வியாழன், 9 ஜனவரி, 2020

தமிழ்நாட்டைத் தமிழன் தான் ஆள வேண்டுமா?

9 ஜனவரி 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

தமிழ்நாட்டைத் தமிழன் தான் ஆள வேண்டும் என்று ஆங்காங்கு குரல்கள் ஒலிக்கத்துவங்கி இருக்கின்றன. சமீபத்தில் திரு சைமான் அவர்கள். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்றால் "யார் தமிழன்?" என்பது மிகப் பெரிய கேள்வி.

வேற்று மொழியான மராத்தி பேசும் ரஜினிக்கும், வந்தேறி என்று நீங்கள் தூற்றும் பிராமணரான லதா ரஜினிக்கும் பிறந்து, தனித்தனியாக வேறு வேறு இன, மொழி மக்களைத் திருமணம் செய்த பிள்ளைகளுக்குத் தமிழ்நாட்டில் பிறந்த பிறந்த மூன்றாம் தலை முறைப் பிள்ளைகள் யார்? தமிழனா? இல்லையா?

உங்க வசதிக்கு, அரசியலுக்கு மொழிவாரி மாநிலங்கள் பிரிச்சா, பரம்பரை பரம்பரையா இங்கயே பல நூறு ஆண்டுகளா இங்கேயே வாழுறவன் அங்கே போகணுமா? லூஸூத்தனமா இருக்கு. "பொது இடத்தில் புகை பிடித்தால் 15 நாள் ஜெயில்" என்று இன்று சட்டம் போட்டால் நேற்று சாதாரணமாக தம் அடித்தவன் எல்லாம் இன்று குற்றவாளி. அந்த மாதிரி அபத்தமா இருக்கு நீங்க பேசுறதெல்லாம். அவனுங்க தான் ஆதாயத்துக்காக அரசியல் பண்றானுங்க. அதை நம்பி பிழைப்பைக் கெடுத்துக் கொண்டு...

தமிழ்நாட்டில் தமிழன் தான் இருக்க வேண்டும் என்றால்....... மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் படும் முன்பு பலப்பல தலைமுறைகளாக தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும், வாழும்........ முஸ்லிம் ஆகப் பிறந்த ஒரே காரணத்தினால் உருது பேசும், ஆந்திராவை பார்த்தே இராத ஆனால் தெலுகு பேசும், எழுத்து வடிவமே இல்லாத சௌராஷ்ட்ரா பாஷை பேசும், மலையாளத்தை பேச மட்டுமே தெரிந்த, தமிழ் கலந்த கன்னடம் பேசும், என்ன பாஷை என்றே தெரியாத குறவர் பாஷை பேசும், மற்றும் ஹிந்தி, பெங்காலி பேசும் எல்லாரையும் சுட்டுக் கொன்று விடுங்கள்.

பரம்பரையில் எங்கேனும் ஒரு கண்ணியில் வேறு மொழி பேசும் இணையைத் திருமணம் செய்திருந்தால் அவர்களும் லிஸ்டில் இருந்து எடுத்துக் கொன்று விடுங்கள்.

ஏழு கோடியில் மீதி ஒரு கோடி தமிழன் கூட மிஞ்ச மாட்டான். அவர்களை அவர்களே ஆண்டு கொள்ளுங்கள்.

இன்றைக்கு மொழியை வைத்துப் பிரிப்பீர்கள். சரின்னு பிரிச்சா, அந்த மீதி இருக்கும் ஆட்கள் மத வாரியாகப் பிரிவீர்கள். சரின்னு அதையும் பிரிச்சா ஆதிக்க சாதி, அழுத்தப்பட்ட சாதின்னு பிரிப்பீர்கள். என்னடா உங்க பிரச்சினை?
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக