வியாழன், 9 ஏப்ரல், 2020

"இப்படிக்கு N.கல்யாணி" - "இனிஷியல் ரொம்ப முக்கியம்"

கொரோனா வைரஸ்க்கும் தமிழ்ல பேரு வெச்சிட்டாங்களாம். இப்ப அது பேரு...
"முள்முடிநுண்ணி.!"
----------------------------------------------------------------



"இப்படிக்கு N.கல்யாணி" - "இனிஷியல் ரொம்ப முக்கியம்"
நாம யாரு? "சமோசா"வுக்கு - "புடைச்சி", "லட்டு"க்கு "கோளினி" ன்னு பேரு வச்சவனுகளாச்சே. அந்த நேரத்துல வேற எதையாவது புதுசா கண்டுபுடிக்கலாம்ல? செய்ய மாட்டோம்.
கொரோனாவுக்கு மருந்துலாம் கண்டுபுடிக்க மாட்டோம். அந்த அளவுக்குப் புத்தியெல்லாம் கிடையாது. மாத்தி யோசிக்க மாட்டோம். புதுசா எதையாவது கண்டு புடிக்க மாட்டோம். அட் லீஸ்ட் வீட்ல இருடான்னு கவர்மெண்ட் சொன்னா அதைக் கூட கேட்க மாட்டோம். நடுரோட்ல புல்லட்ல உக்காந்து செல்ஃபி போடுவோம் (யாரது நெ.சே வா ன்னு கேட்கக் கூடாது)
எவனோ கண்டுபுடிச்ச எல்லாத்துக்கும் வேலை மெனக்கெட்டு தமிழ்ல பேர் வைப்போம். இப்ப இதனால என்ன யூஸூ. ஒரு வெங்காயமும் கிடையாது.
ஒரு நேஷனல் லெவல் எஜூகேஷன் கான்ஃபரன்ஸ்ல ஒரு இன்டர்நேஷனல் டிரெயினர் ஒரு கேள்வி கேட்டாராம். "கடந்த 25 வருஷத்துல இந்தியாவுல இருந்து அறிவியலில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய விஷயம் சொல்லுங்க" ன்னாரு. பதிலில்லை. "அப்போ இவ்வளவு நாளா சயின்ஸ் டீச்சர்ஸ் என்ன பண்றாங்க, அவங்களுடைய பங்கு என்ன?" ன்னு அடுத்து ஒரு கேள்வி கேட்டாராம்.
"ராட்சசி"ல ஜோதிகா கேரக்டர் ஒரு வாத்தியார்கிட்ட "ஏற்கனவே, யாரோ செய்த எக்ஸ்பெரிமன்ட்ஸை திரும்ப செய்ய வைக்கவே உங்களால முடியல, அப்ப நாட்டுக்கு புதிய கண்டுபிடிப்புகளை எப்படி செய்ய வைக்கப் போறீங்க?" ன்னு கேட்கும். அதுதான் ஞாபகத்துக்கு வருது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக