்மைல். "நீயெல்லாம் எதுக்குடா இருக்கே? வேஸ்ட்டு. வாழ்க்கையில எதையும் சாதிக்காம ஒவ்வொரு நாளா வேஸ்ட் பண்றியே" என்று அவர் என்னைப் பார்த்துக் கேட்பது போல இருக்கும்.

என்னமோ? சொல்லணும்னு தோணுச்சு.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக