புதன், 8 ஜனவரி, 2020

ட்விஸ்ட் என்னான்னு தெரியாம படம் பாக்குறது ரொம்ப முக்கியம் சண்முகம்


18 நவம்பர் 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது 

"அசுரன்" ப்ரைம்ல வந்ததும் நிதானமா ஒரு அமைதியான நேரத்தைத் தேர்ந்தெடுத்து ஆரம்பத்துல இருந்து முழுசா பாக்கணும்னு ப்ளான் பண்ணி வச்சிருந்தேன். இதுனாலயே அசுரன் குறித்த விமர்சனங்களைக் கூட முழுசா படிக்கல. ஆனாலும் கதை மேலோட்டமா தெரிஞ்சுடுச்சுன்னு வைங்க. மேலும் வன்முறை அதிகம்னு பலரும் சொன்னதால ஒரு சின்ன ஜெர்க்கும் இருந்தது. நாம கொஞ்சம் ஊன்றிப் போய் படம் பாக்குற டைப். புத்தகங்களும் திரைப்படங்களும் மற்றோர் வாழ்க்கையை வாழ உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் என உறுதியாக நம்புபவன். அம்மா சென்டிமெண்ட் காட்சிகளுக்கெல்லாம் கண்ணுல ஜலம் வச்சுப்பன். அப்படி, பிதாமகன் பார்க்கும் போது அதன் க்ளைமாக்ஸ் அவ்ளோ ஷாக்கிங்கா இருந்தது.

ஆகவே தான் அசுரனுக்கு அப்படி ஒரு ப்ரீ ப்ளானிங். ஆனா, "உடம்பு பூரா எண்ணெய தடவிகிட்டு உருண்டு பொரண்டாலும் ஒட்ற மண்ணுதான் ஒட்டும்" னு எங்கம்மா சொல்வாங்க. என் நேரக் கொடுமை என்னன்னா போனவாரம் தங்கமணி கிட்ட சப்பாத்தி கேட்டேன். "செஞ்சு தரேன். குருமா வெளிய வாங்கியாரியா?" ன்னாங்க. சரின்னு போய் ஒரு ஹோட்டல்ல "இந்தா ரெடிண்ணே, இந்தா ரெடிண்ணே"ன்னு இருபது நிமிஷம் மாட்டிகிட்டேன். அங்க டிவில அசுரன் - சிவசாமி பிளாஷ் பேக் கை முழுசா பாத்துத் தொலைச்சுட்டேன். ஓடவும் முடியல. ஒளியவும் முடியல.

"சாகற நாள் தெரிஞ்சுட்டா வாழற நாள் நரகமாயிடும்"னு சொல்ற மாதிரி, கதை தெரிஞ்சதும் "அசுரன்" முதல்ல இருந்து பார்க்கும் போது முன்ன எதிர்பார்த்திருந்த அந்த ஃபீல் இல்ல. "எப்டி இருந்த சிவசாமி இப்டி ஆயிட்டாரே"ன்னு ஆரம்பத்துலயே கம்பேரிசன் ஆரம்பிச்சுடுச்சு. என்னமோ போங்க. ஒரு படம் உருப்படியா பாக்க உடுறீங்களாடா...
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக